Monday, May 10, 2010

அபிஷ் two தருணங்கள்

இரண்டு முறை வானொலி நிலையம் சென்ற அனுபவம்
உண்டு. ஒன்று வினாடி வினாவில் கலந்து கொள்ள
இன்னொன்று வானொலி நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக.

இரண்டுமே மாணவப் பருவத்தில் நடந்தவை.
S.S.L.C.க்கு ஒரு வருடம் முன்பும் ஒரு வருடம் பின்பும்.
இரண்டு தடவையும் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி
பெற்றவர்கள் மட்டும் அழைத்துச் செல்லப் பட்டோம்.

முதல் முறை நீண்ட பஸ் பிரயாணம். வாந்தி மற்றும்
களைப்போடு சென்று சேர்ந்தாலும் உற்சாகத்தில்
இவை எதுவும் பெரிதாகத் தெரியவில்லை.

நாடக்த்தில் எனக்கு கதாநாயகன் வேடம்.
அதாவது சுதந்திரத்திற்காகப் போராடி மடியும்
'மாவீர மன்னன்' பாத்திரம்.

ஆனால் இது போன்ற‌ அரிதான இடங்களுக்குச்
செல்லும் அளவுக்கு அன்று எனக்கிருந்த ஆடைகளில்
எதுவும் பிடிக்காததால் நண்பன் ஒருவனிடமிருந்து
வாங்கி அணிந்து சென்றிருந்தேன்.

நாடகம் முடிந்த பிறகு அதனைப் பதிவு செய்தவர்
என்னைத் தனியாக அழைத்து,

'பேரு பெத்த பேரு, டப்பு கிப்பு லேது'
போன்றதொரு தொனியில்,

'ஏம்பா, வேடமோ சுதந்திரப் போராட்டத்
தியாகியின் வேடம் ஆனால் நீ அணிந்திருப்பதோ
அன்னிய தேசத்து ஆடை , இது எப்பூடி....? '

என்ற போது அது வரை இருந்த நாடக வீரம்
கரைந்து அசடாக வழிந்தது.

* * * * *

இரண்டாவது முறை வழிந்த அசடு
-------------------------------

இந்த முறை வினாடி வினா நிகழ்ச்சி. நாங்கள்
வரிசையாக நிறுத்தி வைக்கப் பட்டோம்.

கேள்வி கேட்கப்பட்ட பின் ஒவ்வொருவரும்
மைக்கின் கிட்டத்தில் வந்து பதிலைச் சொல்ல
வேண்டும்.பதில் தெரியா விட்டால் 'தெரிய வில்லை'
என்று மைக்கில் சொல்ல வேண்டும்.

எனக்கென்னவோ தெரியவில்லை என்று சொல்வது
பிடிக்கவில்லை. அதற்கேற்றார் போல எல்லாவற்றிற்கும்
சரியான பதிலைச் சொல்லிக் கொண்டு வந்தேன்.

ஒரு கட்டத்தில் பிரம்மபுத்திரா நதி எங்கிருந்து
புறப்படுகிறது என்ற கேள்வி. எல்லோரும்
தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டு
வருகிறார்கள். எனக்கோ கேள்விக்கு பதில் உறுதியாக
ஞாபக‌த்திற்கு வரவில்லையென்றாலும் 'ம','ச','ர'
என்னும் மூன்றெழுக்களும் மின்னி மின்னி மறைந்தன.

எனது முறை வந்தவுடன் டென்ஷனுடன் கலந்து
வெளி வந்த பதில் 'மரோசரித்ரா'.

எல்லோருக்கும் ஷாக்.

மைக் அணைக்கப் பட்டு, விளக்கு எரிந்தது.
பதிவறையில் எல்லோரும் சிரித்தது தெரிந்தது.

எங்களைக் கேள்வி கேட்டவரும் சிரித்து
'எலே! அது ஒரு மலையாளப் படம் டோய்'.

அசடு வழிந்து சிரித்து சமாளித்துச் சொன்னேன்

'ஆங் Sorry, அது மானசரோவர்'.

வினாடி வினா பதிவு தொடர்ந்தது.

--------------------------------

இதுல ஒரு கொடுமை என்னன்னா, முதல் முறையாக வானொலி நிலையம்
சென்று நடித்த நாடகத்தைக் கேட்பதற்கு வீட்டில் ரேடியோ கிடையாது.

இரண்டாம் முறை, வினாடி வினா நிகழ்ச்சி கேட்க ரேடியோ இருந்தது,
ஆனா கரண்டு போய்டுச்சு. :-)


--------------------------------

டிஸ்கி: என்ன மக்கள்ஸ் ! கொஞ்சமேனும் புன்னகைப் பூ பூத்ததா ?
செல்லமாகத் திட்டப் பட்டதாக உணர்ந்ததால் இந்தத் தலைப்பூ.

நல்லாயிருங்கப்பூ :-)

0 comments:

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)