Saturday, April 17, 2021

அல் குர்ஆன்

 "வன்முறையற்ற சமூகம் மலர்ந்து

நன்முறையில் வாழ்வதற்கு வழிகாட்ட வந்த‌

நான்மறைகள் தந்த வல்ல நாயனின் இறுதி

வான்மறைதான் இந்தத் திருக்குர்ஆன்"


"சட்ட விளக்கங்களும் 

திட்ட நுணுக்கங்களும் நிறைந்த 

பெட்டகம் எனினும் இது ஒரு

சட்டப் புத்தகமல்ல‌"


"இது போன்ற ஒரு அத்தியாயம்

இல்லையில்லை ஒரு வாக்கியம் 

அமைக்குமாறு அரபிக் கவிஞர்களுக்கு

அறைகூவல் விடுத்த அல்குர்ஆன் 

ஒரு கவிதைப் புத்தகமல்ல‌"


"வானம் பூமி அண்ட சராசரங்கள் மற்றும்

நிற்கும் பறக்கும் நடக்கும் ஊர்ந்தும் 

நீந்தியும் செல்லும் அனைத்து உயிர்களின்

படைப்பு பற்றி பறை சாற்றும் இது

விஞ்ஞானப் புத்தகமல்ல‌"


"முன்பே வாழ்ந்து மறைந்த‌

முன்னோர்களின் முடிவையும்

தூதர்களின் பணியையும் 

அவர்களின் துணிவையும்

சொல்லும் இம் மறை ஒரு

வரலாற்றுப் புத்தகமுமல்ல‌"


"பைத்தியத்திற்கும் வைத்தியம்

செய்யும் வார்த்தைகள் கொண்ட 

நோயையும் பேயையும் ஓட விரட்டும்

அற்புதங்கள் நிறைந்த அல்குர்ஆன்

மருத்துவப் புத்தகமுமல்ல‌"


"மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும்

புனிதப் படுத்திய நல்ல வம்சங்களாக 

இம்மையிலும் மறுமையிலும்

செம்மையாக வாழ்ந்து ஜெயிக்க‌

நன்மைகள் பெருக்கி திண்மைகள் போக்கி

நல்வாழ்வு நாம் காண நாயன் தந்த‌

திருமறைதான் அருள்மறை அல் குர்ஆன்"


"ஓதுக என்று உரத்துச் சொல்லி

ஒழுக்கம் போதிக்கும் அல்குர்ஆன்

மாக்களை மக்களாக்க 

மாட்டிலிருந்து ஆரம்பித்து 

மனிதர்களில் முடிகின்றன அம்

மாமறையின் அத்தியாயங்கள்"


"வஹீயின் பளுவை ..

மலைகூட‌த் தாங்காது 

என்கின்ற குர்ஆனை 

மனிதத் தலை வழியே 

நெஞ்சத்தில் இறக்கி வைத்த 

இறைவன் பரிசுத்தமானவன்"


பெண் மனசு ஆழமுன்னு...

                      மகளிர் தினக் கவிதை

                      =====================


பெண்கள் படும் துயரத்தை ஒரு பெண்தான் 
சரியாகச் சொல்ல முடியும்

பெண்களைப் பற்றி பொதுவாகப் பாடச் 
சொல்லியிருந்தால் ஒரு புகழ்ப்பா பாடியிருக்கலாம்
ஆனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் பற்றி 
பாடச் சொன்னதால், அவர்தம் கஷ்ட நஷ்டங்களை
குவிலென்ஸ் மூலம் பார்த்த பறவைப் பார்வையிது

இதில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் பொருந்தாது
எனினும் ஏதாவது ஒன்று எல்லோருக்கும் பொருந்தும்

வீடு, மனைவி, இரவு இம்மூன்றும் அமைதி தருபவை 
‌என்பது திருமறையின் அருள் வாக்கு

நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள் என்றும் 
நபியின் மனைவிகளைப் பார்த்து குர் ஆன் கூறுகிறது.

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் 
மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, 
தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் 
உறுதி குலையாமல் இருப்பவள் பெண்

வீட்டுக்குள் கிடைக்காத நிம்மதி 
வெளியில் கிடைக்காது என்ற பொருள்பட
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன் என்று குறளும் சொல்கிறது 

மறைகள் சொல்வது போல மாதர் தம்
மாளிகைக்குள் மறைந்திருந்தாலே
மானிடருக்குள் வம்புமில்லை தும்புமில்லை

வீட்டுக்குள் இருப்போருக்கு 
வேலைகள் பல இருந்தாலும்
வெட்டியாய் சில‌ பொழுதுகள் 
வெறுமனே கழியத்தான் செய்கின்றன

தன்னிஷ்ட நேரத்தில் வேலை செய்யலாம் 
படுத்துக்கொண்டே அலைபேசியில் தொலை பேசலாம் 
வீடு தேடி வரும் வென்டார்ஸிடம் விலை பேசலாம் 
அரட்டையும் அடிக்கலாம்  குறட்டையும் விடலாம் 
தலை சாய்த்து ஓய்வெடுக்கலாம் இல்லை
கலைகள் பல பார்த்து மகிழவும் செய்யலாம்

தெரியாத தேவதைகளை விட அருகில் இருக்கும் 
தெரிந்த பிசாசுகளே மேல் என்று சொல்வது போல்
மாமியாரும் நார்த்தனாவும் மகளிர் மட்டும் Danger Zone  தான்
எனினும் வரம்பு மீறப்படாது வசந்தங்களே மேலோங்கி நிற்கும்

ஆனால் ஒரு பெண் வெளியில் வந்து விட்டாலோ
அண்ட சராசரமே ஆட‌ ஆரம்பித்து விடும்
கெளம்பும் போதே கெரகம் பிடித்து விடும்

ROAD CROSSING கும் EVE TEASING கும்
தொடுதலும் உடல் படுதலும்
மோத வந்து விலகிச் சென்ற வாகன 
ஓட்டி திரும்பி நின்று திட்டுதலும் 
வரிந்து கட்டும் வரிசையாக

பஸ்ஸில் பயணமென்றால் 
பர்ஸை நினைத்து படபடப்பு
ரயிலிலே கழுத்துச் சங்கிலியை 
ரகசியமாய்த் தொட்டுப் பார்த்து பரிதவிப்பு

ஆட்டோவில் சென்றால் ஆழ் மனதில் பயம்
ரோட்டோரம் செல்லும் போது அடிக்கடி பயம்

வெயில் சுட்டதும் மேனி கருக்குமோ
காற்று பட்டதும் தலைமுடி கலையுமோ
ஆடை விலகுமோ மேக்கப் தொலையுமோ
மதிய உணவை மறந்தது சரியோ
மேட்சுக்கு மேட்ச் அணிந்தது சரியோ
காட்சிக்கு ஏற்ற அணிகலன் சரியோ
சேலைக்கு ஏற்ற‌ செருப்பு நிறம் சரியோ

இப்படி எண்ணற்ற நினைவலைகள் 
வந்து தொலையும் வீதிகளில் பிச்சைக்காரர் தொல்லை
பஸ்ஸின் நெரிசலிலோ பாலியல் தொல்லை
அலுவலகம் வந்தால் அரசியல் தொல்லை
மாதாந்திர வலியை மறைக்கும் தொல்லை
மாமியார் பேச்சை நினைக்கும் தொல்லை

பசியால் குழந்தை துடிக்குதோ - இல்லை
பால் குடித்த பின் தூங்குதோ
ஸ்கூல் போகும் பிள்ளை 
ஒழுங்காய்ப் படிக்குதோ -  இல்லை 
படிப்பது போல நடிக்குதோ

அலுவலகம் சென்ற புருஷன் 
யாருடனும் போடக்கூடாதே கடலை
என்ற கவலையும் சேர்ந்து
இது போன்ற இன்னும் பல கவலைகளில் 
மூழ்கும் மனம் எந்த வேலையிலும் லயிப்பதில்லை

காலையில் பூத்த புது மலர் போல
வேலைக்குச் சென்று விட்டு

மாலையில் வீடு திரும்பிய பின்பும் வீட்டு
வேலைகள் செய்யும் பெண்களுக்கு

வீட்டில் இருக்கும் பெணக்ளை விட 
வேலையும் மன உளைச்சலும் அதிகமே 
என்று முடிவுக்கு வந்தாலும்

சிலருக்கு வீடு நரகமாய் இருந்தால் அவர்
வெளியில் செல்வது இதமாய் இருக்கும் அப்படி 
இல்லையென்றால் வீட்டில் இருப்பதே சுகம்


Wednesday, July 05, 2017

போகுதே ... போகுதே ...



தனக்கென்று எதுவுமில்லாததாலோ ...
அல்லது
நிரந்தரமாக விட்டுச் செல்லாததாலோ ...

ம்மை விட்டு விரைந்தோடும்
எல்லாவற்றையும் ரசிக்கிறது மனசு

... இரயில் பயணங்களில் ...


உயிர் பிரியும் போதும் ..
இப்படித்தான் இருக்குமென‌
எப்படிச் சொல்ல முடியும்

கண்டதையும் நேசிக்கிறோம்
கொண்டதும் ஏராளம்

நம்மை விட்டுப் பிரிகின்றவற்றை
நேசிப்பதால் வலியும் வேதனையும்
தவிர்க்க முடியாது ...

                   ...என்றென்றும் ...

கூடவே இருப்பது எது என யோசி
மனமே ...  அதை மட்டும் நேசி

*        *         *

Tuesday, June 27, 2017

ஆயுதம் ஏந்தும் கால்நடைகள்



பசியில்லாவிடினும் ...

வெறுமனே வேட்டையாடச் சொல்லி
வெறியூட்டப்பட்ட விலங்குகள்
வெளியில் விடப்பட்டுள்ளன
விலங்கினக் காப்பகத்திலிருந்து

கொடூர முகமும் கொடிய பற்களும்
கூரிய நகங்களும் கொண்டவை அவை
கூடவே ஆயுதங்களும் கொடுக்கப்பட்டு
கால்நடைகளுடன் கலந்துள்ளன
பசுத்தோல் போர்த்திய புலிகளாக

ஆடு மாடுகளும் மான்களும்
ஆயுதம் ஏந்தத் தடையிருப்பதால்
தம்மைத் தற்காத்துக் கொள்ள முடியாமல்
தவித்துச் சாகின்றன இரயில்களிலும் பயணங்களிலும்

இளம் கன்றொன்றின் மறைவைக்
கண்ட தினத்தில் கவலை கொண்ட
முகத்துடன் பள்ளி நோக்கி விரைகையில்
மூன்று வரிகள் மனதில் மின்னி மறைந்தன


" மாடுகள் வெட்டிய கத்திகளுக்கு
ஓய்வு வேண்டாம் இனி அவை
அந்த மாக்களை வெட்டட்டும் "


பதிவுலகில் பதிந்து பரப்பஎண்ணிய தருணம்
பள்ளியின் மூலையிலிருந்து நபிமொழியொன்று
படிக்கப்படும் சப்தம் வந்தது


" துஆ என்னும் பிரார்த்தனைதான்
இறைநம்பிக்கையாளனின் ஆயுதம் "


வாருங்கள் சகோதரர்களே துஆ என்னும்
ஆயுதத்தைக் கையிலெடுப்போம்

*                                   *                               *




Thursday, June 22, 2017

இரத்தம் கீறி எடுத்தல்

ஆரோக்கிய வாழ்வினைக் காப்பதற்கு லைஃப்பாயை விட இந்த பாய் சொல்லும்ஹிஜாமா’ மிகச் சிறந்தது. ஹிஜாமா என்ற அரபிச் சொல்லுக்கு, தமிழில்  ‘இரத்தம் கீறி எடுத்தல்’ என்றும் ஆங்கிலத்தில் CUPPING  என்றும்  சொல்லப் படுகிறதுCUPPING  என்பது கீறல் இல்லாமல் செய்யப்படுகிறது.  இது தசைப்பிடிப்பு அல்லது வாயுபிடிப்பு சரியாக்கச் செய்யப்படும் சீன மருத்துவ முறை. ஆனால் ஹிஜாமா என்பது அதுக்கும் மேலே.

CUPPING முறை மாதிரியே CUP கள் வைக்கப்பட்டு PULL செய்யப்படுகிறதுபிறகு உப்பிய பகுதியில் பிளேடால் கீறப்பட்டு மீண்டும் CUP வைத்து உறிஞ்சப்படுகிறது.






உடலுக்குள் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும், தேவையில்லாத, கழிவு இரத்தத்தை வெளியேற்றுவது. வலிகளுக்குக் காரணமான‌ கழிவு இரத்தமும் TOXINS ம் வெளியேற்றப்படுவதால் புது இரத்தம் உருவாகி உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு FRESHNESS ஏற்படுகிறது.

இது செய்வினையால் பாதிக்கப்பட்டிருக்கும் உடல் பாகத்தைக் கூட குணப்படுத்துகிறது. ஹிஜாமா வைத்திய முறையை எங்கள் கண்மணி நாயகம் (ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாழ்விலிருந்துதான் தெரிந்து கொண்டோம். இன்றைய அரபிகளும் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது செய்து கொள்கிறார்கள். அபுதாபியில் இருந்தபோது இதற்காக மெனக்கெட்டு 150 கி.மீ பயணம் செய்து மதீனா ஜாயத் (BIDA ZAYED) சென்று இவ்வைத்தியம் செய்து இருக்கிறோம்.

காரணம் அங்குதான் இந்த வைத்தியத்தில் மிகத் திறமையான எகிப்து  ஜோடிகள் இருக்கிறார்கள். கணவன் எஞ்சினீயர், மனைவி மருத்துவர். பணம் எதுவும் கேட்பதில்லை ; கொடுப்பதை எண்ணிப் பார்க்காமல் வாங்கிக் கொள்கிறார்கள். ஹிஜாமா செய்து விட்டு கூலி பெறுவது சரியில்லை என்று அவர்கள் சொல்லவில்லை மாறாக அபுதாபி முஸஃப்ஃபாவில் ஹிஜாமா செய்யும் ஒரு பாகிஸ்தானிய‌ பட்டான் சொல்லித்தான் தெரியவந்தது. பிறகு ஏன் இந்தப் பட்டானிடம் செல்லவில்லை என்று கேட்கிறீர்களா ?. காரணம் அவரிடம் சென்று வந்த என் நண்பனின் முதுகைப் பார்த்ததால் ; ‘போர்க்களம்’ போன்று இருந்தது. அந்த பயம்தான் :)

சென்னை வந்த பிறகு புரசைவாக்கத்தில் ஒரு அக்குபன்ச்சர் டாக்டரிடம் செய்திருக்கிறேன். எனக்கு முன் ஒரு பெரியவருக்கு ஹிஜாமா செய்து கொண்டிருந்தார். அப்போது கால் பகுதிக்கு வந்த போது, ‘உடலில் புகுந்து வேலை செய்யாமல் கிடக்கும் விஷமெல்லாம் காலின் இந்த பகுதியில் வந்து கிடக்கும்’ என்று சொல்லிவிட்டு மேலும் சொன்னார்,

‘நாயகம் (ஸல்லள்ளாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு ஒரு யூதப் பெண்மணி உணவில் விஷம் வைத்துக் கொடுத்தாள், அந்த விஷம் நபிகளாரின் காலிலிருந்து ஹிஜாமா மூலம் வெளியேற்றப்பட்டது’ என்று.
என்ன ஆச்சர்யம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அப் பெரியவரின் கால் பகுதியிலிருந்து கண் சைஸுக்கு ஒரு நுங்குத் துண்டு நைந்த நிலையில் வெளியேறியது. அப்பெரியவரிடம் விசாரித்ததில் சிறு வயதில் ஒருமுறை பாம்பொன்று காலில் ஏறியதாகவும், ஆனால் கடித்த ஞாபகமில்லை என்றும், மற்றொரு சமயம் இவரைப் பிடிக்காத ஒரு சொந்தக் காரர் தந்த உணவு சாப்பிட்டு  FOOD POISON ஆனதாகவும் சொன்னார்.

இந்த மருத்துவரிடம் மீண்டும் செல்லவில்லை காரணம் இவர் பிளேடுக்கு பதிலாக குச்சிப் பேனா போன்று பேனாக்கத்தி வைத்து 'பச்சக்...பச்சக்' என்று குத்துவதால் பிளேடால் கீறுவதை விட இரு மடங்கு வேதனையாய் இருந்தது. மேலும் ஐந்து இடத்திற்கு 200 வீதம் 1000 வாங்குகிறார். மதீனா ஜாயத் மிஸ்ரி ஜோடிகள் போல இங்கேயும் கிடைத்து விட்டதும் இன்னொரு காரணம். ஃபீஸ் 1000 என்றாலும் 10 இடங்களுக்கு மேல் இரத்தம் எடுக்கிறார்கள். கணவன் மனைவி இருவரும் அக்குபன்ச் மருத்துவர்கள். மனைவி ஹிஜாமாவில் PHD ம் செய்திருக்கிறார்.

ப்ளேட் என்பதால் வலி தெரியவில்லை. சென்னை மண்ணடியிலும் தி.நகரிலும் இவர்களது க்ளினிக் இருக்கிறது. ஆண்களுக்கு Dr. இம்ரானும் பெண்களுக்கு Dr. ஹலினாவும் ஹிஜாமா செய்கிறார்கள். கீழ்க்காணும் லிங்க்கின் மூலமாக அலைபேசி எண்கள் பெற்று அப்பாயின்மென்ட் வாங்கி அங்கு சென்று செய்து கொள்ளலாம். செய்து கொள்பவர்கள் ஐந்துக்கு மேல் இருந்தால் அவர்களே தங்கள் இடம் தேடி வரலாம். இது விளம்பரப் பதிவு அல்ல (அவர்களுக்கே இப் பதிவு பற்றி தெரியாது). 

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" ரகமே.


டிஸ்கி : ஹிஜாமா செய்து கொள்வதற்கு சிறந்த நாட்கள் தேய்பிறையின் ஒற்றை நாட்கள். அதிலும் சிறப்பானது 17,19,21.



Monday, June 19, 2017

வெப்பம் சூடு தணிக்கும் வீடு


" அக்னி வெயில் ஆர்ப்பரித்த நாளொன்றில்
  நீர் அருந்த மண் குவளையைக் கையிலேந்தி
  வாயருகில் கொண்டு சென்று கவிழ்த்தியதுதான் தாமதம்
  பாகுபலியின் போர்க் காட்சி கண் முன்னே நிகழ்ந்தது.

  ஆம்.. ஆயிரக்கணக்கான‌ எறும்பு வீரர்கள்
  ஆர்த்தெழுந்து ஏறினார்கள் கை விரல்களினூடே 

  சுறுக் சுறுக்கென்று கடி அம்புகளால் தைத்தனர் "   J


வேறொன்றுமில்லை, தண்ணீர் குடிப்பதற்காக மண் பானை வைத்திருப்போம் 
அல்லவாநானும் ஒரு சிறிய, நாலைந்து குவளை நீர் நிரம்பும் அளவுக்கு 
மண்ணால் செய்யப்பட்ட ஜக் (JUG) வைத்திருந்தேன். பாதி அளவு தண்ணீர் 
இருந்த நிலையில் வெளியூர் சென்றிருந்தேன். இரண்டொரு நாளில் வெயில் 
மாலைப் பொழுதில் திரும்பி வந்து தாகம் தீர்க்கும் ஆவலில் ஜக்கைக் கவிழ்த்த 
போது தண்ணீர் இல்லாமலிருப்பதைக் கண்டு (யாருமற்ற இச் சிறு வீட்டில் யாரடா 
தண்ணீர் குடித்தது) ஆச்சர்யப் பட்டாலும், கவுண்டமணி ஸ்டைலில் 'அமானுஷ்ய 
ஒலகத்துல இதெல்லாம் சகஜமப்பா'ன்னு தெனாவெட்டா சொல்லிக்கிட்டே 
மீண்டும் அதில் தண்ணீர் நிரப்ப ஆரம்பித்தேன்அப்போது நிகழ்ந்ததுதான் 
மேற்சொன்ன காட்சி.

ஆச்சர்யம் என்னவென்றால் எறும்புப் படைதான் தண்ணீரைக் காலி செய்திருக்கிறது மட்டுமல்லாமல் காலி செய்து விட்டு வெயிலுக்கு இதமாக 'கேம்ப்' அடித்து தங்கியிருக்கிறார்கள். குட்டி கரப்பான் பூச்சிகள் சிலவும் இதில் அடக்கம்
Camp Boss வேலைக்கான விசாவில் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். :)
இது ஒரு எச்சரிக்கைப் பதிவு,  நல்லவேளை பானை பெரிதாக இருந்து
மேற்படியான்  ஜாக்  வந்து விட்டால் ?

(JACK என்பது Rango படத்தில் வரும் பாம்பின் பெயர் ,
அதில் வரும் ஒரு வசனம் HAWK க கொன்னுட்டே, இனி JACK வந்துருவான்)

அதனால‌ மண் பானை வைத்திருப்பவர்கள் கொஞ்சம் உஷாராய் இருக்கவும்

அமானுஷ்யம் என்று சொல்லிவிட்டு அதைப் பற்றி எழுதலன்னா நல்லா இருக்காது. முன்பொரு நாள் பள்ளிக்கூடமொன்றில் படிக்கும் இரண்டு சிறுவர்களுக்கு 
தெருவில் செல்லும் பாம்பாட்டியைக் கண்டவுடன் ஒரு விபரீத ஆசை ஒன்று 
தோன்றியதுஒருவன் மற்றவனிடம் சொன்னான் 'நான் பாம்பாக மாறி 
மேற்கூரையில் ஒளிந்து கொள்கிறேன், நீ பாம்பாட்டியை அழைத்து வந்து மேலே பாம்பிருப்பதாகச் சொல்நானும் அவன் பார்த்தால் தெரியும் வண்ணம் மேலே 
அமர்ந்து கொள்கிறேன்என்னைப் பார்த்ததும் என்னைப் பிடிப்பதற்காக பிடிலை 
எடுத்து ஊத ஆரம்பித்து விடுவான். நானும் கீழிறங்காமல் விடாப்பிடியாக 
விளையாட்டு காட்டுவேன்அவன் ஊதிக் களைக்கும் வரை இப்படியாக‌  
விளையாட்டு காட்டி வேடிக்கை பார்ப்போம்’.

(இது முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்த அரபு தேசத்தில் நடந்த சம்பவம்.
தமிழில் பேய்,பிசாசு,பூதம் என்று சொல்வதை முஸ்லிம்கள் ஜின் என்று 
சொல்வார்கள்.  நல்ல ஜின், கெட்ட ஜின் என்று இரண்டே வகை. இவைகள் 
நெருப்புப் புகையினால் படைக்கப் பட்டவர்கள். நினைத்த உருவம் எடுக்கும் 
வல்லமை இறைவனால் இவைகளுக்குத் தரப்பட்டிருக்கிறது
"பாம்பாக மாறி வந்து ... என்ற பாட்டைக் கேட்டிருப்பீர்கள் அல்லவா,  
அவை இந்த ரகம்தான். ஸ்கூலில் சேர‌ ஆதார் கார்டொ, பர்த் சர்ட்டிஃபிகேட்டோ 
தேவைப்படாத அந் நாட்களில் அவைகளின் குழந்தைகளும் மனிதக் குழந்தையின் தோற்றத்தில் ஸ்கூலில் சேர்ந்து படித்ததுண்டு).

இப்ப கதைக்கு வருவோம். பாம்பாட்டியும் ஊத ஆரம்பித்தான். என்ன ஆச்சர்யம் 
சில நிமிடங்கள்தான் கழிந்திருக்கும், மேலிருந்த பாம்பு மெதுவாகக் கீழிறங்கி 
திறந்து கிடந்த அவனது பெட்டிக்குள் சென்று பவ்யமாகப் படுத்துக் கொண்டது
 பாம்பாட்டியும் பெட்டியை மூடி எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினான்
பதறிப் போன மற்றொரு சிறுவன் நடந்த உண்மையைக் கூறி நண்பனை 
மீட்டு வந்தான்பிறகு அவனிடம் 'டேய், வரமாட்டேன், விளையாட்டு 
காட்டுவேன்னு  நீதானடா பெருசா சொன்னே, ஏண்டா இறங்கி வந்தாய்'ன்னு 
கேட்டதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா.

'அதையேன் கேக்குற, அவன் ஊத ஊத என்னைச் சுற்றி நெருப்புச் சூடு பரவ ஆரம்பித்து விட்டது. அவனது கூடை மட்டும்தான் பாதுகாப்பாய் குளுகுளு இடமாய்த் தெரிந்தது. அதனைத் தவிர வேறு வழியில்லை என்பதால்தான் அங்கு செல்ல நேர்ந்தது'.


                            *                                                             *