Monday, May 03, 2010

ஏ.ஆர். ரஹ்மானுடன் நானும் சில மணித்துளி மனப் போராட்டமும்

சூபிஸம் பற்றிய ஆர்வமும் நல்ல அபிப்ராயமும் என்னிடத்தில் உண்டு.
ஒருமுறை டெல்லி சென்றிருந்த சமயம் ஹஜரத் நிஜாமுத்தீன் தர்காவுக்குப்
பக்கத்தில் உள்ள பள்ளி வாச‌லில் அதிகாலைத் தொழுகையை
நிறைவேற்றிவிட்டு அமர்ந்திருந்தேன். அப்பொழுது சுமார் ஐந்தரை அடி உயர,
கழுத்தில் சுருள் கேசம் புரள ஒருவர் பள்ளிக்குள் நுழைவதைக் கண்டேன்.
எங்கேயோ பார்த்த ஞாபகம் என்றெண்ணி அருகில் சென்றேன்.

அங்கே அண்ணனை அழகியக் கண்ணனை ஏ.ஆர்.ரஹ்மானைக் கண்டேன்.

லவ்லி பெர்சனாலிட்டி. 'நீங்க ரஹ்மான்தானே' என்றதற்கு
ஆச்சர்யத்தோடும் சிறிது புன்னகையோடும் ஆமோதித்தார்.
ஆச்சர்யத்திற்குக் காரணம் ஆஸ்காரில் அவரால் மொழியப்பட்ட தமிழ்.
ஆம் அந்த சூழ‌லில் நான் மட்டும்தான் 'தமிழன்'.


'நீங்க எப்படி இங்க, டெல்லியில் ?!' என்றேன்.

'வந்தே மாதரம் ஷூட்டிங் விஷயமா டெல்லி வந்தேன், அதோடு ஹஜரத்
நிஜாமுத்தீன் தர்கா வந்தேன்' என்ற பின் என்னைப் பற்றியும் கொஞ்சம்
விசாரித்து விட்டுத் தொழுவதற்காக பள்ளிக்குள் சென்று விட்டார்.

எனக்கோ சந்தோஷமும் ரஹ்மான் வந்த விஷயத்தை யாரிடம் சொல்வது
என்ற தவிப்பும், ஏனென்றால் அவரைப் பற்றித் தெரிந்தவர் அப்போது அங்கு
யாரும் இல்லை, ஒரிவருவரிடம் சொல்லியும் பார்த்தேன், ம்ஹூம்.

பள்ளியின் ஒரு மூலையில் போய் அமர்ந்து கொண்டு அவர் தொழுவதை
ரசித்தேன். தொழுது விட்டு சிறிது நேரம் திக்ரு தியானத்தில் அமர்ந்திருந்தார்.
எனக்குள் ஒரு போராட்டம் துவங்கியது.


* * * * *


சிறு வயதிலிருந்தே இசை,சினிமா ஆசை தலை தூக்கி வந்திருக்கிறது.
மிக நன்றாகப் பாடுவதால் அவ்வப்போது பலரும் சொல்லியிருக்கிறார்கள்,
சினிமாவில் பாடச் சொல்லி. இது நல்ல சந்தர்ப்பம், இதோ ரஹ்மானே
முன்னால் இருக்கிறார். கோல்டன் சான்ஸ். மிஸ் பண்ணாதே. இந்த வாய்ப்பு
எப்போதும் கிட்டாது.‍‍ - இது ஒரு மனசு.


'வேணாம், விட்டுரு, இறை வழியில் ஈடுபட ஆசைப்பட்டு, மீண்டும்
உலக ஆசைகளில் சிக்கி வீணாப் போயிடாதே' என்று அறிவுறுத்தியது
இன்னொரு மனசு.


இரண்டுக்கும் மத்தியில் போராடிக் கொண்டிருக்கும் போது ரஹ்மான் எழுவது
தெரிந்தது. எனக்குள் இறை மனசுவின் கை ஓங்கியதால் அவரை விட்டுத்
தூரம் செல்ல முடிவெடுத்து நகரும் போது கவனித்தேன்,

அவர் என்னைத் தேடுவதை...


* * * * *


என்னைத் தேடுவது தெரிந்தவுடன் அவரை நோக்கி கையசைத்தேன்.
என்னருகில் அவரே வந்து (எளிமை) 'வந்தே மாதரம்' விஷயமாக
நிறைய வேலைகள் இருப்பதால் அவசரமாகக் கிளம்புகிறேன் என்றவாறு
விடை பெற்று சென்று விட்டார். நான் புன்னகையுடன் விடை கொடுத்து
விட்டு அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேனே ஒழிய வாசல்
வரை சென்று வழியனுப்பி வைக்க மறந்து விட்டேனா அல்லது இறை
மனசு மறுத்து விட்டதா என்று தெரியவில்லை.

(இன்று வரை அந்த வருத்தம் இருக்கிறது).


அவரை ஒரு சகாவாக‌ எண்ணாமல் கலையாகக் கொண்டாடப்படும்
கலாச்சார சீர்கேட்டில் உழலும் ஒரு அன்னியனாக நினைத்து விலகியது
அன்றிருந்த என்னுடைய தவறான அணுகுமுறை.

உண்மையில் ரஹ்மான் ஈஸ் க்ரேட்.

இன்று வரை சினிமாத் துறையில் இருப்பவர்களில் தனது
மனிதம்/புனிதம்/கற்பு/ஒழுக்கம் இத்யாதிகள் கெடாது காத்துக்
கொண்டவர்களில் ரஹ்மான் ஒரு துருவ நட்சத்திரம்.

இசை பட வாழும் ரஹ்மானே " வாழிய நின் புகழும் கொற்றமும் ".

4 comments:

manjoorraja said...

தொடரட்டும். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அரபுத்தமிழன் said...

நன்றி ராசா காத்திருக்கவும்.

Unknown said...

Interesting.
அண்ணே சூப்பர்ணே !
அப்புறம் என்ன பேசினீங்களா ?
அவரை விட்டு ஓடி ஒளிந்து கொண்டேன்
என்று மட்டும் எழுதுனீங்க ? கிர்ர்ர்... :)

அரபுத்தமிழன் said...

நன்றி மான்க்ஸ்,
நாளை வரை வெயிட்டிங் :‍-)

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)