Monday, May 31, 2010

நற்'சிம்' கார்டும் நம்பகமான நெட்வொர்க்கும்

நற்சிம் ?, நல்ல சிம் கார்டைச் சொன்னேன் :-)

ஓரிடத்திற்கு செல் பேச வேண்டும். அதற்கு செல்பேசியும் சிம் கார்டும்
தேவை அல்லவா ! பேசுவதற்கு முன் சார்ஜ் இருக்கா இல்லையா என்று
சோதித்தபின் தேவைப்பட்டால் சார்ஜ் செய்து கொள்வோம்.

பிறகும் பேச முடியவில்லை என்றால் நெட்வொர்க்கைச் சரிபார்ப்போம்.
இதற்குப் பிறகும் பேச முடியவில்லையென்றால் நம் கணக்கில் போதிய
பைசா இருக்கா என்று பார்த்து அதையும் நிரப்பிக் கொள்வோம்.

இப்போ லைன் கிளியர்.

அது போலத்தான் இறைவனோடு பேசுவதற்கு 'கல்பு' என்னும்
செல்லுக்குள் 'இறை நம்பிக்கை' என்ற சிம் கார்டு வேண்டும். அதனை
அடிக்கடி புதுப்பிக்க வேண்டும். அதாவது சார்ஜ் செய்ய வேண்டும்.
(உங்கள் ஈமானைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்-நபிமொழி).

பிறகு நெட்வொர்க்,

நமக்கும் இறைவனுக்குமிடையில் நல்லிணைப்பை ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும். (மன் அஸ்லஹ பய்னஹூ வ பய்னல்லாஹ் ‍-
யார் தமக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் தொடர்பைச் ச‌ரி செய்து
கொள்கிறார்களோ அவருக்கும் மற்ற படைப்பினங்களுக்குமிடையில்
சுமுகமான பிணைப்பை இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்-நபிமொழி)

பிறகு அக்கவுண்டில் பைசா Top Up , தொழுகை,தர்மம் மற்றும்
நற்கருமங்களைச் செய்து அனுப்பி வைத்த பின் பேசும் பேச்சுக்கு,
கேட்கும் தேவைக்கு ஒரு 'கெத்து' இருக்கும்.



"நம்பினார் கெடுவதில்லை ; நான்கு மறை தீர்ப்பு இது"

"கேளுங்கள் தரப்படும் : தட்டுங்கள் திறக்கப் படும்."

"கேட்பது நம் கடமை ; கொடுப்பது அவன் உரிமை"


ஆனா கேட்பதற்கு முன்னால் எல்லாவற்றையும் சரிபார்த்துக்
கொள்ளுங்கள். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.


வஸ்ஸலாம்.
------------

0 comments:

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)