Wednesday, December 29, 2010

இரண்டு விதமான‌ அப்ரோச்சும் ஆறாம் அறிவும் கூடவே நன்றியும்

நண்பர்கள் வைத்துக் கும்மியும் ஓட்டுக்களும் பெறும் இவ்வலையுலகில்
கேம்பெய்ன்,மார்க்கெட்டிங் டெக்னிக் ஏதும் செய்யாத நம்மையெல்லாம் எங்கே
கண்டு கொள்ளப் போகிறார்கள் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல்
இருந்து வந்தேன். ஆனால் ஆச்சர்யம் எனது மூன்றில் இரண்டு இடுகைகள்
அடுத்த கட்டத்திற்குத் தாண்டியுள்ளன. ஓட்டுப் போட்டவங்க நல்லாயிருக்கணும்.

தமிழ்மணத்திற்கும், இதுவரை ஓட்டளித்தவர்களுக்கும் இனி ஓட்டளிக்க
இருப்பவர்களுக்கும் எனது மனமார நன்றியும் துஆக்களும்.

எனது பதிவுகள் ஆன்மீகம் பகுதியிலும், பொருளாதாரம் பகுதியிலும்
உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

அடுத்தக் கட்ட ஓட்டளிப்பிற்கான பூத் இங்கே

------------------------------------------------------

இனி பதிவுக்கு வருவோம்...

ஒரு நாட்டின் மன்னன் அன்று ஒரு அறிவிப்புச் செய்தான், அதாவது நாளை
அரண்மனைக்கு வருபவர்களுக்குப் பொற்கிழியும்,சன்மானமாமும்
தரப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அடுத்த நாள் மிக நீண்ட கியூ.
கியூவில் நிற்பவர்களுக்குக் கிடைக்கும் அரசரின் புன்சிரிப்பையையும்
மரியாதையையும் பார்த்த மன்னனின் மகன் தானும் போய் நின்று கொண்டான்.

அவனது முறை வந்ததும், அதுவரை புன்சிரித்து வந்த மன்னனின் முகம்
மாறியது. இங்கு வந்து நின்றதற்கானக் காரணம் கேட்டான்.

'கியூவில் நிற்பதால் தேவையானவை கிடைத்து மகிழ்ச்சியோடு திரும்பிச்
செல்லும் மக்களைப் பார்த்தவுடன் எனக்கும் ஆசை வந்தது'.

மகனின் இந்தப் பதிலைக் கேட்டுக் கோபப்படுவதா இல்லை வருத்தப் படுவதா
என்று குழம்பிய மன்னன் சொன்னான்,

'மகனே, இந்த நடைமுறை பொது மக்களுக்கானது. உனக்குரிய முறை
எதுவென்றால் உனக்கு எந்தத் தேவையாயினும் என்னிடம் நேரடியாகவே
கேட்பதுதான். அதுதான் எனக்கும் பிடித்தமானது'.

இந்தக் கதைக்கும் அரசியலுக்கும் முடிச்சுப் போட்டு விடாதீர்கள் மக்களே :-)

இது கதையோ அல்லது உண்மையோ, நான் சொல்லப் போகும் சில
விஷயங்களுக்கு இதனை இங்கு உதாரணமாகப் பயன் படுத்தப் போகிறேன்.

இறைவன் என்னும் அரசனுக்குக் கீழுள்ள மக்களை இரண்டு விதமாகப்
பிரிக்கலாம். ஒன்று ஆன்மீக வாதிகள் (இளவரசன் போன்றவர்கள்)
மற்றொன்று நான்மீக வாதிகள் (பொது மக்கள்).

ஆன்மீகத்தில் நம்பிக்கையற்ற அனைவரையும் (அது முஸ்லிம்களாயினும் சரி)
நான்மீகவாதிகளில் சேர்த்துள்ளேன்.

ஆன்மீகவாதிகளில் இரு வகை, ஒருவர் சரியான இலக்கில் பயணித்து
இறைவனை அறிந்தவர்/அறிபவர். மற்றவர் ஆன்மீக வழியில் பயணப்பட்டுப்
பின் ஷைத்தானின் வலையில் வீழ்ந்து வழிகெட்டுப் போனவர்கள்.

ஷைத்தானின் மெயின் எதிரிகள் ஆன்மீக வாதிகள். அவர்களை வழிகெடச்
செய்வதுதான் அவனின் மிகப் பெரிய புராஜக்ட்,பிளானிங்,முயற்சி எல்லாம்.
நிற்க இது இப்படியே இருக்கட்டும்.

இறைவன் இளவரசனான ஆன்மீக வாதிகளிடம் எதிர் பார்ப்பது குழந்தைத்
தனத்தை. குழந்தை எப்படி எல்லாவற்றிற்கும் அம்மாவை அழைக்கிறதோ
அல்லது எதிர்பார்க்கிறதோ அது போல அடியார்கள் எல்லாத் தேவைகளுக்கும்
இறைவனின் பக்கம் முன்னோக்குதலையும் முடுகுதலையும் விரும்புகிறான்.

மன்னன் எங்ஙனம் இளவரசனுக்காக கஜானா அத்தனையும் திறந்து விடத்
தயாராக இருக்கிறானோ அது போல இறைவன் ஆன்மீக வாதிகளுக்காக
அத்தனையும் திறந்து தரக் காத்திருக்கிறான்.

போனில்லாமல் பேசலாம், டி.வி இல்லாமல் பார்க்கலாம், மக்களின் மனதைப்
படிக்கலாம், அடுத்து நடைபெறப் போகும் விஷயங்களை ஓரளவு விளங்கிக்
கொள்ளலாம், கனவின் விளக்கத்தை அறியலாம், நினைத்ததைப் பெறலாம்,
பிறருக்காகவும் பெற்றுத் தரலாம். ஆனால் வேடிக்கை என்னவென்றால்
உண்மையான ஆன்மீக வாதிகளுக்கு இறைவனைத் தவிர வேறு யாரின்
மீதும் அல்லது எதுவின் மீதும் ஆசையோ ஆர்வமோ இருக்காது. :-‍)

ஆறாம் அறிவு பற்றிய பிரணாவ் மிஸ்ட்ரியின் வீடியோ பார்த்திருப்பீர்கள்.
மவுஸ்லெஸ் ஆபரேஷனும் ஒரு பொருளை வாங்கலாமா வேண்டாமா
என்று அது தரும் சிக்னலை வைத்து முடிவு எடுப்பது இன்னும் என்னென்ன
விஷயங்கள். உண்மையில் அவரது முயற்சி வியக்க வைக்கிறது என்றாலும்
அது நான்மீக வாதிகளுக்குப் பிரயோசனம் தரும் கண்டு பிடிப்பென்றாலும் அது
பணக்காரர்களுக்கு மட்டுமே உரித்தானது. மட்டுமல்ல ஒவ்வொன்றுக்கும்
ஒரு கருவி என்று போனால் நாளை ஒவ்வொருவரும் (குப்)பைகள் தொங்கும்
மரம் போல கருவிகள் தாங்கிய மனிதனாகத் தான் அலைய வேண்டியிருக்கும்.

ஆன்மீக வாதிகளுக்கு முயற்சியின்றியே தேவைப்படும் பணம் கிடைக்கும்.
பணமின்றியே பொருள் கிடைக்கும். பொருளின்றியே தேவைகள் நிறைவேறும்.
பொதுமக்களைப் போல கஷ்டப்பட்டு உழைக்கத் தேவையில்லை. ஆனால் ஒரு
கண்டிஷன் அவர்கள் இளவரசனுக்குப் பின்னால் உள்ள பொறுப்பைப் போல
இறைவன் ஆன்மீகவாதிகளிடம் எதை விரும்புகிறான் என்பதை அறிந்து
அதனை நிறைவேற்ற வேண்டும்.

'அல்லாஹும்ம க்ஹிர்லீ வக்ஹ்தர்லீ (இறைவா எனக்கான‌ சிறந்ததை(நல்லதை)
நீயே தேர்ந்தெடுத்துத் தருவாயாக) என்ற துஆவே போதுமானது, அது பொருள்
வாங்குவதாய் இருந்தாலும் சரி, (ஜோசியம் பார்க்காமலேயே) சிறந்த துணை
தேடுவதாய் இருந்தாலும் சரி இன்னும் நிறைய விஷயங்களுக்குப் பயன்படும்
ஒரு அப்ளிகேஷன் அல்லது சப்ளிகேஷன்.

இதற்கான தேவை காசோ,பணமோ,திறமையோ அல்ல நம்பிக்கை மட்டுமே.




டிஸ்கி :

இதைப் படித்தவுடன் சரியென்று தோன்றினால் அல்லது மெலிதான புன்னகை
தோன்றினால் நீங்கள் ஆன்மீகவாதிகள். இதற்கு மாற்றமாக ஒரு ஏளனப்
புன்னகை,சிரிப்பு அல்லது கடுப்பு தோன்றினால் நீங்கள் நான்மீக வாதிகள் :)))

வஸ்ஸலாம்.

Wednesday, December 22, 2010

நாற்றம் பெற்ற மலர் போல

இந்தப் பதிவு பல் சம்பந்தப் பட்டது என்பதால் 'பல்'லாண்டு வாழ்கன்னுதான்
தலைப்பு வச்சேன் மொதல்ல. ஆமா இவருக்கு வேற வேலையில்லை,
நலம் வாழ, பல்லாண்டு வாழன்னு அறுக்குறான் மனுஷன் என்று யாரும்
பதிவப் பாக்காமப் போயிடுவாங்களோன்னு பயந்து இன்றையப் பதிவுலக
சாய்ஸ்க்கு ஏற்ற மாதிரி 'பல்ல ஒடச்சுப்புடுவேன் ஆமா' அப்படீன்னு
வச்சுப் பார்த்தேன். இருந்தாலும் மனசு கேக்காம, எப்போதும் போல
கவிதைத் தனமாவே இருக்கட்டும்னு இந்தத் தலைப்பு.

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா.. வா.. வாவா.

பல்லொன்று போனால் சொல்லொன்று போகும்
அதற்கு முன்னாலே ஓ.. ஓ.. ஓது...

'ஹேப்பி நிவ் இயர்'.

பல்ல ஒடச்சுப் புடுவேன்னு ஈஸியாச் சொல்லிடுறோம், ஆனா அதைப்
பிடுங்குவதற்குள் நாம் படும் பாடு. மலைகள் எப்படி பூமியில் நாட்டப்
பட்டுள்ளதோ அதைப் போன்று பல்லின் பேஸ்மென்ட்டும் ரொம்ப
ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறது. இருந்தாலும் பூச்சி அல்லது காரை அதனை
எப்படி பலஹீனமா ஆக்கி விடுகிறதென்பது ஆச்சர்யம்தான்.

இனிப்பு போன்ற பலகாரங்கள் சாப்பிட்ட உடனேயே சிறிது வெந்நீர் குடித்து
விட்டால் பூச்சி பிடிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

பல் விஷயத்தில் இன்னொரு தொந்தரவு, அதன் நாற்றம். மீன் மற்றும்
அசைவ உணவுகள் உண்ணும்போது அதன் மீதம் பற்களுக்கிடையில் தங்கி
விடுவது நாற்றத்திற்கான காரணம். உணவிற்குப்பின் பல் துலக்குவது,
பல் குத்தி சுத்தம் செய்வதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம். சிலர் பேஸ்ட்
பிரஷ் ஆபிஸிற்கும் கொண்டு வந்து பல் துலக்கப் பார்த்திருக்கிறேன்.

கடல் உணவுக்கும் நாற்றத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. அது
காலைக் கடனிலும் சரி அதன் மீதத்தைக் கச்சடா(குப்பை)த் தொட்டியில்
எறியும் போதும் சரி நம் மூக்கைத் தாக்காமல் போகாது. மாதாந்திர
ருதுவின் போது பெண்கள் மீனைத் தவிர்த்தால்
'நாற்றம் (மணம்) பெற்ற மலர் போல்' திகழலாம். :-)

இதல்லாமல் சாராயம்,சிகரெட் குடிப்பவர்களுக்கும், குடலில் ப்ராப்ளம்
உள்ளவர்களுக்கும் வாய் நாற்றம் இருக்கும். வாய் நாற்றம் இல்லாமல்
பார்த்துக் கொள்ளுங்கள். அது நம்முடைய மதிப்பைக் கெடுத்து விடும்.
நல்ல 'மூடை' அவுட்டாக்கி விடும்.

கொடுமை என்னவென்றால் நமக்கு நாற்றம் இருக்கிறதா என்று ஊதிப்
பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியாது. நெருக்கத்தில் இருப்பவருக்குத்தான்
தெரிய வரும்.

'விக்ரோ வஜ்ரதந்தி' விளம்பரம் பார்த்திருப்பீர்கள், ஆசையாய் மணமகன்
தன் புது மனைவியின் பக்கம் திரும்பி ஏதோ பேச வர‌ (அண்ணல் அவளை
நோக்க) அவளோ வேறு பக்கம் தலையைத் திருப்புவாள்.

சரி வாய் நாற்றத்தை எப்படித்தான் கண்டு பிடிப்பது, ஒண்ணு கல்யாணம்
பண்ணிப் பாருங்க :‍-) (துணையை விட நம்முடைய குறையை வேறு
யாரால் கண்டு பிடிக்க முடியும்)

அதெல்லாம் ரொம்ப காஸ்ட்லின்னா, ஒரு ஆப்பிள் பழத்தையோ அல்லது வாழைப்பழத்தையோ ஒரு கடி கடித்த பின் மீதத்தை மோந்து பாருங்கள்,
உங்களின் 'லொள்ளு' தெரியவரும். அது போல் உமிழ்நீரை கையில்
தடவி அல்லது டைரக்டாவே கையை நக்கி மோந்து பாருங்கள்,
(சரி சுத்தத் தமிழிலேயே எழுதிவிடுகிறேன்) 'முகர்ந்து பாருங்கள்'.
உங்களின் 'ஜொள்ளு' தெரியவரும்.

அல்லது தும்மிப் பாருங்கள், சுற்றுப் புறச் சூழலையே கதறடித்து விடும்.
(இந்தப் பதிவே, நான் தொழுகையில் நிற்கும் போது ஒருவர் தும்மியதால்
வந்த வினைதான்). எனக்கும் தும்மியவருக்கும் இடையில் ஒரு அரபி.

நம் எல்லோருக்குமே ஒரு பழக்கம், யாரும் தும்மினால் 'நைசா'
தலையை வேறு பக்கம் திருப்பி விடுவோம். ஆனால் தொழுகையில்
நிற்கும் போது அப்படிச் செய்ய முடியாதே. அச்சமயம் நான் என்ன
செய்வேனென்றால் முடிந்த வரை 'தம்' கட்டிவிடுவேன். மீண்டும்
தும்மினால் என் கதி அதோ கதிதான் :-)

அப்படித்தான் அன்றும், தொழுது முடித்தவுடனேயே ஒருவர் ஒரு
தும்மு தும்மினார் பாருங்கள், நானும் முன்னெச்சரிக்கையாக
'தம்' கட்டித் திரும்பி விட்டேன். ஆனால் பக்கத்திலிருந்த அரபி
'லா ஹவ்ல வலா குவ்வத்த ..' என்று சொன்னார்.

ஆஹா! இது கோபத்தில் அரபிகள் சொல்லும் வார்த்தையல்லவா என்று
இந்தப் பக்கம் திரும்பி 'தம்'மைத் தளர்த்தினால் 'அம்..மாடி',
மயங்காத குறைதான். அவ்வளவு நாற்றம்.

சரி நாற்றத்தை எப்படி போக்குவது ? வழக்கமா தேய்ப்பதைக் கொஞ்சம்
நிறுத்தி விட்டு முரசிலிருந்து இரத்தம் வராமல் தடுக்கும் பேஸ்டை சில
காலத்திற்கு உபயோகிக்கவும். இதை விட பெட்டர், டாக்டரிடம் சென்று
பல்லைக் கிளீன் செய்வதுதான். என்ன, கொஞ்சம் .. கொஞ்சமல்ல,
நிறையவே கூசும், தலை கொஞ்சம் கிறுகிறுக்கும்.
(எத்தனை பேர் தலையைச் சுத்த வச்சிருப்பீங்க) :-)

அவ்வப்போது பயோரியா,கோபால் பல்பொடி போன்ற‌வைகளாலும்,
'மிஸ்வாக்' குச்சிகளாலும்,விரல்களாலும் பல் துலக்கிக் கொள்ளுங்கள்.

மிஸ்வாக் குச்சி ஃபிரெஷ்ஷாகக் கிடைத்தால் அதற்கு இணை வேறேதும்
கிடையாது. அதில் இருக்கும் காரத்திற்கு பூச்சியென்ன, நாற்றமென்ன
எந்தப் பேஸ்ட் கம்பெனியும் இருக்காது.

ஆனால் அதுவோ அரபிகளின் சொத்தாகி விட்டது. நம்ம நாட்டுல
இருக்கவே இருக்குது 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி'.

இவ்வளவு சொன்ன பிறகும் வாய் நாற்றத்தோட வந்து தும்முனீங்க‌ ..
'பல்ல ஒடச்சுப்புடுவேன் ஆமா' (அப்பாடா தலைப்புக்கு வந்தாச்சு) :-)

Sunday, December 12, 2010

பய‌ணத்தினூடே ...

பயணக் களைப்பு மறந்து
விமானத்தின் ஏற்றத்தையும்
இறக்கத்தையும் வியந்து
பார்க்கும் பயணிகள்.

விமானம் நிலைக்கு வந்தவுடன்
பசி ஆற்றக் காத்திருக்கும்
தாக 'சாந்தி'கள்.

கூடவே

விமான சத்தத்திலும் தம்
குஞ்சுகளின் பசிச்சத்தம்
மறவாமல் பசி தீர்க்க
போட்டி போட்டு
ஏறி இறங்கும்
பாவப்பட்ட பறவைகள்

Monday, December 06, 2010

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்

உலகமே உன் வசம்தான்; போராட வேண்டிய அவசியமே இல்லை.

உலக வரைபடத்தைத் தாறுமாறாகக் கிழித்து ஒரு பள்ளி மாண்வனிடம் கொடுத்து
அதனை மீண்டும் சரியான முறையில் இணைக்குமாறு சொல்லப்பட்டபோது
முதலில் திகைத்துப் பின் சரியான முறையில் பொருத்தினான், எப்படித் தெரியுமா?.

கிழிக்கப்பட்ட ஒரு பகுதியின் பின்புறத்தில் மனித உறுப்பின் ஏதோவொரு பாகம்
தெரிய வர முதலில் மனித உருவத்தைச் சரியான முறையில் இணைத்து ஒட்டிய
பின் திருப்பினால் 'உலகம் மீண்டும் சீர் பெற்றது' :).

மனிதன் எப்படியோ உலகம் அப்படியே.
மனிதன் சீர்பெற்றால்தான் மற்றெல்லாம் சீர்பெறும். மனிதன் இந்த உலகத்தின்
உள்ளமாகும். மனிதன் திருந்த வேண்டுமென்றால் அவன் மனம் திருந்த வேண்டும்.
மனதை இயக்கும் நம்பிக்கை சரியாக வேண்டும். நம்பிக்கையில் உறுதி வேண்டும்.
உள்ளம் கெட்டுப் போன மனிதர்கள் வாழும் உலகம் குழப்பம்...அழிவு...பேரழிவுக்கு
உள்ளாகும்.

உள்ளமே உடலின் அரசாங்கத்தை ஆட்சி செய்யும் அரசனாகும். ஆசை, அரசனின்
துணைவி;அரசாங்கத்தின் ராணி. கோபம் படைத் தலைவராகும். ஆசை ராணியையோ
கோபப் படைத் தலைமையையோ அரசுக்கட்டிலில் அமர்த்தாமல் தாமும் 'குடி'முழுகிப்
போகாமல் அறிவு மந்திரியின் ஆலோசனைக் கேட்டு அன்பாகத் தாமே நடாத்தி வந்தால்
உடல் என்னும் நாடு உருப்படியாக வாழும்.

உள்ளத்தைத் திருத்துவதற்கு முன் அதன் இருப்பிடம்,தன்மை
பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஆமா மனசு எங்கேதான் இருக்கு ?

இதயம் என்பது இருதயம்தான் என்று நம்பி வந்தோம்,
இல்லை மூளைதான் என்கிறார்கள் இன்று வந்தோர்.
உறுதியாகச் சொல்ல யாரும் இல்லை சென்று வந்தோர்.

இதுவே இன்னும் சரியாகத் தெரியவில்லை, இன்னும் ஆத்மா,ஆன்மா,உயிர்,ஆவி,
கனவு,அறிவு,நுண்ணறிவு,பகுத்தறிவு என்று நமக்குள்ளே இருக்கும் ஆச்சர்யங்கள்
பற்றி எப்பொழுது தெளிவாக அறிவோமோ தெரியவில்லை.

'எவர் தம் ஆத்மாவை அறிந்தாரோ அவர்(தம்) இரட்சகனை அறிந்து விட்டார்'
என்றும்
'இறை நம்பிக்கையாளரின் உள்ளம் இறைவனின் ஆட்சிப் பீடம்'
என்றும் சொல்லப் படுகிறது.

உள்ளத்தின் சக்தியை அதன் Capacity ஐ இன்னும் நாம் உணரவில்லை.

எல்லாவற்றிற்கும் ஒரு Capacity/Limit உண்டு. இவ்வளவுதான் தாங்க முடியும் என்று.

ஆனால் உள்ளம் அப்படி கிடையாது. என்ன வேண்டுமானாலும் நினைக்க முடியும்
எங்கு வேண்டுமானாலும் துரிதமாகச் செல்ல முடியும் (மனோவேகம்). உதாரணமாக
உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் நான் உயிரோடு இருக்கும் வரைக்கும்
உணவளிப்பேன் என்று நினைத்துப் பாருங்கள்.

'சாரி இது டூ மச், நம்மால முடியாது'ன்னு உள்ளம் உடனே வெடித்து விடாது :)

உள்ளத்திற்கு உதாரணமாய் நிலத்தைச் சொல்லலாம் அல்லது குளத்தைச் சொல்லலாம்,
பார்வை,கேள்வி,பேச்சு,சிந்தனை ஆகிய ஆறுகளின் சங்கமம் என்றும் சொல்லலாம்.
கணிணி மொழியில் CPU வில் உள்ள control unit போல என்றும் சொல்லலாம்.

மனிதனை முன் மாதிரியாக வைத்துத்தான் கணிணியும் உருவாக்கப்பட்டுள்ளது.
Artificial Intelligence ஐ நோக்கி முன்னேறுவதும் மனிதனை அடிப்படையாக
வைத்துத்தான்.

உடலில் சதைத்துண்டு உண்டு அது சீர்பெற்றிருந்தால் முழு உடலும் நலம் பெறும்.
அது சீர்கெட்டுப் போனால் முழு உடம்பும் சீர்கெட்டுப் போகும். அது தான் உள்ளம்
என்று அருமை நபி(ஸல்) சொல்லியிருக்கிறார்கள்.

அந்த சதைத்துண்டு எதுவென்று உறுதியாகத் தெரியவில்லை. இதயமாகத்தான்
இருக்கும் என்பது எமது அபிப்ராயம், அதுதான் மனித பிறப்பின் உருவாக்கத்தில்
துடிக்கும் முதல் உறுப்பு. அதையே இன்றைக்கு மாற்றி விடுகிறார்களே
என்று சிலர் வாதிடும் போது இப்படியும் எண்ணத் தோன்றுகிறது.

தலைமைச் செயலகத்திற்கான பழைய கட்டிடத்தை இடித்துவிட்டுப் புதிய கட்டிடம்
கட்டினாலும் அங்கு மீண்டும் குடிவந்து ஆட்சி செய்யும் அரசைப் போல‌ இருதயத்தை
மாற்றினாலும் சக்தி மீண்டும் அங்கே அமர்ந்து ஆட்சி செய்கிறது.

'அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா?
(அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும்,
(நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்)
கண்கள் குருடாகவில்லை எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள்
(அகக் கண்கள்)தாம் குருடாகின்றன.' (அல் குர்ஆன் 17:46)

குர்ஆனிலும் 'நெஞ்சத்தில்' என்றுதான் வந்திருக்கு. அதனால‌ மனசு நெஞ்சுலதான்
இருக்கு. நாம் நம் எதிரில் இருக்கும் நபரிடம் 'உன்/உனது/உன்னை/உன்னிடம்'
என்று சொல்லும்போது ஆட்காட்டி விரலால் அவர் முகத்தை நோக்கிச் சுட்டுகிறோம்.
அதே சமயம் 'நான்/எனது/என்னை/என்னிடம்' என்று சொல்லும்போது மட்டும் நம்
நெஞ்சைக் குறி பார்க்கிறோமே அது ஏன் ?

'நெஞ்சுக்குள்ளே....நெஞ்சுக்குள்ளே..'

Tuesday, November 23, 2010

விஞ்ஞானம்..பரிமாணம்..பரிணாமம்..பரிதாபம்

முஸ்கி : (டிஸ்கியை முன்னாடியே போட்டா அது முஸ்கி தானே)

பரிணாமம் பற்றிய இஸ்லாமியக் கருத்துக்களை சீரியஸாத் தெரியணும்னா
கார்பன் கூட்டாளியையும்எதிர்க்குரலையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இது கொஞ்சம் 'சிரியஸ்' பதிவு, மேலும் பதிவின் கடைசியில் காரத்திற்கு
எதிர்ப்பதமான 'இனிப்பு(16+)' கொஞ்சம் 'தூக்கலா' இருக்கும் :)))
அதனால் தயவு செய்து பெண்கள் படிக்க வேண்டாம் கடைசி வரியை.

கடைசியில் வரும் குரங்கு சம்பவத்தை நகைச்சுவையாக எழுத நினைத்து குரங்கின்
நிமித்தமான பரிணாமத்தைத் தொட்டுப் பின் விஞ்ஞானத்தைத் துவைக்குமாறு ஆகி
விட்டது. அதிபர் அப்துல் கலாம் மன்னிக்கவும்.

-----------------------------------------------------------------------

என் நண்பனொருவன் சொல்லுவான், மில்லியன் பில்லியன் கணக்கில் செலவழித்து
வான வெளிகளில் பயணித்து கல்லையும் மண்ணையும் கொண்டு வந்து கடைசியில்
பயணக் கட்டுரை எழுதுவதால் என்ன பிரயோஜனம். நாளை பெட்ரோல் போன்றவை
தீர்ந்து பழைய கற்காலம் போன்று ஆகிவிடும். இந்தப் பணத்தைப் பூமியில் போடலாமே,
அதாவது பூமியின் வளங்களை அறிந்து மனித சமுதாய முன்னேற்றத்திற்காகப்
பயன்படுத்தலாமே அல்லது மனிதனை ஆராய்ந்து மண்ணை வளப்படுத்தலாமே என்று.
(நீங்க என்ன சொல்றீங்க)

பணமும் மனித முயற்சியும் இப்படி விழலுக்கு இறைத்த நீராகப் போவதற்குக் காரணம்,
'மத' நம்பிக்கைக்குள் 'னி'ராகரிப்பைப் புகுத்தி 'மனித'னின் அறிவை மட்டும் நம்பும்
விந்தை ஞானமான விஞ்ஞானமே. எதையும் உருப்படியாகச் சொல்லாமலும் ஒரு
முடிவுக்கு வராமலும் சுற்றி வளைத்துக் குழப்புவதும், இன்று சொன்னதை நாளை
மறுப்பதும்தான் விஞ்ஞானம் என்ற பெயரில் உலா வரும் அஞ்ஞானம். உண்மையில்
விஞ்ஞானம் என்பது விந்தைகளுக்குப் பின்னாலுள்ள மர்மங்களின் முடிச்சை
அவிழ்த்து மெய்ஞ்ஞானம் போதிக்க வேண்டுமே ஒழிய அது ஒருபோதும்
அஞ்ஞானத்திற்கும் அழிவிற்கும் துணை போகக் கூடாது.

குர்ஆன் மற்றும் இஸ்லாமியக் கருத்துக்களில் பெரும்பாலான விஷயங்கள்
தெளிவாகவும் சில மறைமுகவாகவும் சில உங்களுக்குத் தெரியவே சான்ஸ்
இல்லை என்றும் கூறப்பட்டுள்ளன‌.

தெரியவே சான்ஸ் இல்லாத அல்லது மிகக் குறைவாகவே அறிய முடிகிற‌
விஷயங்களில் 'உயிரும்' ஒன்று. ஆனால் உயிரைப் பற்றி மிகப் பெரிய ஆராய்ச்சி
நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒருநாள் உயிர் பற்றித் தெரிய வரும்,
அந்நாளில் உயிர் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் 'லெனின்' போன்றோரின்
உடல் பாதுகாக்கப் பட்டு வருகிறது. இது நடக்கவே நடக்காது, இறந்த ஒருவருக்கு
தஜ்ஜாலால் (anti christ) ஒரே ஒரு முறை உயிர் கொடுக்கப் படும் அவ்வளவே தவிர‌.

வானத்தில் இரவு நேரங்களில் எரிந்து விழும் நட்சத்திரங்களைப் பார்த்திருப்பீர்கள்.
அது என்னவென்று குர்ஆன் சொல்லுகிறது, '(குறி சொல்லுபவர்களுக்காகச் செய்தி
சேகரிக்க மேலேறிச் செல்லும் பத்திரிக்கையாள :) ஜின்) ஷைத்தான்களை விரட்ட
வானவர்கள் எறியும் எரிகற்கள்'-'ருஜூமன் லிஷ்ஷயாத்தீன்' என. விஞ்ஞானிகள்
என்ன சொல்கிறார்கள், அறிவு பூர்வமா ஏதாவது சொல்ல வேண்டுமே என்று
வளி மண்டலம்,உரசல் புரசல் என்று எதையாவது சொல்வார்கள்.

'சுனாமி' ஏற்படுவதற்குக் காரணம் 'பூமிக்கடியில் ரெண்டு பிளேட் உரசிக் கொண்டதாம்',
அது ஏம்பா உரசுது அல்லது யார்யா ஒரச வைக்கிறது, அது இப்ப ஏன்யா ஒரசலைன்னு
கேட்டு பாருங்க, அதுக்கும் அவர்களால் மழுப்பத்தான் முடியும்.

கனவைப் பற்றிய‌ ஆராய்ச்சி எப்படியிருக்குதுனா பசி எப்படி ஏற்படுதுங்குற மாதிரித்தான்
போகுது. நரம்புகள் தூண்டப்பட்டு, நினைவுகள் தோண்டப்பட்டு அப்படீன்னு சொல்லி வைப்பார்கள்.ஒண்ணு பசி தீர வழி சொல், இல்லன்னா பசி போக்கும் உணவிற்கான
ஏற்பாட்டைச் செய்து கொடு விஞ்ஞானமே.(கனவுன்னா என்ன, கனவுக்கான பலன்
என்ன என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த ப‌திவில் பார்ப்போம்).

இப்படி எல்லா விஷயத்திலும் முடிவுக்கு வராமல் ஆராய்ந்து கொண்டே...யிருக்கும்
விஞ்ஞானிப் பயலுவ, 'குரங்கிலிருந்துதான் மனித இனம் தோன்றியது ' என்ற
தான் தோன்றித் தனமானத் தத்துவத்தை மட்டும் எப்படி பிடித்துக் கொண்டார்களோ.

உருவெளிக் களங்களில் பயணித்துப் பாருங்கள். இது சம்பந்தமாக இன்னும் நிறைய
தீனி கிடைக்கும். இப்ப நம்ம கதைக்கு வருவோம்.

சென்ற வாரம் பெருநாள் விடுமுறையில் துபாய் Zoo சென்றிருந்த நண்பர் சொன்னார்.
அங்கே ஒரு கொரில்லா உண்டு, அது ஒவ்வொரு முறையும் தண்ணீர்த் தொட்டியை
நோக்கி ஓடிச் சென்று தண்ணீரை வாயில் சேகரித்துக் கொண்டு கூண்டின் கம்பிக்கருகில்
வந்து நின்று கொள்கிறது. யாராவது அதனை போட்டோ எடுக்க அருகில் சென்றால்
போதும், முகத்தில் நீரைப் பீய்ச்சியடித்து விட்டு ஓடிச் சென்று நீரைச் சேகரித்து....
இப்படியே நிகழும் சேட்டையைக் குழந்தைகளோடு சென்றால் ரசிக்கலாம் என்றார்.
(என்ன குசும்பரே, இங்கே இன்னும் போக வில்லையா, அதன் சேட்டையை ரசித்து
உங்கள் நடையில் பதிவிக்கவும்.)

கேட்டுச் சிரித்துவிட்டு இன்னொரு நண்பர் சொன்னார். 'பார்த்தீங்களா பாய்,
அல்லாஹுத்தஆலா கணவன் மனைவி ஜோடியை அந்தந்த இனத்திலேயே ஆக்கி
வைத்துக் கிருபை செய்திருக்கிறான். 'அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே
மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்' என்று குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளது (16:72).

சப்போஸ் மனித இனத்துக்குப் பதிலா மனைவி குரங்காய் இருந்திருந்தால் நம்ம கதி என்னவாகியிருக்கும். கோபித்துக் கொண்டு மரமேறிய குரங்கை ஸாரி மனைவியை
ஒவ்வொரு தடவையும் கெஞ்சிக் கூத்தாடியல்லவா கீழே இறக்க வேண்டி வந்திருக்கும் :)

அதைக்கேட்டு எங்க ஊர் நண்பன் சொன்னான்,
'அடப் போங்க பாய், புடவை,நகையென்று செலவழிக்க வேண்டிய அவசியமே
இருந்திருக்காது, ஒரு வாழைப்பழமே போதும், வாழ்க்கையே வசப்படும்.

இதைக்கேட்டு நான் சொன்னேன் .....

'அடேய், வசப்படுமா, வசமா நசுக்கப்படும்.
'ஒருநாள் வாழைப்பழம் கெடைக்காமப் போனாத் தெரியும் ...'
.
.
.
.
.
'ஒன்னோட வாழப்பழத்தோட கதி' :-)))

Wednesday, November 10, 2010

'அல்லாஹ்' எனும் ஆயுத எழுத்து, சில‌ Calligraphic சிந்தனைகள்



இது 'அல்லாஹ்' என்பதன் அரபி வார்த்தை எழுத்து. வலது பக்கத்திலிருந்து வாசிக்க
வேண்டும். முதல் எழுத்து அ(லிஃப்), இதை எடுத்து விட்டுப் படித்தால் 'லில்லாஹி'
(அல்லாஹ்விற்காக) என்று வாசிக்கப் படும். அலிஃபுக்கு அடுத்துள்ள ல(லாமை)
எடுத்தால் 'லஹூ' என்று வாசிப்பும் 'அவனுக்கே' என்ற அர்த்தமும் அமையும்.
பிறகு அடுத்த எழுத்தான ல(லாமை) எடுத்தால் 'ஹூ' (அவன்) என்றாகும்.

இப்படி ஒவ்வொரு எழுத்தும் 'அவனையே' குறிக்கிறது. இந்தச் சிறப்பு GOD க்கும்
கிடையாது கடவுளுக்கும் கிடையாது. மேலும் 'அல்லாஹ்' என்றால் அல் இலாஹ்
(வணக்கத்திற்குரியவன்) என்று அர்த்தம்.

'அல்லாஹ்' என்ற வார்த்தைக்கு பெண்பாலோ அல்லது பன்மையோ(Plural) கிடையாது.
இன்னொரு விந்தை அல்லாஹ் என்பதன் அரபி எழுத்து நம்ம கையிலேயே இருக்கு
(அப்ப நாம் எல்லாம் முஸ்லிம்கள்தானே)




இந்த எழுத்தைப் பலவிதமாக எழுதினால் எப்படியிருக்கும்.
இப்படி எழுதுவதற்குப் பெயர் காலிக்ராஃபி.





இதை இடதிலிருந்து வாசித்தால் ஆங்கிலம் வலதிலிருந்து வாசித்தால் அரபி எழுத்தும்
தெரிவது போல் வரைந்திருக்கிறார்கள்.

காலிக்ராஃபியில் 'அல்லாஹ்' என்ற எழுத்தைப் பலவிதமாகச் சித்தரிப்பது மட்டுமல்ல
சிதைப்பதும் நடந்து வருகிறது. உருவமில்லா இறைவனுக்கே இதன் மூலம் உருவம்
கொடுக்கப் பட்டுள்ளதைப் பாருங்கள்.



இப்படியே போய் ஆயுத எழுத்தாக மாறிப் போன விந்தை.





திரிசூலத்தின் திருமூலம் இதுவாக‌த்தான் இருக்கும் :)

அலிஃபும் ஹாவும் கீழே வாள்/பிடி/வேல் போலவும் மீதி திரிசூலமாகவும்.



எழுத்தைப் படுக்க வைத்துப் பார்த்தால் 'ஓம்' வருகிறது.

மேலும் பிஸ்மில்லாஹ்வைச் சுருக்கினாலும் 'ஓம்' வரும்.





மேலும் சில சிந்தனைகள்

ஆதம் நபியின் (இடது)பாதம் இலங்கையில் உள்ள மலையில் இருக்கிறது.
அதன் நீளத்தின் மீது சுமார் ஐந்தடி மனிதன் படுத்துறங்கலாம். நிமிர்ந்து படுத்து ஒரு கையை நீட்டிக் கொள்ளும் அளவு அகலம். இந்த பாதத்தை புத்தரின் பாதமென்று புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் சொல்கிறார்கள். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கௌதம புத்தருக்கு இந்த அளவு பாதம் இருந்திருக்காது. ஆனாலும் 'புத்தர்' என்றால் நபியையோ அல்லது மகானையோ குறிப்பதாக இருந்தால் அது முந்தைய புத்தரான‌ ஆதம் புத்தரின் பாதமே.

இவர்கள் இடது பாதத்தைத்தான் பூமியில் வைத்து இறங்கியிருக்கிறார்கள்.
நாமும் வாகனத்திலிருந்தோ அல்லது உயரத்திலிருந்தோ இறங்கும் போது இடது காலை வைத்து இறங்குவது சுன்னத்து(நபிவழி) என்று அறிவோம். மேலும் கக்கூஸ் செல்லும் போது இடது காலை முதலில் வைத்து உள்ளே செல்ல வேண்டும் என்பதும் அறிவோம்.

சுவனத்தில் கக்கூஸ் உபாதை கிடையாது, தடுக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டதால் உபாதை எடுத்து இடம் தேடி இறைவனிடம் முறையிட்ட
போது 'சுவனத்தில் அதற்கு இடமில்லை', அதற்கான இடம் உலகம்தான்
என்று ஆதம் அனுப்பப் பட்டபோது 'இந்த உலகத்தைக்
கக்கூஸாகக் கருதி' இடது காலை வைத்தார்களோ தெரியாது.

இந்துக்கள் இந்த பாதத்தை 'சிவனடி பாதம்' என்கிறார்கள். மேலும் சிவனுடைய பிள்ளைகளான முருகனுக்கும் பிள்ளையாருக்கும் ஒரு பழத்தின் மீது சண்டை வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆதம் நபியின் இரு பிள்ளைகளுக்கும் ஒரு பழத்தினால் அல்ல  ஒரு பெண்ணால் சண்டை ஏற்பட்டு ஒருவர் மற்றவரைக் கொலை செய்த சம்பவம் மூலமாக இரண்டு பேரும் (ஆதமும் சிவனும்) ஒன்றா என எண்ணத் தோன்றுகிறது.

மேலும் ஆதமுக்கு அடுத்து வந்த நபிக்குப் பின் வந்த 'நூஹ்' நபி காலத்தில்
மக்கள் வத்து,சுவா,எகூஸ்,யஊக்,நஸ்ர் என்ற பெயர்கள் கொண்ட ஐந்து சிலைகளை வணங்கி வந்ததாக குர்ஆன் கூறுகிறது. இதில் இரண்டாவதான 'சுவா' மருவி 'சிவா'வானதோ என்னவோ. இந்த ஐந்து சிலைகளும் இறந்து போன நல்லோர்களின் ஞாபகார்த்தமாகத் தோன்றியவை.

மேலும் திருவிளையாடலில் வந்த 'பழத்தைத் தந்து நாடகத்தைத் துவக்குகிறீர்' என்ற வசனத்தை நாம் பார்த்து அல்லது கேட்டிருக்கிறோம். நாடகத்தைத் துவக்குகின்றவரான 'நாரதரின்' கலகம் நன்மையில் முடிவதாகச் சொல்லப்படும்.

இந்த நாரதரும் நாம் சொல்லும் 'கிள்ரு' நபியும், கிறித்தவர்கள் சொல்லும்
'பச்சைக் காவலாளியும்' ஒருவரே என இவர் குறிப்பிடுகிறார்.


கிருஷ்ணனின் கதையைப் பார்த்தால் மூஸா நபியின் சம்பவம் போலிருக்கும்.

ஆக இதுவெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் 'ஒரு மூலம் பல்கிப் பெருகி
குட்டி போட்டுக் கதையாகிக் கந்தலாகிப் பின் தைக்கப் பட்டுப் பின் நைந்து நூலாகிக் கடைசியில் இறுதிவரை உறுதியாக இருக்குமாறு இஸ்லாம் நெய்யப்பட்டு நீடூடி வாழ்ந்து வருவது தெரிய வரும்.

இந்த மனித சமுதாயம் குழந்தையா இருக்குறச்சே சின்ன சட்டை, வளர வளர
அதற்கேற்றவாறு அளவில் மாறி, பிறகு இறக்கும் வரை ஒரே அளவு கொண்ட
ஆடையாக‌ இஸ்லாம் தரப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் வராது.
இஸ்லாத்திற்கேற்றவாறு நாம்தான் மாற வேண்டும். நான் ரெடி, நீங்க ரெடியா :)


Thursday, October 28, 2010

'மைன்ட் யுவர் பிசினெஸ்'

'எச்சொல் யார்யார் செவி சேர்ப்பினும்
அச்சொல்லில் தேன் சேர்ப்பதறிவு'

புத்திமதி சொல்லப் படும் போது பிடிக்கலன்னா, 'ஓ(ன்) வேலயப் பாத்துக்கிட்டு
போய்யா'ன்னு புரியிற மாதிரி தமிழ்ல சொல்லாம, நாகரிகமா,ஸ்டைலா
வெள்ளக்காரன் மாதிரி நம்ம மக்கள்ஸ் இப்படி சொன்னது ஒரு கா..ல..ம்.

இப்பல்லாம் அட்வைஸ் எங்க கிடைச்சாலும் பிடிக்காட்டிக் கூட காது கொடுத்து
கேட்பது மட்டுமல்ல தன்னுடைய கருத்தையும் அங்கே பதிவிக்க நினைக்கும்
பிளாக்கர் காலம் இது.

சென்ற உம்ராவின் போது எனக்கும் நண்பனுக்குமிடையில் நடைபெற்ற உரையாடல்.
கஃபாவை வலம் வருவதற்காகச் சென்ற நேரமது.கீழே ஆண்களும் பெண்களும் கலந்த
கடுமையான‌ கூட்டமாக இருந்ததால் மாடியில் தவாஃப் செய்ய நேரிட்டது.

மாடியில் தவாஃப் செய்யும்போது அங்கங்கே பெண்கள் பகுதியைக் கடக்க நேரிடும்
போது பெண்களின் பேச்சுக்குரலும், ஓதும் சப்தமும் அதிகமாகக் கேட்டது.
அப்போது நண்பன் கேட்டான்,

'சத்தத்துக்கு என்னா அரபியில‌'

'சவ்த்'னு சொல்வாங்க, எதுக்கு கேக்குற?

இல்ல, இங்க பெண்கள் சத்தம் அதிகமா இருக்கு, சத்தம் போடாதீங்கன்னு
அரபியில‌ சொல்லத்தான். 'south maafee'னு சொல்லவா ?

'south maafee'ன்னா 'சத்தமேயில்லை(இன்னும் நல்லா சத்த‌ம் போடுங்க)ன்னு அர்த்தம்'.

பின்ன எப்படி கேட்கிறது, 'சவ்த் லேஷ்' (ஏன் சத்தம்) என்று கேட்கவா அல்லது
'சவ்த் மா இரீது' (சத்தம் தேவையில்லை) என்று சொல்லலாமா ?

எனக்கும் சரியான சொல்லாடல் தெரியாததால், இங்க பாரு டைரக்டா சொல்றதா
இருந்தா, 'உஸ்குத்' (வாய மூடு)ன்னு சொல்லலாம், ஆனா அடுத்த நிமிஷம்
செருப்போ அல்லது போலிஸோ பறந்து வரும், எதுக்கு வம்ப வெலைக்கு வாங்குறே.

இல்லப்பா, யாராவது சொன்னாத்தானே, அவங்களுக்கும் புரியும்.

இங்க பாரு, இந்த மாதிரி சொல்றதுக்குன்னே 'முதவ்வா'க்களை அரசாங்கம் வச்சிருக்கு.
இது அவங்க வேலை. மாத்திரமல்ல, சட்டம் கொண்டு அல்லது சாட்டை கொண்டு
தகாதவைகளைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையதல்ல, மாறாக‌ அது இஸ்லாமிய
அரசாங்கத்தின் கடமை. தனி மனிதனுக்கு, அவனுக்குக் கீழுள்ளவர்களைச் சத்தம்
போட்டுத் திருத்த அனுமதி உண்டு. இருந்தாலும் மென்மையான முறையில்
செய்யப்படும் அறிவுரைகள் தாம் நீண்ட நாட்களுக்குப் பலன் தரும். காரணம்
'மென்மையில் பரக்கத்(அபிவிருத்தி) இருக்கிறது'.

உன் பேச்சு எடுபட வேண்டுமென்றால், 'இறைவனின் இல்லத்தில் சத்தமிடாமல்
இருப்பவருக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக' என்கிற தொனியில்
உன் உபதேசம் இருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் தனி மனிதனிலிருந்து அரசாங்கம் வரைக்கும் ஒவ்வொருவரும்
எப்படி நடக்க வேண்டும் என்று காட்டித் தந்திருக்கிறார்கள்.
ஒரு சம்பவம் சொல்கிறேன் கேள்.

ஒரு முறை நபியின் மீது கடும் வெறுப்பு கொண்ட நிராகரிப்பாளர் ஒருவர், நபியை
ஒரு முறை பார்த்து விடும் எண்ணத்தில் மதீனா நோக்கி வந்தார்.வரும் வழியில்,
இருவர் சத்தமாக உரையாடுவதைக் கண்டு என்னவென்று அறிய எட்டிப் பார்த்தார்.
ஒருவர் ஏதோ விற்றுக் கொண்டிருக்க இன்னொருவர் வாங்குவதற்காகப் பேரம்
பேசிக் கொண்டிருந்தார்.

இவர் எட்டிப் பார்க்கும் நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, 'இந்தாளைக்
கண்டிப்பவர் யாருமில்லையா' என வாங்குபவர் போவோர் வருவோரிடம் முறையிட,
நபியைக் காண வந்தவர், 'அநியாயம் செய்யும் இந்த விற்பனையாளன்தான் நபியாக
இருக்கும்' என்று கணித்து அவரோடு சண்டையிட நினைக்கும் சமயத்தில், மிக
அழகான ஒருவர் அவ்விருவரை நோக்கி நெருங்குவதைக் கவனித்தார்.

அவரைப் பார்த்த மாத்திரத்தில் 'யாரசூலுல்லாஹ், இந்த ஆள் அநியாய விலை
சொல்கிறான்' என்று புகார் செய்ய, வியாபாரியை நபியென்று தவறாக எண்ணியவர்,
இப்போது நபி என்ன செய்யப் போகிறார் என்றரிய அருகில் வந்து கவனிக்கலானார்.
நபி சொன்னார்கள்,

'நல்ல பண்போடு வியாபாரம் செய்பவர் சுவர்க்கத்தில் என்னோடு இருப்பார்.'

'நல்ல பண்போடு பொருளை வாங்குபவ‌ர் சுவர்க்கத்தில் என்னோடு இருப்பார்.'

'விற்பவரும் திருப்தி அடைந்து வாங்குபவரும் திருப்தி அடையும்
வியாபாரம்தான் மிகச் சிறந்த (பரக்கத்துகள் பொருந்திய) வியாபாரம்
'.

வந்தவர் அசந்து விட்டார். இவ்வளவு சிம்பிளா,மென்மையாய்,அன்பாய்
எவ்வளவு பெறுமதியான விஷயத்தைச் சொல்லி விட்டார். யாரையும் கண்டிக்க
வில்லை, ஆனால் இருவரையும் ஒற்றுமைப் படுத்தி விட்டது அல்லாமல் மனித
சமுதாயத்திற்கே 'நல்ல வியாபார உத்தி'யைக் கற்றுத் தந்து விட்டாரே,
இவரல்லவா மனிதர் என்றவாறு நபியின் கை பற்றி மன்னிப்புக் கேட்டு
இஸ்லாத்தைத் தழுவினார் (ஹயாத்துஸ்ஸஹாபா).

(ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

Monday, October 25, 2010

தூசி தட்டிச் சில கவிதைகள்

தமிழ்மண வானில் இன்று கவிதா நட்சத்திரத்தன்று கவிதையைப் பத்தி எழுதலன்னா, கவிதையார்வலர்கள் கோவிச்சுக்குவாங்க இல்லையா, அதனால‌ இந்தப் பதிவு.

சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போதுதான் நாம் சாகசங்கள் புரிவதும் நமக்குள் ஒரு
சக்தி இருப்பது தெரிவதும் சாத்தியமாகிறது. இன்று தமிழ் வலைப்பூக்களின்
காரணத்தால் தமிழை மறக்காமல் 'தமிழோடு உறவாடி'ப் பொழுது போக்க முடிகிறது.

ஆனால் அன்று,

'இரவுத் தாரகை நிலாவே நீ
பகலில் வந்தால் என்னவோ
உன்னைக் கண்டால் சூரியனைக் காணோம்
சூரியனைக் கண்டால் உன்னைக் காணோம்
என்ன இருவரும் கண்ணா மூச்சி ஆடுகிறீர்களா' :)

இதுதாங்க நா வாழ்க்கையிலேயே முதன்முதலா எழுதுன கவிதை. ஸ்கூல்ல நடத்துன
கவிதைப் போட்டியில் கலந்து கொள்வதற்காக எழுதுனது. 'இயற்கை எழில்' தலைப்பில்
எழுதிய கவிதையின் தொடக்க வரிகள். அன்று முதல் பரிசும் கெடச்சதனால ஒரு
கவிஞன் உருவானான். :)

அதன் பிறகு சில குழுமங்கள் நடத்திய கவிதைப் போட்டிக்காக சில கவிதைகள்
எழுதி 'கவிஞன்'கிற நெனப்ப தக்க வச்சதுண்டு. அதில் ஒன்று 'தட்ஸ் தமிழில்'
கூட‌ வெளிவந்தது.

கவிதைகளில் 'ஹைக்கூ' வகை ரொம்பப் பிடிக்கும் என்பதால் அது மாதிரி எழுதிப்
பார்த்ததுண்டு. அவைகளில் சில,


வீட்டிற்குள் சண்டை
அங்கும் சாதிப் பிரச்னை
ஆண்சாதிக்கும் பெண்சாதிக்கும்

-‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍--------------------------------

கத்தியின்றி ரத்தமின்றி
உள்குத்தும் உள்காயமும்
தமிழ் வலைப்பதிவர்கள்'

-‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍--------------------------------

வறண்ட பிரதேசத்திலிருந்து
ஒரு வற்றாத ஜீவ நதி
இதயம் பிழிந்த கண்ணீர்


அதையேன் கேட்குறீங்க, 'வெண்பா' கூட முயற்சித்ததுண்டு.

கிட்டப் பார்வைக்கு எந்த லென்ஸ் என்பதைப் பரீட்சையில் ஞாபகம் வைப்பதற்காக
'கிட்டப்பா குழியில் விழுந்தார்' என்று ஸ்கூல்ல‌ சொல்லித் தந்தார்கள். அதையே
'வெண்பா'வாக எழுத நினைத்து,

எட்டப்பர் எழுதிக் குவித்த ஏட்டிலே
கிட்டப்பர் குழிவிழுந்தார் காண்

என்று எழுதியதுண்டு.

'இதெல்லாம் வெண்பா வா ...ன்னு' புலவர்கள் வையக்கூடாது.
ஒரு முயற்சிதான், பிறகு அதைத் தொட(ர)வில்லை. 'ஹைக்கூ' வகை
முயற்சிகள்தாம் இன்றும் தொடர்கிறது.

ஹைக்கூவில் மிக மிகப் பிடித்தது, கவிக்கோ எழுதிய,

கல்லின் மீது பூவை எறிந்து
பூஜை செய்து வந்த மக்கள் அன்று
ஒரு பூவின் மீது கல்லை எறிந்தார்கள்.

தாயிப் நகர சம்பவத்தை ஒரு சில வார்த்தைகளில் என்ன அழகாய்ப்
படம் பிடிக்கிறார் பாருங்கள்.

இடையில் சில வருடங்கள் வெறுமனே ஓடிவிட்டன.
இன்று கவிதை,கட்டுரை மூலம் உங்களுடனே. நாளை எப்படியோ.

இன்னும் எழுதலாம்தான் (கவிதையைச் சொல்லவில்லை, கவிதை பற்றி
எழுதுவதைச் சொன்னேன்).ஆனால் நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது.
இது பற்றி இன்னும் படிக்க நினைப்பவர்கள் இதற்கு முன் நான் எழுதியதையும்
படித்துப் பாருங்கள். இதை விட சுவாரசியமாய் இருக்கும். அது,
'நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை'

Wednesday, October 20, 2010

சண்டையைத் தவிர்த்த சமயோசிதம்

அரேபியாவின் ஏதோவொரு வீட்டில் ஒருநாள் கூட்டம் கூடியிருந்தது. பயணத்தினூடே
அங்கு வந்து ஒரு பெரியவர் என்ன கூட்டம் என்று விசாரித்ததில் 'தகப்பனார் தனது
மூன்று பிள்ளைகளுக்கு பின்வருமாரு உயில் எழுதி வைத்து இறந்து விட்டார். அதாவது
சொத்தில் பாதி முதல் பிள்ளைக்கும், நாலில் ஒரு பகுதி இரண்டாவது பிள்ளைக்கும்,
மூன்றாவது பிள்ளைக்கு ஐந்தில் ஒரு பகுதியும் கொடுக்கப் பட வேண்டுமென்று
எழுதப்பட்டிருக்கிறது. எல்லாம் பிரச்னையின்றி பங்கு போட்டுக் கொடுத்தாகி விட்டது.

ஆனால் இந்த 19 குதிரைகளை மட்டும் பிரித்துக் கொடுக்க முடியவில்லை. குதிரையை வெட்டுவதற்கும் தயாரில்லை, என்ன செய்வதென்றே தெரிய வில்லை. இதனால்
மூவரும் அடித்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது என்றனர். உடனே பெரியவர்,
'அவ்வளவுதானா, அப்ப என்னுடைய குதிரையையும் அதில் சேர்த்து விடுங்கள். இப்போ
20 குதிரைகள். முதல் பிள்ளைக்கு 10, இரண்டாவது பிள்ளைக்கு நாலில் ஒரு பகுதி 5,
மூன்றாவது பிள்ளைக்கு ஐந்தில் ஒரு பகுதி 4, ஆக மொத்தம் 19 முடிந்தது, என்னுடைய
குதிரையை எனக்குத் தந்து விடுங்கள் என்று சொல்லியவாறு நடையைக் கட்டினார்.

******************************************************************************

ஒருவன் ஒரு பெரியாரைத் திட்டிக் கொண்டிருந்தான், அவன் வலப்புறமாக வந்து
திட்டினால் அவர் இடப்புறம் திரும்பினார், அவன் இடப்புறம் வந்து திட்ட, அவர்
வலப் புறம் திரும்பினார். அவனும் கடுப்பாகி முகத்திற்கு நேராக வந்து 'ஏன்யா,
அப்பயிலிருந்து ஒன்னத் திட்டுறேனே ஒனக்குத் தெரியலயா, இல்ல திட்டுறது
ஒரைக்கலயான்னு கேட்க, பெரியவர் அழகாக பதில் சொன்னார்,
'நானும் அப்போதிலிருந்து உன்னை மன்னித்துக் கொண்டிருக்கிறேனே,
அது உனக்குத் தெரியவில்லையா?'. அடடா, இவரல்லவா மனிதர். இவர் போல்
யாவரும் இருந்தால், எத்துணை அழகும் அமைதியும் பெறும் இவ்வுலகம்.

******************************************************************************

சென்ற வாரம் நடைபெற்ற சம்பவம் இது. பள்ளியில் மக்ரிப் தொழுது விட்டு
வெளியில் வந்தேன். தெரிந்த ஒரு பையன் 'பாய் டீ சாப்பிடலாமா' எனக் கேட்க,
நான் 'வேணாந் தம்பி, இப்பத்தான் குடிச்சேன்' என்று சொல்லிவிட்டு நகர,
என்னை நோக்கி ஒரு பெங்காலி பையன் வேகமாக வந்து, கை கொடுத்த பின்
அவனை உமக்குத் தெரியுமாவெனக் கேட்க, ஆம் தெரிந்த பையன் தான் என நான்
சொல்ல, அவன் எனக்குத் தரவேண்டிய பணத்தைத் தராமல் ஏமாற்றி விட்டான் எனச்
சொல்ல, நானும் 'அப்படியா, அவனைக் கூப்பிடு, நான் பேசி வாங்கித் தருகிறேன்'
என்று முந்தையவனின் பக்கம் திரும்ப, ஆள் எஸ்கேப்பு.

பெங்காலியும் தமிழ்ப் பையனைத் தொடர்ந்து சென்று கண்டு,பிடிக்க, அவன் கையைத்
தட்டி விட்டு ஓட, அதுவும் வேகமாக வரும் வாகனங்களைக் கூடத் துச்சமென மதித்து
ரோட்டைக் கிராஸ் செய்து ஓடுவதைப் பார்த்த எனக்குக் கோபம் வந்து நானும் துரத்த,
நான் ஓடுவதைப் பார்த்து என் நண்பனும் ஓடி வர ஒரு வழியாக அவனைப் பிடித்தோம்.

பிடித்த மாத்திரத்திலேயே நான் கேட்ட கேள்வி 'ஏண்டா ஒடுற'.
இதுவரை மரியாதையாகப் பழகிய நான் ஒருமையில் கேட்டதைச் சகிக்காத அவன்
கொஞ்சம் திகிலாகி, 'என்னது? என்னைய்யாக் கேட்டீங்க, நீங்க நம்மாளு அவன்
பெங்காலி, அவனுக்குப் போய் சப்போர்ட்டு பண்றீங்களே, இது நியாயமா?'.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. எதுக்கு ஓடுற, எவ்வளவு கொடுக்கணும் ,
எதுக்குக் கடன் வாங்குன ?. 'கடனா, இல்லண்ணே, நெட்டு போனு, அவன் கிட்ட
பேசுனேன். அதுல மீதி,அஞ்சு ரூவா கொடுக்கணும், ஆனா அவன் இருவது ரூவா
கேக்குறான். அதனால கோவத்துல நான் கொடுக்கவே கூடாதுன்னு இருந்தேன்'.

அடப்பாவிகளா, வெறும் அஞ்சு பத்துக்கு இப்படி உயிர மதிக்காம ஓட வச்சிட்டீங்களடா.
சரி, அஞ்சு ரூவாதானே, மொதல்ல அதக் கொடு, மத்ததப் பேசித் தீத்துக்கலாம்னு
சொல்லி, அவனும் அஞ்சு திர்ஹத்தைக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டே
பெங்காலி சொன்னான், 'ஓக்கே, மன்னிச்சுட்டேன்'.

எனக்கோ கோபம் பெங்காலியின் மீது திரும்பி, 'டேய், இந்த சல்லிக்காசு பெறாத
விஷயத்தைப் பெருசாக்கிட்டீயே, அது மட்டுமல்ல, அஞ்சு ரூவாய்க்குப் பதிலா இவனை
இருவது ரூவாக் கேட்டு எதுக்குடா தொல்லை பண்ணினாய்'னு கத்த, பெங்காலியும் ஏதோ
சொல்ல வரும் போது, நண்பர் அவனைத் தடுத்து, என் தோள் மீது கை போட்டவாறு
கூட்டி வந்து விட்டார். பிறகு மெதுவாக அந்த உண்மையைச் சொன்னார்.

அதாவது காசு கொடுக்க வேண்டிய பையனை நான் சத்தம் போடும் நேரத்தில் இவர்
பெங்காலியிடம் 'உனக்கு எவ்வளவு தரணும்' எனக் கேட்டு இருபதையோ அல்லது பத்து திர்ஹத்தையோ கையில் தள்ளி 'உஸ்கு மாஃப் கர்தோ' (அவனை மன்னித்து விடு)
என்று சொல்லியிருக்கிறார்.

ஓ! அதுனாலதான் காட்சிகள் டக்கென்று மாறியதோ!

இந்த டெக்னிக்கு நமக்குத் தெரியாமப் போச்சே :)

அடுத்த நாள் நம்மாளைச் சந்தித்த போதும் இதைத்தான் மீண்டும் கேட்டான்.
'ஏம்பாய், நீங்க நம்மாளு, அவனுக்குப் போய் சப்போட்டு பண்ணீங்க'.
நான் சொன்னேன், 'இல்ல தம்பி, இனத்தின் மீது பாசம் இருக்க வேண்டும் தான்.
ஆனால் இனத்தைச் சார்ந்தவன் தவறு செய்யும் போது அதைத் தட்டிக் கேட்காமல்
அவனுக்கு சப்போர்ட் செய்தால் அவன் 'இனவெறி' பிடித்தவனாகிறான் என்று நம்ம
நபி சொல்லியிருக்காங்களே தெரியாதா ?

******************************************************************************

எம்பெருமானார்(ஸல்) அவர்களின் வாலிப வயதில் நடைபெற்ற சம்பவம் ஒன்றும் நீங்கள்
தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நபியாவதற்கு முன்னொரு நாளில், இறையில்லமான கஃபத்துல்லாஹ்வைப் புனரமைத்த பின் மக்காவின் குரைஷிகள் அதில் 'ஹஜருல் அஸ்வத்'
கல்லைப் பதிப்பிக்கும் போது ஒரு பெரிய சண்டை ஏற்படும் சூழல் உண்டானது.

குரைஷிகளின் மூன்று குலத் தலைவர்களும் அந்தக் கல்லைப் பதிப்பிக்கும் வாய்ப்பு தம‌க்கே
தரப்பட வேண்டுமென்று வலியுறுத்த, நிலைமை மோசமாக, ஒருவர் சொன்னார், 'இந்தப்
பாக்கியம் யாருக்குக் கிடைக்க வேண்டுமென்பதை, இப்போது கஃபாவுக்குள் வரும் நபரே
முடிவு செய்யட்டும். இதனை ஆமோதித்த அனைவரும் ஆவலாய் கஃபாவுக்குள் நுழையும்
நபரை நோக்கி தமது பார்வையைச் செலுத்தினர்.

அங்கே வந்து கொண்டிருந்தது நமது கண்மணியான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
மக்கள் அவர் மீது அன்பும் கண்ணியமும் வைத்திருந்த நேரம் அது.. அவரின் முடிவுக்குக்
கட்டுப் படுவதாக மனப் பூர்வமாக ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் செய்த தீர்ப்பு என்ன
தெரியுமா, தமது தோளில் அல்லது தலையில் இருந்த துண்டை எடுத்து கீழே வைத்து
அதன் மேல் 'ஹஜருல் அஸ்வத்' கல்லை வைக்குமாறு சொன்னார்கள். அவ்வாறு
வைக்கப் பட்டதும், துணியின் நான்கு மூலைகளில் ஆளுக்கு ஒரு மூலையைப்
பிடிக்குமாறு மூன்று தலைவர்களிடமும் சொல்ல நான்காவது மூலையைத் தாமே
பிடித்துக் கொண்டார்கள். ஆச்சர்யமும் ஆனந்தமும் கொண்டாடியே அவர்களும்
கல்லைப் பதித்தனர்.வாழ்க நபிக‌ளின் திருநாமம் ; வளர்க‌ அவர்களின் திருப்பணி.

ஆக இறைவன் நமக்குத் தந்த புத்தி சாதுர்யத்தின் உதவியால் சமுதாய
ஒற்றுமைக்குப் பாடுபடுங்கள் சகோதரர்களே.

வஸ்ஸலாம்.

Monday, October 18, 2010

சமாதானம் செய்து வைக்கும் வல்லமை தாராயோ இறைவா

ஒரு மனிதனைக் காப்பாற்றுவது முழு மனித சமுதாயத்தைக் காப்பதற்குச் சமம்.
ஒரு மனிதனைக் கொலை செய்வது முழு மனித சமுதாயத்தையும் கொல்வதற்குச் சமம்.
புத்தியோ சக்தியோ அது இந்த மனித சமுதாயத்திற்காகப் பயன்படவில்லையெனில்
அதனால் என்ன பிரயோஜனம். இறைவன் நமக்குத் தந்த திறமைகளை வைத்து உலக
ஒற்றுமைக்கு ஏதாவது செய்ய வேண்டும் தோழர்களே!.

கொஞ்சம் அன்பும் கொஞ்சம் சமயோசிதமும் கொஞ்சம் நகைச்சுவை உணர்வும்
இருந்தால் போதும் சண்டையை விலக்கி சமரசம் ஏற்படுத்தவோ அல்லது கோபத்தின்
கடுமையைக் குறைக்கவோ முடியும்.

'சண்டையைத் தவிர்த்த நகைச்சுவை உணர்வு' என்ற தலைப்பில் ஜாலியாக எழுத
ஆரம்பித்து இப்போ கொஞ்சம் சீரியஸ்னெஸ்ஸும் கலந்துடுச்சு.

மொதல்ல நகைச்சுவை எப்படி தடுத்த‌தென்று பார்க்கலாம்.

தமிழகத்தின் ஏதோவொரு ஓட்டலில்,வழக்கமாக வரும் வாடிக்கையாளர் அன்று
பசியோடு வந்து,'சர்வர், சூடா ஏதாவது கொண்டு வா' எனக்கேட்க,கேட்டவர் மீது
என்ன கோபமோ, சர்வரும் சூடான நெருப்புக் கங்குகளைத் தட்டில் ஏந்தி வர,
வந்த கோபத்தை அடக்கி, பந்தாவாக பீடியை அதில் பற்ற வைத்து வெளியில் வந்த
கதை எல்லோருக்கும் தெரியுமென்று நினைக்கிறேன். அது போன்று, சண்டை வராமல்
தடுக்க நகைச்சுவை உணர்வு ரொம்ப அவசியம்.

சென்னை பேச்சிலர் குடியிருப்பில், நாங்கள் தங்கியிருந்த காலம். ஒருநாள்,
எங்களிடையே இருவருக்குள் பிரச்னை ஏற்பட்டு ஒருவன் மற்றவனைத் திட்ட,
திட்டப்பட்டவன் (அபூ), திட்டியவனை நோக்கி, 'மவனே! அழகாயிருக்கியேன்னு
சும்மா விடுறேன்னு' சொல்ல, அதற்கு அவன் புன்னகைக்க, முடிவு சுபம்.

இன்னொரு நாள், காலைக்கடனை நிறைவேற்ற, கியூவில் நின்றோம். சுகப் பிரசவம்
முடிந்து வெளியில் அபூ வந்தவுடன், எனக்கு முன் நின்றவன் உள்ளே சென்றவுடனேயே
திரும்பி 'டேய் அபூ, ஒழுங்கா தண்ணி ஊத்துனா என்னடா'ன்னு சத்தம் போட,
அபூ சொன்னான் கூலா, 'ம்ஹூம், என்னை விட்டுப் போன எதப் பத்தியும் நான்
கண்டுக்கிறதே இல்லை'. :), எல்லோரும் சிரித்ததில் நெலமை கூல்.

அபுதாபி பெங்காலி டீக்கடையில், நானும் மற்ற இரு நண்பர்களும் டீ குடித்துக்
கொண்டிருந்தோம். எங்களுக்கு எதிரில் ஒரு பாகிஸ்தானி பட்டானும் அமர்ந்திருந்தார்.
அச்சமயம் நண்பருக்கு போன் வந்தது. பேசிய பிறகு செல்போனை சட்டைப் பாக்கெட்டில்
வைப்பதைப் பார்த்த பட்டான் சொன்னார்,

'உதர் நை ரக்கோ, ஓ தில் கு கராப் கரேகா (அங்க வக்காதே,அது இதயத்தைப் பாதிக்கும்)'

பொதுவாக பட்டானின் பேச்சு கொஞ்சம் அழுத்தமாக இருக்கும். இதைக் கேட்டவுடன்
நண்பரின் முகத்தில் கோபத்தின் ரேகை படர, இதை கவனித்த நான் பட்டானைப் பார்த்துச் சொன்னேன், 'ஆப்கே பாக்கெட்மே ஜோ பைசா ஹே,உஸ்கு பி உதர் நஹீ ரக்னா,கியூன்கே
பைசா பி தில்கு கராப் கர்த்தாஹே'(உம்முடைய பாக்கெட்டிலே பைசா வைக்கப் பட்டிருக்கே,
அதையும் அங்கே வைக்க வேண்டாம், ஏனென்றால் பைசாவும் மனச கெடுக்கும் சமாச்சாரம்)

இதைக்கேட்டு கடையிலிருந்தோர் சிரிக்க, பட்டானும் பைசாவைப் பற்றி ஜாலியாக
விவரிக்க, நண்பர்களாகி வெளியே வந்தோம். ஆதலால் சகோதரர்களே, நகைச்சுவை
அன்பை வளர்க்கட்டும். சத்தமாகப் பிரியும் காற்றும் கூட‌ சகல‌ இறுக்கத்தையும் கலகலக்க வைக்கும்தான் ஆனால் அது அன்பை வளர்க்காது :-)))

அடுத்து, சமயோசிதம் எப்படி சண்டையைத் தவிர்த்தது என அடுத்த பதிவில் பார்ப்போம்.

Monday, October 11, 2010

திருவள்ளுவர் நபியா இல்லை கவிஞரா

‍‍‍
இது ஒரு ஆராய்ச்சிப் பதிவல்ல மாறாக ஒரு எண்ணவோட்டப் பதிவு.
மனிதர்கள் வாழ்ந்த எல்லாப் பகுதிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேலாக தீர்க்கதரிசிகள்
அனுப்பப் பட்டுள்ளனர் என்பது இஸ்லாம் கூறும் உண்மை. இந்தியப் பகுதியின் மிகப்
பெரிய நபியாக 'மஹா நுவு' என்றழைக்கப்பட்ட நூஹ்(அலை) என்பது தெரிய வருகிறது.
இது பழைய வேதப் புத்தகங்கள் என அழைக்கப் படும் ரிக்,சாம‌,யஜூர் மற்றும் அதர்வண வேதங்களில் காணப்படும் 'வெள்ளப் பிரளயம்', பைபிள் மற்றும் குர்ஆனிலும் விவரிக்கப் பட்டுள்ளதன் மூலம் கிடைத்த ஒரு அனுமானம்.

பழைய வேதப் புத்தகங்களை 'சுஹுபுகள் (ஏடுகள்)' எனவும், மூசா (Moses),தாவூது (David),
ஈசா (Jesus),முகம்மது (அலை) நபிகளுக்குக்குக் கொடுக்கப் பட்டவை நான்கு வேதப் புத்தகங்களாகவும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. இவை பற்றிய ஆராய்ச்சிப் புத்தகங்கள்
'அபூ ஆசியா' போன்றோரால் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. எனினும் இந்தப் பதிவு எழுதத் தூண்டியது, இயல்பான நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரரான 'இதயம் பேத்துகின்ற'
பதிவர் ஜவஹரின் முயற்சியில் உருவான 'உருப்படு' புத்தக அறிமுகப் பதிவுக்குக் கொடுக்கப் பட்ட தலைப்பு ஏற்படுத்திய சிந்தனை.

ஒழுக்க நெறி கருத்துக்களுக்காகவும் சீரிய சிந்தனைகளுக்காகவும் திருவள்ளுவரையும்,
புத்தரையும் நபியாகக் கருதுவோரும் மறுப்பவரும் நம்மிடமுண்டு. பள்ளிக்கூடங்களில்
மனப்பாடம் செய்த குறள்கள் ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ சினிமாப் பாடல்களில்
வந்தவை மட்டும் சரியாக நினைவில் இருக்கின்றன. அதில் ஒன்றுதான்,
'பல்லாண்டு வாழ்க' வில் வரும் 'ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம்' பாடலின் ஆரம்ப வரிகள்,

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்'
'என்பும் உரியர் பிறர்க்கு'

'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்'
'மெய்வருத்தக் கூலி தரும்'

திருவள்ளுவரை நபியாகக் கருதிய நான், 'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்'
என்ற வரியைச் சிந்தித்த போது 'தெய்வத்தால் கூட செய்ய முடியாத காரியத்தை ஒரு
மனிதனின் முயற்சி செய்து விடும் என்ற அர்த்தம் தொனித்ததால் 'நிச்சய‌மாக இவர்
நபியாக இருக்க முடியாது' என்ற முடிவுக்கு வந்தேன். பின்னொருநாளில் இந்தக்
குறளுக்கு யாரோ ஒருவர் இப்படி கருத்துரை எழுதியிருந்த‌தைப் படித்த போது
'அட இது நல்லாருக்கே' எனத் தோணியது.

"தெய்வத்தின் விதியில் இவனால் முடியாது என்று எழுதப்பட்டு இருந்தாலும்,
இறையிடம் அழுது பிரலாபித்து விதியை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடியும்",

இக் கருத்து நம் ஹதீஸ்களில் காணப்படும்,

'தர்மம் தலை காக்கும்' (சதகா ரத்துல் பலா)
'பிரார்த்தனை விதியை மாற்றும்' (துஆ ரத்துல் களா)

கருத்துக்களுக்கு ஒட்டி வருவதால் மேற்கண்ட குறளின் மீது மீண்டும் ஒரு பிடிப்பு வந்தது.
மேலும் 'அகர முதல‌ எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு' எனும் குறளில் வரும்
ஆதி பகவன் என்பது ஆதம் நபியைக் குறிப்பதாகக் கருத இடமுண்டு. எனவே திருவள்ளுவர்,
நபியாக இருக்கலாம் அல்லது 'வேதங்களை'த் தொகுத்த வியாச முனிவரைப் போல் ஒரு
அறிஞராக இருக்கலாம் அல்லது நல்ல கருத்துகளைத் தொகுத்து வெண்பா வடிவில் வழங்கிய கவிஞராக இருக்கலாம் அல்லது ... அல்லது ..... அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

'அபூ ஆசியா'வின் புத்தகத்தில் படித்த ஞாபகம், குர் ஆனில் 'துல் கிஃப்ல்' என்ற நபியின்
பெயர் வருகிறது. லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களில் வெறும் 25 நபிமார்கள் பெயர்
குர்ஆனில் வருகிறது, அவற்றுள் ஒன்று 'துல் கிஃப்ல்'. கபிலைச் சார்ந்தவர் என்று பொருள்.
இது 'கபில'வஸ்துவைச் சார்ந்த புத்தரைக் குறிப்பதாகச் சொல்கிறார் ஆசிரியர்.

ஆக இவர்கள் நபிமார்களா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை
(தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்). என்றாலும் தசாவதாரி சொன்னது மாதிரி,

'நபியாக இருந்தால் நன்றாயிருக்கும்' :)

Wednesday, October 06, 2010

'உவ்வே' கூட 'வாவ்' எனத் தெரிய‌

பதிவுலகில் சினிமா மற்றும் பதிவுலக சண்டை/சவுண்டு பதிவுகளுக்கு அடுத்ததாக
நகைச்சுவைப் பதிவுகள் அதிகம் பார்வையிடப் படுகின்றன. த‌ம் பதிவுகள் எல்லோராலும்
படிக்கப்பட வேண்டும் என்றுதான் யாவரும் விரும்புவர். என்றாலும் நகைச்சுவை
எல்லோருக்கும் வருவதல்லவே. நமக்கு சிரிப்பை வரவழைக்கும் எந்தவொரு விஷயமும்
அடுத்தவருக்கும் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இன்றைய உலகம்
அப்படி. முன்பெல்லாம் மரத்தடிகள் மற்றும் திண்ணைகள்தாம் உரத்து சிரிக்க வைக்கும்
இடமாக இருந்து வந்தன. இன்றோ தட்டினால் திறக்குது நகைச்சுவைக்கென்றே
தனி உலகம்,தனி CD,வீடியோ மற்றும் பதிவுகள்.

நகைச்சுவைப் பதிவுகளில் Copy/paste,Forwarded,SMS ஜோக்குகள்தாம் அதிகம் எனினும்
குசும்பன் போன்ற ஒரு சிலரின் 'கலாய்த்தல்'கள் மற்றும் குசும்புகள் ரசிக்க வைப்பவை.
அந்த அளவுக்கெல்லாம் நம்மால் சிரிக்க வைக்க முடியாது. ஏதோ அனுபவங்களைச்
சுவை படச் சொல்ல விழைகிறேன். அது கொஞ்சமா புன்னகைக்கவும் கொஞ்சமா
'புத்தி'க்கவும் வைத்தாலே போதும், புண்ணியமாப் போகும் இந்த பொல்லாப் பதிவுலகத்துல.


எங்க ஸ்கூல் வாத்தியார் சொன்ன 'கப்'பர் சிங் ஜோக்கை முதலில் சொல்கிறேன். அவர்
தமது நண்பர் தர்பார் சிங் வீட்டுக்குப் போயிருந்தப்ப 'நம்பர் டூ' வந்ததால் நண்பர் வீட்டு டாய்லெட்டுக்குள் சென்றார். அங்கே வெஸ்டர்ன் டைப் கக்கூஸை முதன் முதலாய்ப்
பார்த்ததால் எப்படி 'நம்பர் டூ' போவதென்று அறியாமல் முழித்திருக்கிறார். பின்னே
ஏதேதோ யோசனை செய்து விட்டு 'பிளாஸ்டிக் ஜக்கிலே' ஏந்தி ஜன்னலுக்கு வெளியே
எறிவது (!?!) என்று முடிவு பண்ணி... கடைசியில் எறிந்தே விட்டார். பிறகு என்னாச்சு
தெரியுமா ? ..... Jug மட்டும் ஜன்னலுக்கு வெளியே போய் விழுந்தது :-)

'சீச்சி' எறிதலில் தோல்வியுற்ற சிங் வேற வழியின்றி நண்பரை அழைக்குமாறு ஆகி விட்டது.
அவரும் உள்ளே வந்து பார்த்து அசந்து விட்டார். அழைத்தவரோ ஆடிப் போனார். நண்பரும் 'சிங்'கமல்லவா, 'வாரே! வாஹ் ஜி' என்று கர்ஜித்து கை கொடுத்த பின் கேட்டார்,

'எப்படியப்பா 'BAT MAN' போல சுவற்றின் மேலேறி 'Shit' டினாய் ?!



இந்தப் பதிவு மேற்கண்ட சிரிப்பைச் சொல்ல வேண்டியதற்காகவ‌ல்ல, இது போன்ற
ஒரு சம்பவம் எனக்கும் ஏற்பட இருந்து தப்பித்ததைச் சொல்வதற்காகத்தான்.


சென்ற மாதம் உம்ராவுக்காக மதீனா சென்றிருந்தேன் அல்லவா, அப்போது ஒரு நண்பரைக்
காண அவர் தங்குமிடம் செல்ல வேண்டி வந்தது. அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது
'இயற்கை அழைப்பின் அறிகுறி' தெரியவர, அங்குள்ள டாய்லட்டிற்குள் நுழைந்தேன்.
டாய்லட் நம்மூர் டைப்புதான் என்றாலும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. அதாவது தண்ணீர் தெரியக்கூடிய வட்டப்பகுதி பிளாஸ்டிக்கால் மூடப்பட்டிருந்தது. ஆஹா ஒன் வே டிராபிக்
மூடப்பட்டுக் கிடக்கே, ஏதும் மராமத்துப் பணி நடைபெறுதோவென நினைத்து நாமளும்
ஒன்வே மட்டும் திறந்து விட்டுத் திரும்பியாச்சு. அவரிடமும் அது பற்றிக் கேட்க வில்லை.


மற்றொரு நாள் இன்னொரு நண்பரின் வீட்டுக்குச் சென்றால், அங்கேயும் அதே நிலை.
ஒரு வேளை பிளாஸ்டிக் கப்பை வெளியே எடுத்து வைத்து விட்டு, உட்காறனுமோ ?
'அடடா! இப்ப என்ன செய்யுறது ? நம்ம கப்பர்சிங்கின் நிலமை நமக்கும் வந்திடக்
கூடாதேங்கற கவலை வந்ததால், வெளியே வந்து நண்பரிடம் ரூட்டு கேட்க, அவரும்,
ஏதோவொரு பைக் விளம்பரத்துல வருமே அது மாதிரி 'நோ ப்ராப்ளம், Do it as usual
வழக்கம் போல போங்கன்னு சொல்ல , உள்ளே சென்று தயங்கித் தயங்கி பரிசோதித்துப்
பார்த்தால், 'வாவ், போவதே தெரியவில்லை, லஞ்சம் பெறுபவரின் கை போல ஆங்கே
கொஞ்சமும் மிஞ்சவில்லை போங்க. நண்பரிடம் விசாரித்ததில் பிளாஸ்டிக் கப்பின் மேல் மூடிக்கடியில் spring இருக்கிறதாம். என்னா டெக்னிக்கு :‍-)

இது போல் வேறு எங்கும் பார்த்ததில்லை, நம்மூர்களிலும் இது போன்று இருந்தால்
நல்லாயிருக்குமே என்ற எண்ணம் வந்தது, கூடவே பயமும். ஏன் தெரியுமா, வேறென்ன,
எல்லோர் வீட்டிலிருந்தும் டி.வி. விளம்பர சத்தம் இப்படியல்லவா கேட்கும்,

"பொத் பொத்தென்று விழுந்ததெல்லாம் மாயமாய்ப் போனதே"
"மத்த மத்த கம்பெனிகள் மயங்கி மயங்கி நின்றனவே" :-)



டிஸ்கி :

படிச்சுட்டு 'மொத்து மொத்து'ன்னு மொத்த நெனக்கிறவங்க மைனஸ் ஓட்டையும்,
ஓட்டைக் 'குத்து குத்து'ன்னு குத்த நெனக்கிறவங்க ப்ளஸ் ஓட்டையும், ஏதாவது பேச நெனக்கிறவங்க பின்னூட்டமும் போடுங்க. அப்பத்தான் நான் எழுதுறது எப்படீன்னு தெரியும்.

(இ.அ. அடுத்த வார பதிவில் சந்திப்போம்)

Tuesday, September 28, 2010

ஜின் பள்ளத்தாக்கில் இன்'ஜின்' ஓடிய அதிசயம்

'வாதியே ஜின்' (பேய் பள்ளத்தாக்கு) என்று அழைக்கப்படும் இடத்திற்குச் சென்றோம்.
இது நம்ம‌ மக்கள்ஸ் வைத்த பெயர். சவூதி அரசாங்கம் வைத்த பெயரோ 'குலைல்'.
(குலை நடுக்கம் மறுவியதோ ? :)

மதீனாவிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில், மலைகளால் சூழப்பட்ட பகுதி. அந்தப்
பகுதியின் அதிசயம் என்னவென்றால் காரை நிறுத்தி 'நியூட்ரலில்' வைத்தால், அது
தானாக வேகமெடுத்து 120 கி.மீ. வேகத்தில் சுமார் பத்து கி.மீ. தூரம் வரை ஓடி
வேகம் படிப்படியாகக் குறைந்து பின் நின்று விடுகிறது. இத்தனைக்கும் அது
செங்குத்தான பகுதியும் அல்ல, சமதள ரோடுதான். அந்த இடத்தில் ஒரு
'ஆச்சர்யக்குறி' போர்டு வைக்கப் பட்டிருக்கிறது. அங்கேயுள்ள 'ஜின்கள்'
காரைத் தள்ளிவிடுவதாக நம்பப் படுகிறது.

உஹதில் லுஹர் தொழுதுவிட்டு அங்கு பயணமானோம். எங்களுக்கு அந்த இடம்
எதுவென்று சரியாகத் தெரியாததால் ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி 'சோதனை'
செய்து பார்த்தோம். ம்ஹூம். அது ரமலான் என்பதால் நான் சொன்னேன்,

'ஒரு வேளை ஜின்களெல்லாம் நோன்பு பிடித்து விட்டுத் தூங்குதோ என்னவோ?' :)

இப்படியாகச் செல்கையில் மெதுவாக வந்த ஒரு காரைக் கண்டோம், அவர்களும்
எங்களைப் போல் அங்கு வந்த 'ஆர்வக் கோளாறுகள்' என்பதை அறிந்து விசாரித்த
போது 'ஆச்சர்யக்குறி' போர்டிலிருந்து ஆரம்பிக்குமாறு சொன்னார்கள். அங்கே
சென்று வண்டியை 'நியூட்ரலில்' வைத்தபின் ஸ்டியரிங்கைப் பலமாகப் பிடித்துக்
கொண்டார் டிரைவிங் நண்பர். ஆஹா, மெதுவாக நகர ஆரம்பித்த வண்டி இப்போ
'ரெக்கை கட்டிப் பறந்தது'. நானும் ஜின்கள் தெரிகின்றனவா என்று பார்த்தேன்.
ம்ஹூம். வண்டியும் ஒரே சீரான வேகத்தில் சென்று ஒரு சிறிய அணை இருக்கும்
பகுதியில் வந்து நின்று விட்டது.

இப்படி வரும் ஒவ்வொரு வண்டியையும் 'வேலமெனக்கெட்டுத்' தள்ளிவிடுமா எந்த
ஜின்னும், ஒரு வேளை காந்தப் புலமாக இருக்குமோ என்னவோ. ஆனாலும் இது ஒரு
ஜாலி அனுபவம்தான். நம்ம ஊராக இருந்திருந்தால் ஒரு கோயிலோ அல்லது தர்காவோ
முளைத்து உண்டியல் வைத்து காசு பார்த்திருப்பார்கள்.ஆனால் சவூதியோ இது போன்ற
மூட நம்பிக்கைகளை ஒழிக்க நினைப்பதால், இப்பகுதியில் எந்த அறிவிப்பையும்
வைக்கவில்லை, ஆச்சர்யக்குறி பலகையைத் தவிர. அப்படிப்பட்ட ஒரு பகுதி இருப்பதே
அங்குள்ள நிறைய பேருக்குத் தெரியாது.

திரும்பி வந்து கதைக்கையில் ஒரு நண்பர் தாம் ஜின்னைப் பார்த்துள்ளதாகச் சொன்னார்.
அவர் ஒரு பெரிய வாகனத்தின் (டிரைலர்) டிரைவர். கம்பெனி பொருட்களை எடுத்துக்
கொண்டு 'தபூக்' மற்றும் 'யான்பு' போன்ற ஊர்களுக்கு அடிக்கடி சென்று வருபவர். அப்படி
ஒருநாள் நள்ளிரவில் திரும்பும் வழியில் தூக்கம் மிகைத்து ரோட்டோரம் வண்டியை
நிறுத்திவிட்டுத் தூங்கும் போது கதவு தட்டப் பட்டதை உணர்ந்து எழுந்து டார்ச் அடித்துப்
பார்த்து விட்டு யாருமில்லாததால் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்த போது வண்டி பலமாகக்
குலுங்கியது. அதிர்ந்து எழுந்த போது, வண்டியை பல பேர் சேர்ந்து உலுப்பியது போல்
இருந்தததால் வெளியே எட்டிப் பா......ர்த்தார். ஒன்றும் தெரியாததால் பயந்து போய்
இடத்தைக் காலி செய்து அடுத்து வந்த ஊரில் வண்டியை நிறுத்தி கதையைச் சொன்ன
போது ஆங்குள்ளோர் 'ஆம், அது ஜின்னோட வேலைதான், இது போல் பல பேருக்கு நேர்ந்திருக்கிறது' என்றனர். (என்னங்க, பார்த்தார்னு சொன்னீங்க, ஆனா அவர் பார்க்கவே இல்லையேன்னு கேக்க நெனக்கிறது தெரியுது, வெயிட் வெயிட், ஒரு சோடா ப்ளீஸ்).

இப்படித்தான் ஒருநாள் பயணத்தின் வழியில் மாலை மங்கும் நேரத்தில், சூரிய
அஸ்மனத்திற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன் 'கைபர்' எனும் இடத்தில்
வண்டியை நிறுத்தி அங்குள்ள கோட்டையைப் பார்த்து வரும் எண்ணத்தில் கீழிறங்கினார்.
நபி(ஸல்) காலத்தில் யூதர்கள் கைபரில்தான் வசித்தார்கள். நபியுடன் செய்த
உடன்படிக்கையை மீறியதால் ஏற்பட்ட போரில் தோல்வியடைந்து யூதர்கள் அந்த
ஊரைக் காலிசெய்து விட்டு வேறிடம் சென்று விட்டாலும் வேறு யாரும் அங்கு சென்று
குடியேறாமல் பாழாகிப் போன இடம் அது. அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்லும்
பயணிகளுக்காக ஒரு மஸ்ஜித் ஹஜரத் அலீ (ரலி) பெயரில் கட்டப்பட்டது. அதுவும்
காடு மண்டிப் போய் சிதிலமடைந்து காணப் படுகிறது. அங்கு சென்ற நண்பர்,
கோட்டைக்குள் சென்றால் இரவாகி விடும் என்றெண்ணி பள்ளிக்குள் மட்டும் சென்று
வரும் எண்ணத்தில் உள்ளே நுழைந்து சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தினார்.

அப்போது யாரோ இருப்பது போல் உணர்ந்து அனிச்சையாக ஸலாம் சொல்ல, பதிலேதும் கிடைக்காத‌தால் பார்வையை ஆளிருந்த பகுதியை நோக்கிச் செலுத்தும் போதுதான் கவனித்திருக்கிறார், அந்த ஆள் தரையில் இல்லை ... மாறாக ஒரு தூணின் உச்சியில்
சம்மணமிட்டு அமர்ந்து இவரை நோக்கி, சிவந்த பெரிய தமது கண்களை விரித்து கோபமாகப்
பார்த்த உருவத்தைக் கண்டவுடன்,முதலில் இவர் 'ஜின்'னென்று உணரவில்லை .. மாறாக,
திருடனாயிருக்கும் என்ற எண்ணமும் அதோடு தனது பாக்கெட்டில் கம்பெனியின் பணம் பதினைந்தாயிரம் ரியால் இருப்பதும் நினைவுக்கு வர நைசாகப் பள்ளியை விட்டு வெளியில்
வந்து ஓட்டம் பிடித்து மூச்சிரைக்க, வண்டிக்குள் ஏறி ஸ்டார்ட் செய்த பின் தான் போன உயிர்
திரும்ப வந்த‌தாம். வந்து கதையைச் சொல்லிக் கதைக்கும் போதுதான் 'திருடர்களெல்லாம்
கிடையாது, அங்கே ஜின்கள் உண்டென்ற விஷயம்' தெரிய வந்ததாம். இது நடந்து ஐந்தாறு வருடங்களாகி விட்டன. மீண்டும் நண்பர்களுடன் அங்கே சென்று பார்த்த போது, அங்கே பள்ளிக்குள்ளேயும் செல்லமுடியாதவாறு முற்செடிகளுடன் கூடிய பாதை அடைபட்டிருக்கிறது.

**************************************************************************************

'ஹயாத்துஸ் ஸ‌ஹாபா'வில் ஒரு சம்பவம் வருகிறது. இஸ்லாத்திற்கு முன் அரபியர்கள்
பயணம் செல்லும் வழியில் ஏதும் மலை சார்ந்த பள்ளத்தாக்கில் இரவு தங்குமாறு
நேரிட்டால், இவ்வாறு சத்தமாக அறிவித்து விட்டுத்தான் தங்குவார்களாம். 'இப்
பள்ளத்தாக்கின் தலைவருக்கு எங்களின் ஒரு சிறிய வேண்டுகோள். நாங்கள் எங்களின் பயணத்தினூடே இங்கு இரவைக் கழிக்க நேரிட்டு விட்டது. சிரமத்திற்கு மன்னிக்கவும்,
காலையில் இடத்தைக் காலி செய்து விடுவோம். அது வரை எங்களுக்கு எந்தத்
தொல்லையும் நேர விடாமல் பார்த்துக் கொள்ளவும்'. இப்படி அறிவிக்கா விட்டால்
அங்குள்ள ஜின்கள் தொல்லை கொடுக்குமாம். இப்படித்தான் ஒருநாள் மனிதர்களின் குழுத்
தலைவர் அறிவிக்கையில், இருட்டிலிருந்து சப்தம் வந்தது,

يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ

"மனித‌, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து
செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால்,
(வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.(அல்குர்ஆன் 55:33)

என்ற குர்ஆன் வசனத்தைச் செவியுற்றனர். மேலும் தொடர்ந்த அச் சப்தம் 'நீங்கள் கவலைப்
படத் தேவையில்லை, இனி எங்களுடைய தொல்லைகள் இருக்காது. நாங்களெல்லாம் முஸ்லிம்களாகி விட்டோம், நீங்களும் மதீனா சென்று முகம்மத்(ஸல்) அவர்களின் கரம்
பற்றி இஸ்லாத்தில் இணைந்து கொள்ளுங்கள்'.

**************************************************************************************

ஓ! ஜின்களிலும் மத வேறுபாடுகள் இருக்கா என்று சிலர் யோசிப்பது தெரிகிறது. ஆம்.
அவைகளும் நம்மைப் போல்தான். ஆனால் மனிதனை விட்டு அகன்று மலை,காடு,தீவு
என்று வசிப்பவை. நாளை அவைகளுக்கும் கேள்வி கணக்கு, சொர்க்கம், நரகம் எல்லாம் இருக்கின்றன. மனிதர்களும் ஜின்களும் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகிப் போகும். அதைப் பார்க்கும் இறைவனை நிராகரித்தோர், நாமும் மண்ணாகிப்
போகக் கூடாதா என்று கதறுவார்கள்.

"நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் -
மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - செயல்களை - அந்நாளில்
கண்டு கொள்வான் - மேலும் நிராகரித்தவன் 'அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப்
போயிருக்க வேண்டுமே!' என்று (பிரலாபித்துக்) கூறுவான்." (அல்குர்ஆன் 78:40)

வஸ்ஸலாம்.

Thursday, September 23, 2010

கூடவே ஒரு ஜோக்கும்

(Bald header No angry please)

இந்த ஜோக்கை சற்றுமுன்தான் எனது மேலாளர் சொன்னார்.
புதிதாகக் கேட்டதால் நிறைய சிரித்தேன்.

(உம்ராவிற்குப் பின் உண்டான என் மொட்டைத் தலையைப்
பார்த்த பின் இந்த ஜோக் ஞாபகம் வந்திருக்கலாம்) .



If you have bald head at your front portion
then 'you are thinking too much' ;

If you have bald head at your back portion
then 'you are knowledgeable' ;

If you have both,
then 'you always think that you are genius'
:))


**********************************************************


தமிழில் சிரிக்க நினைப்பவர்களுக்காக,
-----------------------------------

தலையில் முன் வழுக்கை விழுந்திருந்தால் 'சிந்திப்பவர்' என்று அர்த்தமாம்.

வழுக்கை பின் தலையில் விழுந்திருந்தால் 'அறிஞர்' என்று அர்த்தமாம்.

அப்போ ரெண்டு பக்கமும் வழுக்கையாய் இருந்தால்

'தான் ஒரு பெரிய மேதாவிங்கற நெனப்புல' இருக்குறவராம் :)



டிஸ்கி :

யாருக்காவது சிரிப்பு வரவில்லையென்றால் இந்த ஜோக்கை அவரவர்
த‌ம் மேலாளர் வாய் வழி கேட்டால் ஒருவேளை சிரிப்பு வரக்கூடும் :)

Wednesday, September 22, 2010

இடையில் சுவாசிக்க சில கவிதைகள்

நேசிக்க நேசிக்க
நெகிழ்ந்து போகும் சொந்தம்
நீர்த்துப் போகும் உள்ளம்

யோசிக்க யோசிக்க‌
மெல்லத் திறக்கும் வழிகள்
மெய் சுமக்கும் பழிகள்

யாசிக்க யாசிக்க‌
வீங்கிப் போகும் வரவு
வீழ்ந்து போகும் உறவு

வாசிக்க வாசிக்க‌
வளம‌டையும் அறிவு
வலுவிழக்கும் கண்கள்

சுவாசிக்க சுவாசிக்க‌
சுத்தமாகும் உடம்பு
பித்தமாகும் சூழல்

எப்பூடி ..... :)


'நேசிக்க நேசிக்க வலுவடையும் உறவு வலுவிழக்கும் உள்ளம்'
என்று 2007ல் ஒரு குழுமத்தில் நான் எழுதிய டிவிட் இன்று
கவிதையாக நீட்சி பெற்றது - அப்பவே Twitt ருக்கேனாக்கும் :‍)

Tuesday, September 21, 2010

பார்டர் தாண்டிய பல்லாடு

(சென்ற உம்ரா பதிவின் தொடர்ச்சி)

பெருமானார்(ஸல்) அவர்களின் ஹதீஸ் ஒன்றின் கருத்து 'இந்த உம்மத்தின்
செல்வந்தர்கள் புகழுக்காகவும் பெருமைக்காகவும், ஏழைகள் பிச்சை எடுப்பதற்கும்
மத்திய வர்க்கத்தினர் வியாபாரம் செய்யும் நோக்கத்திலும் ஹஜ்/உம்ரா செய்வார்கள்.
(இம்மூன்று நோக்கங்களை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக,ஆமீன்).
அம்மூன்று தரப்பாரையும் காண நேரிட்டது ; அவர்களின் பேச்சும் நடத்தையும்
மேற்கண்ட நோக்கங்களைப் பறைசாற்றியது.

பார்டர் தாண்டியதும் மற்றுமொரு சாராரைக் காண நேரிட்டது. ஓமானிலிருந்து வந்த
பேமானிகள். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். டொயோட்டா Lexus ல் வந்து 'உம்ரா வந்த
வழியில் எல்லாம் தொலைந்து விட்டதாகக் கூறி' பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
காருக்குள் மனைவி, குழந்தைகளை வைத்துக் கொண்டு கேட்கும் போது யாருக்குத்தான்
கொடுக்க மனம் வராது. பார்டர் தாண்டியவுடன் வரும் பெட்ரோல் பம்புகள்தாம் இவர்களின்
வசூல் வேட்டைக் களம். இது போன்று இரண்டு மூன்று கார்களைக் கண்டவுடன் நாங்கள்
கார் நம்பர்களைக் குறிக்கலானோம், போலிஸில் புகார் செய்யும் நோக்கத்தில். அச்சம‌யம்
ஒரு கார் ரிவர்ஸில் வந்தது, நம்பரைக் குறிக்கும் நண்பரை லேசாக இடித்துச் செல்லும்
வண்ணம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பாவம் பரிதாபத்திற்குரியவர்கள்,
பட்டதாரிகளாக்க வேண்டிய தம் மக்களுக்கு பிச்சைக்காரர்களாவதற்கான பயிற்சி
கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நபியவர்கள் சத்தியமிட்டு சொன்ன விஷயங்களில் இதுவும் ஒன்று,
'யாசிப்பவர்களின் வறுமை ஒரு போதும் நீங்காது'.

மக்கா மதீனாவில் பிச்சை எடுக்கும் கறுப்பின மக்கள் சோமாலியா போன்ற ஆப்ரிக்க
நாடுகளிலிருந்து வந்தவர்களாயிருக்கும்; ஆண்டாண்டு காலமாக சவூதியில் வாழும்
ஹபஷிகள் கிடையாதென்பது என் எண்ணம். காரணம் இரண்டு ஹரம்களிலும் நோன்பு
திறக்க வைக்கப் போட்டி போட்டுக் கொண்டு லட்சக்கணக்கான மக்களுக்கும் பேரித்தம்பழம்,
தண்ணீர்,டீ,காபி,பன்,தயிர்,மோர் வைத்து உபசரிப்பவர்களாக ஹபஷிகளைக் கண்டோம்.

ஒரு வேடிக்கை நிகழ்ந்தது. மதீனா பள்ளியில் நோன்பு திறக்கச் செல்லும் போது அங்குள்ள சிறுவர்களும் பெரியவர்களும் தம்முடைய இடத்தில் நோன்பு திறக்குமாறு நம் கையைப்
பிடித்து இழுப்பார்கள். ஒருநாள் எங்களுக்குத் தெரிந்த ஒருவர் இன்று தம்மிடத்திலே நோன்பு
திறக்க வேண்டும் என்றும் வேறு யார் இழுத்தாலும் சென்று விட வேண்டாமென்றும்
சொன்னார். நானும் சரியென்று செருப்புக்களை பிளாஸ்டிக் பைக்குள் வைத்தவாறு
(வெளியே வைக்கப்படும் செருப்புக்கள் கிளீனிங் போன்றவைகளால் குப்பைக் கூடையில்
சென்று விடும்) பள்ளிக்குள் செல்லும் போது ஒருவர் என்னை அழைத்தார். நானும்
புன்னகைத்தவாறே 'இல்லை இன்று இவரிடம்' என்று சைகை செய்த வண்ணம் முன்
சென்றேன். இப்போது என் கையைப் பிடித்து இழுக்க முயற்சித்தார், நானோ அதைத் தட்டி
விட்டு முன்னேறியவாறு திரும்பிப் பார்த்தேன். இப்போது அவர் கோபமாக வந்து என்
கையில் உள்ள பையைப் பிடுங்கி உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து விட்டு,
'ஙொப்புரானே!, இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா?' என்கிற தொனியில் புன்னகைத்துத்
திரும்பத் தந்து விட்டார். நானும் 'அடடா, செக்யூரிட்டின்னு தெரியாமப் போச்சேன்னு அசடு
வழிந்து உள்ளே சென்றேன் (செக்யூரிட்டிகளும் நார்மல் டிரஸ்ஸில்தான் இருப்பார்கள்).

பார்டர் தாண்டி இஸ்லாத்திற்குள் நுழைவிக்கப்படும் யஹூதிகளின் சூழ்ச்சிகளில்
ஒன்றையும் எடுத்துச் சொல்ல மனம் நாடுகிறது. அதுதான் இஸ்லாமிக் டிஸைன்களில்
அவர்கள் புகுத்திய உருவ வெளிப்பாடு. அன்றைய முஸ்லிம் பேரரசின் தலைநகரான
துருக்கியில் புகுந்து விட்ட இந்த தந்திர நரிகள் கார்பெட்,முஸல்லா மற்றும் கட்டிடக்
கலையில் உருவம் வரும் வண்ணமாக இஸ்லாமிய டிஸைனை அமைத்தார்கள்.
(இன்றும் ஆப்கானிஸ்தானில் மிஞ்சியிருக்கும் யஹூதிகளின் தொழில் கார்பெட்).
துருக்கியர்கள் புனரமைத்த ஹரம்களின் தூண்களையும் தொழுவதற்காக நாம் நிற்கும் கார்பெட்டுகளையும் கூர்ந்து கவனித்தால் உருவங்கள் தெரிய வரும். இவ்வளவு ஏன்,
கஃபாவைப் போர்த்தியிருக்கும் கருப்புத்துணியில் கதவின் அருகாமையில் உள்ள தங்க
டிஸைனைப் பாருங்கள். கண்களைப் போல் இரண்டு வட்டங்கள், மூக்கின் வடிவில்
திரை லேசாக விலகியிருக்க,அத‌ன் அடியில் இரண்டு வளையங்கள். மீசையின் இரு
மருங்கிலும் கருப்பு நிறப் பின்னணி, பின் செவ்வக வாய் அளவுக்குத் திறந்த பகுதியில்
மூடிய கதவும் தெரிகிறது. (ஓவரா திங்க் பண்றேனோ !?)

ஆனாலும் அல்ஹம்துலில்லாஹ், சமீபத்தில் கட்டப்பட்ட ஸபா மர்வாவை ஒட்டிய
சுவர்களிலும் அதில் பொறுத்தப்பட்டுள்ள சன்னல்களிலும் உருவமற்ற, அழகான
இஸ்லாமிய டிசைன்கள், மக்கள் உஷாராகி விட்டார்கள் என்பதைக் காட்டுகிறது.
மேலும் தவாபின் எல்லையைக் கூட்ட, கஃபாவை ஒட்டிய் துருக்கியர்கள் கட்டிய
பகுதியும் விரைவில் இடிக்கப்பட இருக்கிறது என்ற செய்தியும் அறியக் கிடைத்தது.

(இ.அ. தொடரும்)

Wednesday, September 15, 2010

ஹரமைனும் இரண்டாயிரம் கி.மீ தரைவழி காருந்து மார்க்கப் பயணமும்

வாழ்வில் முதன்முறையாக ரமலானில் உம்ரா செய்யும் பாக்கியம்
கிடைத்தது. ரமலானில் உம்ரா செய்வது பெருமானாருடன் ஹஜ்
செய்வதற்க்குச் சமம் என்று சொன்னதுதான் போதும் மக்கள்
லட்சக்கணக்கில் குவிந்து விடுகிறார்கள் ஒவ்வொரு ரமலானிலும்.

நாங்கள் நால்வர் டொயோட்டா கேம்ரியில் முதலில் மதீனா முனவ்வரா
பின் மக்கா முகர்ரமா சென்று உம்ரா நிறைவேற்றி திரும்பும் வழியில்
ஜித்தா,ரியாத்,தமாம் சென்று உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து
விட்டுத் திரும்பியது வாழ்வின் உன்னதத் தருணங்களில் ஒன்றாகும்.

* * * * * * * * * * * * * * * *

ரமலான் உம்ரா அதீத திருப்தி தரக் காரணம் தராவீஹும் கடைசிப்பத்தின்
கியாமுல் லைல் மற்றும் அழுகையுடன் அமைந்த கூட்டு துஆக்களும்.
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நம் செவிகளுக்கு அமுதூட்டி வரும்
ஷேக் ஷ்ரைமும் ஷேக் சுதேஸும் கியாமுல்லைலில் விருந்து
படைத்தார்கள். தராவீஹில் ஷேக் மாஹிரும் இன்னொருவரும் மனதுக்கு
இதமாக கிராஅத் மழை பொழிந்தார்கள். இவர்களை மட்டும் அறிந்த எனக்கு
இம்முறை புதியதாக ஒருவரைக் கேட்க சந்தர்ப்பம் வாய்த்தது. அவர்,
மதீனாவின் ஷேக் ஸலாஹ் அல்புதைர். வாவ், எல்லோரையும் தூக்கிச்
சாப்பிட்டு விட்டார் மனுஷன். ஷ்ரைமுடைய Grand குரலும் சுதேஸுடைய
நளினமும் மாஹிருடைய மென்மையும் கலந்த குரல், மாத்திரமல்ல கல்
நெஞ்சக்காரர்களையும் அழ வைக்கும் துஆ செய்யக்கூடியவர். மதீனாவில்
இவருடைய துஆவின் போது அழுத அளவுக்கு மக்காவில் சுதேஸின்
துஆவின் போது அழவில்லை. (ஒரு வேளை முதலில் மக்கா சென்று பின்
மதீனா சென்றிருந்தால் vice versa வாக இருந்திருக்குமோ ?)

* * * * * * * * * * * * * * * *

பெண்களின் வருகை 50 சதவீதமா அல்லது ஆண்களை விட அதிகமோ
என்று எண்ணும் அளவுக்கு அதிகமாக வந்திருந்தனர். அது மட்டுமல்ல‌
ஹஜருல் அஸ்வதின் அருகில் செல்ல முண்டியடித்தவர்களில் 15 சதவீதம்
பெண்கள். அஸருக்குப் பின், நோன்பு திறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு
முன் எனது நண்பர் சொன்னார் 'கஃபாவைப் பார்த்துக் கொண்டிருப்பதும்
நன்மை தரக் கூடிய வணக்கமாகும், வாருங்கள் அதனருகில் சென்று
அமர்ந்து கொள்ளலாம்.' என்று.

ஆனால் கடுமையான கூட்டமும் அதனைக் கட்டுப்படுத்தும் காவலர்களின்
கெடுபிடிகளாலும் எங்களால் கஃபாவைக் காணும் வகையில் நிற்கவோ
உட்காரவோ முடியாமல் பின்னேறி நாங்கள் அமர்ந்த இடம் பெண்கள்
அதிகமாக இருந்த இடம். நண்பர் சொன்னார் 'என்னங்க இது, நன்மையை
நாடிச் சென்றோம், விதி பாவத்தின் பக்கம் இழுத்து வந்து விட்டதே.
அதுவும் நோன்பு திறக்கும் நேரம் பார்த்து.
திடீரென எனக்குள் ஒரு ஞானப் பொறி தட்ட :) , நான் சொன்னேன்.

'பாய், அதுவோ ஹரம்; அதனைப் பார்த்தால் நன்மை ,
இதுவோ ஹரீம் (பெண்) ; இவர்களைப் பார்க்காமல் இருந்தால் நன்மை.
எனவே இரண்டிலும் நன்மைகள்தாம், கவலைப்படாதீர்கள் :)

(பெண்களின் எதிரில் இருந்து கொண்டு அவர்களைப் பார்க்காமல் இருப்பதும்
நமக்குள் கட்டுப்பாடு வருவதற்கான பயிற்சிதான்).

ஹரம்(புனித பகுதி),ஹராம்/மஹ்ரம்(தடுக்கப்பட்ட),ஹரீம்/ஹுருமா(பெண்)
இவையெல்லாம் ஒரே எழுத்திலிருந்து வந்தவையென நினைக்கிறேன்.
(அரபி பண்டிதரின் ஒப்புதலையோ/மறுதலித்தலையோ எதிர் பார்க்கிறேன்)

பெண்களை இஸ்லாம் எந்தளவு கண்ணியப்படுத்த அல்லது பாதுகாக்க
நினைக்கிறது என்பதை மேற்கண்ட‌ சொற்களைச் சிந்திப்போருக்குத் தெரியவரும்.

* * * * * * * * * * * * * * * *

இங்கு இரக்கப்பட வேண்டியவர்கள் ஹரமிலும்,அதனைச் சுற்றியுள்ள்
ஹோட்டல்களிலும் கிளீனிங் வேலை பார்ப்பவர்கள். பாவம் மக்காவில்
வேலை மதீனாவில் வேலை என்று ஆர்வமாக வந்தவர்களுக்கு இங்குள்ள
வேலைப் பளுவில் பெண்டு நிமிர்ந்து விடுகிறது, அதுவும் வேலைப் பணிகள்
குறைக்கப் பட வேண்டிய ரமலான் மாதத்தில். மேலும் பெண்களை
அதிகமாகப் பார்த்து மனம் கெடுவதும் பயணிகளில் சிலர் இரக்கப் பட்டுக்
கொடுக்கும் டிப்ஸ்/ஸதகா வாங்கிப் பழகி, அதை எல்லோரிடமும்
எதிர்பார்த்து, பின் வாய் விட்டே கேட்கும் அளவுக்கு மாறிப் போகிறார்கள்.
புனிதப் பகுதியைக் கழுவிப் புண்ணியம் தேட வந்து மனம் குப்பையாய்
போனதை அறியாமல் வேண்டா வெறுப்பாக வேலை செய்து வரும்
இவர்களை நினைத்து இரக்கப் படாமல் என்ன செய்வது.

உச்சமாக‌, பெருநாள் இரவில் சுத்தம் செய்கிறோம் பேர்வழி என்று
ஆங்காங்கு மாட்டி வைக்க‌ப்பட்ட பைகளையும் பொதிகளையும் பிளாஸ்டிக்
கீஸ்களையும் பிய்த்தெடுத்து குப்பைத்தொட்டியிலோ அல்லது வெளியே
சில மீட்டர் தூரம் கொண்டு சென்று ஒரு மூலையிலோ போட்டு விட்டதால்,
பயணிகள் தமது கடவுச்சீட்டு,பர்ஸ்,செல்போன்,புதிய/பழைய துணிமணிகள்,
உறவினர்களுக்காக வாங்கி வைத்திருந்த்த பொருட்கள் அனைத்தும் நிறைந்த
அல்லது இவற்றில் ஏதோ வைத்திருந்த பை காணாது தவித்து பின்
எடுத்தவர்களைச் சபித்து ..., வேண்டாம்பா,
இந்த சாபத்தை வாங்குவதை விட சம்பாதிக்காமலே இருந்து விடலாம்.

(தொடரும்)

Wednesday, August 11, 2010

பொன்னும் கெடச்சுது புதனும் கெடச்சுது

......................................................................
காலம் பொன் போன்றது (கடமை கண் போன்றது)
......................................................................

அதுவும் ரமலானின் காலம் 'தேடிக் கிடைக்காத தங்கம்' போல. கிடைத்து
விட்டால் அதுவே பெறும் பேறு. நபியவர்கள் இப்படி துஆ கேட்பார்களாம்.

"இறைவா ரஜப்,ஷஃபான் மாதங்களில் பரக்கத் (அபிவிருத்தி) செய்வாயாக,
ரமலானை அடையும் பாக்கியத்தைத் தருவாயாக"

அனுபவமா அல்லது ஐதீகமா தெரியாது, சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்,
ரமலானுக்கு முந்திய மாதமான ஷஃபானில் இறந்து போகும் வயதானவர்களின்
அல்லது நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று.

ஆதலால் ரமலானை அடைந்தவர்கள் பெறும் பாக்கிய சாலிகள்.
மட்டுமல்லாது இம் மாதத்தில் கிடைக்கும் நன்மைகளின் எண்ணிக்கை
மற்றும் மன்னிக்கப்படும் பாவங்களின் எண்ணிக்கை கணிணியில்
அடங்காது. இந்த மாதத்தில்தான் ஒரு நாள் இருக்கிறது, அந்த நாள்

எழுபது தாய்களின் பாசத்தை உடைய ஜனாதிபதியின்
கண்டிப்பு நிறைந்த தந்தை மனம் கொண்ட சர்வாதிகாரியின்
சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தி நிர்வகிக்கும் பிரதம மந்திரியின்
அரசர்க்கெல்லாம் அரசனான அந்த அல்லாஹ்வின்

ஆயிரம் மாதங்களுக்கு நிகரான ஒரு

'பொது மன்னிப்பு தினம்'.

இதுவும் கிடைத்து விட்டால் பொன் கிடைத்து, புதன் கிடைத்து,
புதையலும் கிடைத்த மாதிரி; முயற்சிப்போமா .

ரமலான் கரீம் !!

----------------------------------------------------------------------


சென்ற மாத ஜும்ஆ/குத்பா பேருரையில் கேட்ட/மனதில் தங்கிய
சில நல்ல கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன்.

வெற்றிக்கான மூன்று நல்ல விஷயங்கள் (முனஜ்ஜியாத்)
......................................................................

1.
கோபமான சமயத்திலும், மகிழ்ச்சியான தருணத்திலும்....நீதமாக நடத்தல்

2.
வறிய நிலையில் கஞ்சத்தனமோ அல்லது செல்வ நிலையில் வீண்
விரயமோ செய்யாது எல்லா நிலையிலும் ஒரே மாதிரியாகச் செலவழித்தல்

3.
ரகசியத்திலும் பரகசியத்திலும் (தனிமையிலோ / மற்றோரின் முன்னோ)
இறைவனுக்குக் கட்டுப்படும் தன்மையில் வித்தியாசமில்லாமல் இருப்பது



அழிவைத்தரும் மோசமான ஏழு விஷங்கள்.
.....................................................................

1. இறைவனுக்கு இணை வைப்பது

2. பில்லி சூனியம் செய்வினையில் ஈடுபடுவது

3. கொலை செய்வது

4. வட்டி வாங்கி சாப்பிடுவது

5. அனாதைகளின் பொருளைச் சாப்பிடுவது

6. போரில் புறமுதுகிட்டு ஓடுவது

7. பத்தினிப் பெண்ணை அவதூறு செய்வது


----------------------------------------------------------------------


ஹூம், ஏதோ ஒரு உந்துதலில் பதிவெழுத வந்து, வந்த வேகத்தில்
பன்னிரண்டு பதிவு போட்டுப் பின் குறைந்து தேய்ந்து ஒரே ஒரு
கட்டெறும்பாகியிருக்கிறது. பார்க்கலாம் இனி அடுத்தமாதம்
இந்தப் பிறை மீண்டும் வளருமா என்று.


இன்ஷா அல்லாஹ், ஒரு மாதத்திற்கு இந்தப் பக்கம் வர மாட்டேன்.
அதனால‌ போறதுக்கு முன்னாடி ஒரு வார்த்த சொல்லிட்டு போறேன்,
.
.
.
.
.
.
.
.
.
v


'போயிட்டு வாறேன்' (இன்ஷா அல்லாஹ்) :-)



ரமலான் & ஈத் முபாரக்,
வஸ்ஸலாம்.

Wednesday, July 28, 2010

இறைவன் பற்றிய கேள்விகள் அன்றும் ... என்றும்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பொரு நாளில்,

இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்)எனப்படும் ஆபிரகாமிடத்தில்
நம்ரூது மன்னன் கேட்டான் 'நீ கூறும் கடவுள் எத்தகையவன் ?'.

'என் இறைவன் தான் நாடியதைச் செய்கிறான். உயிரில்லாதவற்றிற்கு
உயிர் கொடுக்கிறான், உயிருள்ளவைகளை மரணிக்கச் செய்கிறான்.'

உடனே நம்ரூது, சிறையிலிருந்து இருவரை அழைத்து வரச் செய்து,
அவர்களில் மரண தண்டனைக் கைதியை விடுதலை செய்து சில நாட்களில்
விடுதலையாக இருந்தவனைக் கொல்லுமாறு ஆணையிடுகிறான்.

இப்போது இப்ராகீமை நோக்கி,'பார்த்தாயா! நான் நாடியதைச் செய்தேன்.
ஒருவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்தேன் இன்னொருவனின் உயிரை
எடுத்தேன். ஆதலால் நானும் கடவுள்தான் என்று நம்புகிறாயா'.

'என் இறைவன், சூரியனைக் கிழக்கிலிருந்து உதிக்கச் செய்து மேற்கில்
மறையச் செய்கிறான், உமக்கு முடியுமானால் அதனை மாற்றிக் காட்டவும்'.

இதற்கு பதில் சொல்ல முடியாத நம்ரூது, இவரை நெருப்பிலிட்டுப்
பொசுக்குங்கள் என்று ஆணையிட்டான்.

ஆனால் நடந்தது என்ன ?
இப்ராகீம் நெருப்புக்குள் போடப்பட்டும் எரியாமல் தப்பித்து நீண்ட நாட்கள்
வாழ்ந்தார். நம்ரூது மன்னனோ செருப்படி வாங்கியே கேவலமாகச் செத்தான்.
செருப்பால் அடித்தால் மட்டுமே மண்டைக் குடைச்சலிருந்து சிறிது நேரம்
நிவாரணம் என்ற நிலை கண்டு செருப்பால் அடிப்பதற்காகவே சில
வேலைக்காரர்களை நியமித்திருந்தான்.

-------------------------------------------------------------------

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பொரு நாளில்,

மூஸா (அலைஹிஸ்ஸலாம்) என்கிற மோசஸிடம் 'நானல்லவா உனது
இறைவன் நீ வேறு யாரையோ இறைவன் என்றும் அவனுடைய தூதராக
உன்னைச் சொல்கிறாயே, அத‌ற்கு என்ன ஆதாரம்' என்று கேட்ட
பிர் அவுன் என்கிற பாரோ மன்னனுக்கு முன் தனது கைத்தடியை எறிந்த
போது அது பாம்பாக மாறிய்து. மேலும் மூஸாவின் கையிலிருந்து ஒரு
பிரகாசம் கிளம்பியது. இதைப் பார்த்த பிர்அவ்ன்,'பூ இவ்வளவுதானா,
மவனே உன்னை விட மேஜிக் தெரிந்தவர்கள் என்னிடத்தில்
ஆயிரக்கணக்கில் உண்டு' என்று எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட தனக்கு
விசுவாசமான மந்திரவாதிகளை அழைத்து வரச் செய்தான்.

அவர்களும் மூஸா செய்தது போலவே தமது கைத்தடிகளை எறிந்து
பாம்பாக மாற்றிக் காட்டினார்கள். இப்போது மூஸா(அலை) தமது
கைத்தடியை எறிந்தார்கள். அது மிகமிகப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பாம்பாக
மாறி எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மந்திரவாதிகளின் பாம்புகளை
விழுங்கி கபகளீகரம் செய்தது. இதனைப் பார்த்த மாத்திரத்திலேயே
ஆயிரக்கணக்கான மந்திரவாதிகளும் மண்ணில் விழுந்து இறைவனைப்
போற்றி மூஸாவின் கரம் பிடித்து இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
கடுங்கோபம் கொண்ட பிர்அவ்ன் முஸ்லிம்களைத் துரத்திக் கொண்டு
செல்லும் போது லட்சக்கணக்கான படைவீரர்களோடு நைல் நதியில்
மூழ்கிப் போனான். மூஸாவும் அவரை நம்பியவர்களும் இறை அருளால்
நைல் நதியைக் கடந்து வேறிடம் சென்று நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்.

-------------------------------------------------------------------

ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பொரு நாளில்,

அதிகாரத்தில் இருந்த ஒருவன், இறைவன் இருப்பதை தன் புத்திக்கு
எட்டுமாறு நிருபிக்க வேண்டும் என்றும் ஆனால் குர்ஆனிலிருந்தோ
ஹதீஸிலிருந்தோ எதுவும் சொல்லக்கூடாதென்றும் விட்ட சவாலை நுஃமான்
என்னும் வாலிபர் ஏற்றுக்கொண்டார். நிரூபிக்க நாளும் குறிக்கப் பட்டது.
ஆனால் அந்த நாளன்று நுஃமான் வர மிக மிகத் தாமதாகியது. கடைசி
நேரத்தில் வந்த நுஃமானிடம், தாமதம் பற்றிக் கேட்கப் பட்டது.

"சபையோர் மன்னிக்க, நான் வரும் வழியில் நதி ஒன்று உண்டு. ஆனால்
அதனைக் கடந்து வர படகு போன்று எதுவும் அங்கிருக்கவில்லை. என்ன
செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென அங்கிருந்த
மரத்திலிருந்து மரக்கிளைகள் ஒவ்வொன்றாகக் கீழிறங்கிப் பின் ஒன்றாகச்
சேர்ந்து படகாகியது. அதன் மூலமாக ஆற்றைக் கடந்து வந்தேன். படகு
உருவாவதில் மிக நீண்ட நேரம் பிடித்ததால் இங்கு வரத் தாமதமாகி விட்டது.

இந்தப் பதிலைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆகா, ஏதோ 'கிராக்'
அல்லவா வந்திருக்கிறது என்ற சந்தேகத்தோடு, 'ஏம்பா, உனக்கே இது
ஓவராத் தெரியலயா, எப்படி இதுவெல்லாம் தானா உருவாகும்? என்றார்கள்.
அதற்கு நுஃமான் புன்னகைத்தவாறே 'இதைத்தான் நானும் கேட்கிறேன்,
இந்தப் பூமி,வானம்,சூரியன்,சந்திரன்,கோள்கள்,நட்சத்திரங்கள்,மலைகள்,
கடல்கள்,மனிதர்கள்,விலங்குகள்,பறவைகள் இன்னும் எத்தனை
எத்தனையோ கண்ணுக்குத் தெரிந்த தெரியாத‌ ஜீவராசிகள் எப்படித் தாமாக
உருவாகியிருக்க முடியும். உங்களுக்கே இது ஓவராகத் தெரியவில்லையா !

இதற்குப் பதில‌ளிக்க முடியாமல் அடுத்தக் கேள்வியைக் கேட்டனர்.

'சரி, இறைவன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்,ஆனால் அவன் எங்கு
இருக்கிறான் ; எந்தப் பக்கம் அல்லது யாரைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்?"

இதற்குப் பதிலாக அனைவரையும் ஒரு இருட்டறைக்குள் அழைத்துச் சென்று,
விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி, 'இப்போது சொல்லுங்கள்,
இந்த ஒளி அல்லது வெளிச்சம் எங்கிருக்கிறது ; அது எந்தப் பக்கம் பார்த்துக்
கொண்டிருக்கிறது ?. ம், ஒரளவு புரிந்தது விட்டது. இனி அடுத்த கேள்வி
'இறைவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் ?.

"இதற்குப் பதில் தருவதற்கு முன் நீங்கள் என்னிடத்திற்கு இறங்கி வர
வேண்டும் ; நான் தங்களின் நாற்காலியில் அமர வேண்டும், சம்மதமா ?"

கேள்வி கேட்டவர் இறங்கி வர நுஃமான் நாற்காலியில் அமர்ந்து கொண்டு,
"இப்போது இறைவன் தங்க‌ளைப் பதவியிலிருந்து இறக்கி என்னை அந்தப்
பதவியில் அமர்த்தினான்".

பிறகு அனைவரும் மனம் (மதம்?) மாறியதைச் சொல்லவா வேண்டும்.

------------------------------------------------------------------

சில வருடங்களுக்கு முன் கம்யூனிஸம் தழைத்திருந்த நாளொன்றில்,

சவூதி அல்லது அதன் சகோதர நாட்டின் பள்ளிக்கூடம் ஒன்றின்
வகுப்பறையில் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஆசிரியர், மாணவர்களிடம்
வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு பொருளையும் சுட்டிக்காட்டி என்னவென்று
கேட்க, ஒவ்வொன்றின் பெயர்களையும் மாணவர்கள் சொல்லிக் கொண்டு
வந்தார்கள். கடைசியாக ஆசிரியர், "மாணவர்களே! இவையத்தனையும்
கண்ணால் காண்கிறோம்; அதன் பயன்களை அறிகிறோம். ஆனால்
இறைவன் என்று ஒன்றை நம்புகிறோமே அதனைக் கண்ணால் காண
முடிகிறதா அதன் பலன்களைப் பெற முடிகிறதா ? அத‌னால் இறைவன்
என்று ஒன்றும் கிடையாது; இதை யாராலும் மறுக்க முடியுமா ?" என்றார்.

அப்போது ஒரு மாணவன் எழுந்து நின்று "நம்ம வாத்தியாருக்கு மூளையே
கிடையாது; ஏனென்றால் அதனை நம்மால் காண முடியவில்லை".
இந்த பதிலால் வாத்தியும் மாணவர்களும் திகைத்துப் போனார்கள்.

--------------------------------------------------------------------

வரலாற்றின் ஏதோ ஒரு நாளில்,

மெத்தப் படித்த ஒருவன் தன்னிடம் 'இறையின் இருப்பை'ப் பற்றிய‌
மூன்று கேள்விகள் இருப்பதாகவும் அதற்குப் பதில் கிடைக்காத வரை
'இறை மறுப்பை'க் கைவிடப் போவதில்லை என்றும் எல்லா
அறிஞர்களிடமும் சென்று சவால் விட்டுக் கொண்டிருந்தான். அறிஞர்
ஒருவர் அவனிடம் அந்த மூன்று கேள்விகள் யாவை எனக் கேட்க,

1. இறைவன் உண்டா ? அப்படியிருந்தால் அவனை நீங்கள்
எனக்குக் காட்ட வேண்டும்.
2. 'விதி'யென்பது யாது ?
3. ஷைத்தான் நெருப்பால் படைக்கப் பட்டதாகவும் இறுதியில் நெருப்புக்
கங்குகளால் நிரப்பப்பட்ட நரகத்தைச் சென்றடைவான் என்றும்
இஸ்லாம் கூறுகிறதே ! நெருப்பு எப்படி நெருப்பால் படைக்கப்
பட்டவனுக்குத் தண்டனையாக அமையும் ?

சிறிது நேரம் யோசித்த அறிஞர், கேள்வி கேட்டவனுக்கு ஒரு அறை
கொடுத்தார். 'ஆ! என்று அலறியவனை நோக்கி 'வலிக்குதா!' என்று
கேட்க அவனும் கோபத்துடன் தலையசைக்க, 'வலிப்பது உண்மையானால்
அந்த வலியை எனக்குக் காட்டு' என்று அறிஞர் சொல்ல, 'அதெப்படி காட்ட
முடியும், வலியை உணரத்தான் முடியும்' என்றவுடன், 'இதுதானப்பா
உன்னுடைய முதல் கேள்விக்கு பதில், இவ்வுலகில் இறைவனைக்
காட்டவோ அல்லது பார்க்கவோ இயலாது; உணரத்தான் முடியும்.

'விதி' பற்றிய அடுத்த கேள்விக்கு, 'நான் உன்னை அடிக்கப் போவதை
முன்பே அறிவாயா' எனக்கேட்க அவன் இல்லையென்று தலையாட்டினான்.
"நீ மட்டுமல்ல, நான் உன்னை அடிக்கப் போகும் விஷயம் எனக்கும்
தெரியாது; ஆனால் இது இறைவனால் முன்பே எழுதப் பட்ட விஷயம்,
நாம் அறியாமலே நடந்தேறியிருக்கிறது, அது தான் 'விதி' என்பது.

அடுத்து என்னுடைய கையும் அடி வாங்கிய உன்னுடைய கன்னமும்
எதனால் ஆனவை. இரண்டுமே மண்ணால் படைக்கப் பட்டவை அல்லவா
இருந்தும் உனக்கு வலிக்கிறதே அது போலத்தான் ஷைத்தானுக்கும்
வலிக்கும், போதுமா :-‍) (இதற்கு மேல அவனால் என்ன சொல்ல முடியும்).

---------------------------------------------------------------------

இன்னும் எத்தனையோ சம்பவங்கள் கேள்வி பதில்களால்
நிரம்பியிருக்கின்றன. இருந்தும் இறை மறுப்பாளர்களாலும்
இணை வைப்போராலும் கேள்விகள் கேட்கப்பட்டுக்
கொண்டே.....யிருக்கின்றன. காரணம் 'தாம் நாடியவரை
நேர்வழியில் செலுத்துகின்றோம்' என்று அல்லாஹ் கூறுவதால்
'எல்லோருக்கும் நேர்வழி கிடைக்கும்' என்று எதிர்பார்க்க முடியாது.

டிஸ்கி 1 :
ஏண்ணா! அப்படீண்ணா கேள்வியே கேட்கக்கூடாதான்னு கேட்கப்படாது !

ஏன்னா, இந்தப் பதிவின் ஆரம்பத்தில் சொல்லப் பட்ட இப்ராகீம் அவர்களே
கேள்வி கேட்டவர்கள்தாம், ஆனால் அறிந்து கொள்ள வேண்டி தம்மைத்
தாமே கேட்டுக் கொண்டார்கள், ஆராயும் விதத்தில். இரவில் நட்சத்திரம்
மின்னுவதைப் பார்த்து 'இது இறைவனாக இருக்குமோ ? அதன் பின் வந்த
நிலவைப் பார்த்து, இல்லையில்லை, இதுதான் இறைவனாக இருக்கும்
என்று நம்பினார். பின்னர்,காலையில் சூரியனைப் பார்த்து 'ஓ, இதுதான்
பெரியது, இதுதான் இறைவன், மற்றதெல்லாம் மறைந்து விட்டன. பிறகு
சூரியனும் மறைந்த போது,'இறைவா! நான் உன் பக்கம் திரும்புகிறேன்.
எனக்கு நேர்வழி காட்டுவாயாக! என்று இறை ஞானம் கிடைக்கும் வரை
தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

டிஸ்கி 2 :
இவ்வளவு சொல்லியும் மனம் சமாதானம் அடையவில்லையா இறை
மறுப்புச் சகோதரர்களே! உங்களுக்குள் பின்வருமாறு சொல்லிப் பாருங்கள்
'முஸ்லிம்கள் சொல்வது போல் அப்படி ஒரு நீண்ட முடிவில்லாத
வாழ்க்கை இருந்து விட்டால் என்ன செய்வது ? '

வஸ்ஸலாம்.

Tuesday, July 06, 2010

டாப் டென்னா இல்ல நூத்துல ஒண்ணா


இல்லையில்லை,
'மனித கோடிகளிலே'
நம்பர் ஒண்ணு, இதை
நம்பாதவன் வாயிலதான் மண்ணு.


====================================================================




=====================================================================

'முகம்மது'க்கு அர்த்தமே புகழப்பட்டவர்.

இகழ நினைப்ப‌வர்களே வேறு வழியின்றி புகழ்ந்ததும்
அதையும் மீறி
இகழ்ந்தவர்கள் வாழ வழியின்றி
இருந்ததையும் இழந்து இழிந்தவர்களாகிப் போனதும்
இன்றல்ல நேற்றல்ல அது எக்காலத்திற்குமுள்ள விதி
அதை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது.

====================================================================

'உம்மி நபி' என்றாலே எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றுதான்
நினைத்தேன்/தோம். ஆனால் நாகூர் ஈ எம் ஹனீபா பாடியதைக்
கேளுங்கள்.

"பள்ளி சென்று படித்ததில்லை ; பாடம் ஏதும் கேட்டதில்லை
'சொல்லித்தரும் தகுதி' இந்த துன்யாவில் எவர்க்குமில்லை (பள்ளி)

'அல்லாஹ்வே ஆசிரியன்' ; அனைத்துமே ஆச்சர்யம்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் சேதிகளே
(ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா....)

(எழுதிக் கொடுத்த கவிஞருக்கு ஒரு ராயல் சல்யூட்)

====================================================================

தகுதி யாருக்கும் கிடையாது என்பதற்காக மட்டுமல்ல ; பிறபின்
இவருக்கு நான் தான் கற்றுக் கொடுத்தேன் என்று எவரும் உரிமை
கொண்டாடக் கூடாது என்பதற்காகவும் தான்.

நபியை ஏழு வானம் தாண்டி வரவழைத்தது கவுரவிப்பது மட்டும்
நோக்கமல்ல, எவனும் அல்லது எந்த விஞ்ஞானியும் விஞ்சக் கூடாது
என்பதற்காகவும் தான்.(இன்னும் இந்த அஞ்ஞானிகளால்
முதல் வானத்தையே கண்டு பிடிச்ச பாடில்லை)

நிலவுக்குள் காலடி வைத்தத‌ற்கே இந்தக் கொக்கரிப்பு எனில் தாம்
நின்ற இடத்திலிருந்தே நிலவைப் பிளந்து பின் சேர்த்தமைக்கு
என்ன சொல்றீங்கப்பூ !?.


சரி, சாதனைகளை விடுங்க, அதெல்லாம் நூத்துக் கணக்குல இருக்கு,
அவற்றைச் செய்து காட்ட நமக்கு மட்டுமல்ல எந்த மேஜிக்
வித்தைக்காரனாலும் முடியாது. ஆனா நாம கடைபிடிக்கத் தோதாக
எத்தனையோ நல்ல விஷயங்களை விட்டுச் சென்றுள்ளார்களே,
அதைப் பார்க்க வேணாமா.

ரெண்டு மூணு நல்ல கருத்துக்களைச் சொன்னதற்காக‌ பெர்னாட்ஷா
போன்ற அறிஞர்களைக் கொண்டாடுகிறோமே, நபிகள் நாயகத்தை நல்ல
மனதோடு (திறந்த மனதோடு) படிப்பதற்குத் தடையாக இருப்பது எது ?

PREJUDICE என்கிற, ஏற்கெனவே அவர்கள் மீதுள்ள வஞ்சமும்,கசடும்
அல்லது படித்தாலும் குறை காணும் நோக்கமேயன்றி வேறில்லை

போற்றுவார் போற்றட்டும் புழுதிவாறி தூற்றுவோர் தூற்றட்டும் என்று
இருக்க முடியவில்லை காரணம் மனம் தாங்க முடியவில்லை இந்த‌
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்.

புறக்கணிப்பும் புழுதி வாரி தூற்றுவதும்தான் நபிகளைப் பற்றிய நல்ல‌
விஷயங்கள் மாற்றாரிடத்தில் சென்றடைய‌வில்லை.

நபியுடைய மருமகன் ஹஜரத் அலீ (ரலி) அவர்களிடம் நாயகத்தைப் பற்றிக்
கேட்டபோது, 'முகம்மது(ஸல்)அவர்கள் கடுமையான தாகத்தின் ச‌மயத்தில்
கிடைத்த குளிர்ந்த நீரைப் போல் எங்களுக்குத் தெரிந்தார்கள்' என்று.

ஹஜரத் குபைப் (ரலி) அவர்களை இறை மறுப்பாளர்கள் தூக்கு மரத்தில்
ஏற்றி விட்டுக் கேட்டார்கள், தமது அரிப்பை அல்பத் தனமாகத் தீர்க்கும்
வண்ணம், 'உம்மை விட்டு விடுகிறோம், ஆனால் உமக்குப் ப‌திலாக
முகம்மதைக் கழுவிலேற்ற சம்மதிப்பீரா ? '.

குபைபிடமிருந்து உறுதியாக பதில் வந்தது. 'நான் வீட்டில் மனைவி
குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கும் நிலையிலும் நபியுடைய காலில்
முள் தைப்பதைக்கூட எங்களால் தாங்க முடியாது'.

----------------------------------------------

'ஹூம் ...

"என்று தெரியும் எங்கள், நபிகளின் தியாகம்
அன்று புரியும் இந்த அடிமையின் சோகம்"

நாயகத்தைப் புகழ்வதற்கு வாய்ப்பளித்த நண்பர்களுக்கு நன்றி.

இந்த நேரத்தில் இது கூட எழுதலன்னா ...

வலைப்பூ வைத்திருப்பதே வேஸ்ட்டு.

Monday, June 28, 2010

மாத்தி யோசி, நல்லவிதமாய்

திரவியம் தேடி வெளியூர் செல்லுமுன் குருவிடம் ஆசி பெறச் சென்ற
சிஷ்யனிடம், சிறிது நேரம் தோட்டத்தில் சென்று அமர்ந்து விட்டு வருமாரு
பணித்தார். சில மணி நேரம் கழித்து சிஷ்யனை அழைத்து விசாரித்தார்.

'குருவே,குறிப்பை அறிந்து கொண்டேன்; நான் பயணம் செல்ல வில்லை'.

'பொறு சிஷ்யா, அப்படி அங்கு என்னதான் கண்டாய் ? '

'கண் தெரியாத ஒரு குருட்டுப் பாம்பிற்கு உணவு கொண்டு வந்த
வண்ணமாய் இருந்த ஒரு பறவையைப் பார்த்தேன். இறைவனின்
கருணையை எண்ணி என் கண்கள் கலங்கின. பாம்பிற்கே பழம்
வார்க்கும் இறைவன் எனக்கும் வழங்காமலா போய்விடுவான்
என்ற ஞானம் கிடைத்தது,அதனால் செல்வம் சேகரிக்கச் செல்லும்
எண்ணத்தைக் கைவிட்டேன்'.

இதற்கு குரு சொன்ன பதில் ரொம்ப முக்கியமானது.

குருட்டுப் பாம்பாய் இருக்க ஏன் ஆசைப்படுகிறாய். மாத்தி யோசி நண்பா,
குருவியாக இருப்பதில் பெருமிதம் கொள். உனக்காக மட்டும் சம்பாதிக்க
எண்ணாமல் உன்னைச் சார்ந்தவர்களுக்கும், உடல் நலிவுற்றவர்களுக்கும்
சேர்த்துச் சம்பாதிக்கும் எண்ணத்துடன் செல்வாயாக ; சென்று வென்று
வருவாயாக. இறைவனருள் எப்போதும் உனக்கு உண்டு.

வியந்தவாறு நன்றி கூறி விடைபெற்றான் சிஷ்யன்.

===============================================

நம்ம மக்கள்ஸே இப்படித்தான், தனக்குத் தோதாக எதையும் எடுத்துக்
கொள்வது அல்லது தோதாக வளைத்துக் கொள்வது.

ஒரு முறை 'குடியின் கெடுதி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகக்
கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. SPIRIT அல்லது சாராயம் இருந்த
பாட்டிலுக்குள் ஒரு சில புழுக்கள் போடப்பட்டு, சில வினாடிகளில்
அப்புழுக்கள் துடிதுடித்து இறப்பதையும் காட்டப்பட்டு 'குடிப்பதால் சாவைச்
சந்திக்க நேரிடும்' என்றும் விளக்கப்பட்டது.

அப்போது கூட்டத்திலிருந்த 'குடிமகன்' ஒருவர் எழுந்து, 'ஏன் இப்படி
இருக்கக்கூடாது ? குடிப்பதால் வயிற்றினுள் தொல்லை கொடுக்கும்
புழு பூச்சிகளை அழிக்கலாமே ?

யே யப்பா என்னமா யோசிக்கிறாய்ங்க. :-)

===============================================

தத்து பித்துவம் அல்லது நகைத்துவம் ஒன்று
-----------------------------------------

"கடவுளை மற : மனிதனை நினை" என்று அன்று சொன்னவர்களுக்கு

இன்று

"தமிழை மற : தமிழனை நினை" என்று நினைவூட்டப்படுது பேஷ் பேஷ்

Wednesday, June 23, 2010

கண்டதும், கேட்டதும்

புரியாத பிரியம் ...
பிரியும் போது தான் புரியும்

* * * * * *

உதயக் குளியல் உத்தமம்
மதியக் குளியல் மத்யமம்
அந்திக் குளியல் அனத்தம்

* * * * * *

சுத்தம் சோறு போடும்
*அசுத்தம்* நாற்றம் தரும்

(* இந்த இடத்தில் எதுகை/மோனை விரும்பினால்
இலகுவாக‌ எதுவேணாலும் போட்டுக்கவும்)


* * * * * *

சயின்ஸ் கருத்தும்
சாக்கடை திறப்பும்
ச‌ட்டென‌
மூக்கில் விரல் வைக்க
வைத்தாலும்

சரித்திரத்தில்
சாகா வரம் பெற்றது
சமுத்திரத்தில் கலக்காத‌
சங்கதிகள்தாம்

* * * * * *

டிஸ்கி :
பிரபலம் ஆகா வரைக்கும் நல்ல வசதிதான் ;
இப்படி ஏதாவது கிறுக்கிக் கொண்டேயிருக்கலாம் :‍-)

Sunday, June 20, 2010

ஆக்டிவ் வாய்ஸும் பாஸ்ஸிவ் வாய்ஸும் சில பொச‌ஸிவ்னெஸ்ஸும்

என்னாங்கப்பூ ? கடுப்பு நீங்க தடுப்பூசி போட வலையுலகம் வந்தால்
வலையும் சேர்ந்து கடுப்பேத்துது. வியாழக்கிழமை ப்ளாக்கர் திறக்கல,
ஜீமெயில் திறக்கல, தமிழ்மணமோ எப்ப திறந்தாலும் கடந்த வாரப்
பக்கத்தையே இன்னும் காட்டுது, நம்ம கடைக்கு வெள்ளி சனி லீவு வேறயா,
கை அரிச்சு கவுஜை வேற எழுதியாச்சு என்ன செய்றது, சரி பரவாயில்ல,
ஆறிப் போனதை மீண்டும் சூடாக்கிக் கொட்டியிருக்கிறேன்.
தைரியமிருந்தா படிச்சுக்கோங்க.
(கடுப்பு ட்ரான்ஸ்ஃபர் ஆகி அங்கே வந்து விட்டால் கம்பெனி பொறுப்பல்ல)


* * * * *



ஆண் அவளை நோக்கினான்
அவள் நிலம் நோக்கினாள்

நகை புன்னகை
இருந்தால் ரிப்பீட்டு
இல்லையென்றால் ரிஜக்டு

அவன் அவளை மணந்தான்

அல்லது

அவள் அவனை மணந்தாள்

நகை புன்னகை இல்லையெனில்
புகை அல்லது பகை

ஆண் அவளை நோக்கினான்
அவளோ நிலம் நோக்கினாள்
சதுர அடி கணக்கில்

சாதா நிலத்தையும்
சஞ்சீவி மலை போல்
பெயர்த்துத் தரவில்லையெனில்
பொல பொல வெனப் பெய்யும் மழை

அவர்களைப் போல் இல்லை
இருந்தால்
உயரமில்லை
இருந்தால்
நுனிநாக்கில் சக்கரையில்லை
இருந்தால்
ஏதோ இல்லை

சே ஒரே தொல்லை

செய்வினை செயப்பாட்டு வினை
இரண்டும் எப்படி சமமாகும்

என்ன செய்ய..

எழுத்தறிவித்தது மட்டுமல்ல
இலக்கணம் வகுத்ததும் இறைவன் தான்

பொறுமை கடலினும் பெரிது.

Monday, June 14, 2010

பயணிகள் கவனத்திற்கு

விமானப் பயணிகள் என்று தலைப்பிட்டிருக்கலாம்தான், என்றாலும்
அனேகர் வீடுகளிலோ அல்லது சொந்தத்திலோ யாராவது விமானத்தில்
பயணிப்பவர்கள் இருப்பதால் அனைவருக்கும் விவரம் புரியட்டுமே.

* * * * * * *

சென்னையிலிருந்து அமீரகத்திற்கு எமிரேட்ஸில் வரும்போது அமீரகம்
செல்பவர்களுக்கு லக்கேஜ் 30+10 எனவும் யு.எஸ் செல்பவர்களுக்கு 44+7
எனவும் அனுமதிக்கப் பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதுவும் யு.எஸ்
லக்கேஜ் ஒரு Bag 22 அல்லது 23க்கு மிகாமல் இருக்க வேண்டுமென்பதில்
கண்டிப்பாக இருந்தார்கள்.

இது தெரியாமல் அதிகமாகக் கொண்டு வந்தவர்கள், சில பிரியமான
பொருட்களை இழக்க வேண்டியிருந்தது, 22+22 என்று சமமாகக் கட்டிக்
கொண்டு வராமல் ஒன்று பெரிய Bag லும் இன்னொன்று சிறிய Bag லும்
கொண்டு வந்தவர்கள் இரண்டையும் சமமாக்க மிக சிரமப் பட்டார்கள்.

* * * * * * *

வளைகுடா நாடுகளில் கோடை விடுமுறை ஜூலையில் ஆரம்பிப்பதால்,
விமானக் கட்டணம் ஜூனிலேயே டேக் ஆப் ஆயிடும் என்பது தெரிந்த
விசயம்தான் எனினும் தற்போது இன்னொரு அதிர்ச்சியும் அறிமுகப் படுத்த
இருக்கிறார்கள் (முன்பே வந்து விட்டதா என்று தெரியவில்லை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்). லக்கேஜ் வெயிட் 40+10 என்று இருந்ததை சீசன்
சமயத்தில் 30+7 ஆகக் குறைக்க இருக்கிறார்கள். எத்தனை பேருக்குத் தெரியும்
என்று தெரியவில்லை, பழைய நினைப்பிலே வருபவர்கள்,பாவம் பத்து
கிலோவுக்குக் குறையாமல் பணம் கட்ட வேண்டி வரும்.

* * * * * * *

பயணக்காரன் அரைப் பைத்தியக்காரன் என்பார்கள். விமானத்தில்
அமர்ந்தவுடன் அவனை ஆசுவாசப்படுத்துவது விமானப் பணிப்பெண்களின்
அன்பான உபசரிப்புகள்தாம். இன்று Budget Airlines என்கிற பேரிலே
Hospitality ஐச் சிதைத்து விட்டார்கள். Cost Cutting என்ற பேரிலே இந்த
மாதிரி ஐடியா கொடுப்பது ஆசியாக் கண்டத்தைச் சார்ந்தவர்கள்தாம். :-)

Customer Care,Value for Customer,Guarantee,Warranty,Utility,Hospitality
போன்றவற்றைச் செயல்படுத்தியவர்கள் மேற்குலகைச் சேர்ந்தவர்கள்.


* * * * * * *


Hospitality என்பது இப்போதெல்லாம் அரிதாகி விட்டது. Hospital களே
மாறிவிட்ட போது வேறு எங்கு எதிர்பார்க்க முடியும். இருந்தாலும் முன்பு
எல்லா விமானத்திலும் ஒரு மரபாகப் பேணப்பட்ட விசயம் இது.
Air Lanka ல் முன்பு கிடைத்து வந்தது. தற்போது Qatar Airways,Emirates
பரவாயில்லை என்று தெரிகிறது.

* * * * * * *

சென்ற முறை, என் இருக்கைக்கு முன்னால் இருந்தவர்,தனக்கு வசதியாக‌
இருக்கையை நன்றாகச் சாய்ந்து கொள்ளுமளவு பின்னுக்குத் தள்ளியதால்
என் முகத்திற்கு நேராகத் துருத்திக் கொண்டிருந்தது. நான் அவரிடம்
'சிரமமாக இருக்கிறது, கொஞ்சம் முன் இழுத்துக் கொள்ளுங்கள்' என்று
சொன்னதற்கு, முடியாது என்பதாக தலையாட்டி விட்டு 'சிரமமாயிருந்தால்
நீரும் இது போல் உம்முடைய இருக்கையைப் பின்னுக்குத் தள்ளிக்
கொள்ளவும்' என்றவுடன், நானோ பின்னுள்ளவரை சங்கடப்படுத்த
விரும்பாமல் சும்மாவே இருந்து விட்டேன்.

அடுத்து வந்தது பிரச்னை,நான் இருந்தது நடு இருக்கை, விண்டோ
பக்கத்தில் உள்ளவருக்கு வந்ததே ஆத்திரம் சே மூத்திரம், எழுந்து
அனுமதி கேட்டார். எனக்கு இடது பக்கத்தில் இருந்தவர் தூக்கத்தில்
இருந்ததால் எங்களிருவரையும் தாண்டிப் போகுமாறு அனுமதியளித்தாலும்
அவரைப் போக விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது முன்னிருக்கை. இப்போ
மூத்திரக்காரர் முன்னிருக்கைக்காரரை எழுப்ப, அவரோ என்னைப் பின்னுக்குப்
போகுமாறு சைகை செய்ய,எனக்குள் இருந்த புரூஸ்லீ தலை தூக்கி பிறகு
ஜாக்கி சானாக மாறி ஒரு வழியாக இருவரும் அட்ஜஸ்ட் செய்து
மேக தூதரை தூறலாய் வருஷிக்க அனுப்பி வைத்தோம்.


ஏன் ஏன் இப்படி இருக்கிறோம் ? விட்டுக்கொடுத்தல் மட்டும்
இல்லையென்றால் பயணம் மட்டுமல்ல ; வாழ்வே நரமாகி விடும்.

* * * * * * *

பதிவர்களும் வாசகர்களும் தங்கள் அனுபவங்களையும் ஆலோசனைகளையும்
பகிர்ந்து கொண்டால் பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.