Thursday, May 13, 2010

சிலருக்கு அட்வைஸ்னா ரொம்பப் பிடிக்குமாமே

" கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர் "

என்ற நாமக்கல்லாரின் வரிகள் இன்று வரை மனதில் இருக்கக் காரணம்
அதன் எளிமையான, புரியும் படியான வார்த்தைகளும் அது சொல்லும்
மென்மையான கருத்தும். எளிமையும் மென்மையும் ஒரு பெரிய
சக்தியை உள்ளடக்கி இருக்கிறது.

'எளிமையும்,மென்மையும்' இறை நம்பிக்கையாளனின் பண்புகள்
என்று எம் பெருமானார் (ஸல்) பகர்ந்திருக்கிறார்கள்.


உர்தூ அல்லது ஹிந்தி மொழியில் சொல்வார்கள்,

'சோட்டா பன்கர் கஹீ(ன்)பி ரஹ்சக்தா ஹே, பல்கே
படா பன்கர் அப்னே கர்மே பி ரஹ்னா முஷ்கில் ஹே'

( சிறியோனாக எங்கும் இருந்து விடலாம் எளிதில் ; ஆனால்
வலியோன் நினைப்பில் தம் வீட்டில் கூட வசிப்பது கடினம் )



பார்வை,கேள்வி,பேச்சு/எழுத்துக்களின் மூலம் சிந்தனை தூண்டப்பெற்று
உள்ளத்தில் பதிவாகிச் செயலாக உருவெடுத்து அதுவே பழக்கமாகிப்
படிப்படியாகப் பண்பாகப் பரிணமளிக்கிறது. அப் பண்புதான் இப் பூவுலகில்
சக வாசிகளோடு சமத்துவ சகோதரத்தோடு சமத்தாகவோ அல்லது சண்டைக்
கோழியாகவோ வாழ வழி வகுக்கிறது. (அப்பாடி..?)

எளிமையைப் பத்தி சொல்றதுக்கே கடினமாகத்தான் எழுத வருது.

என்ன சொல்ல வர்ரேண்ணா,

1) பண்பு ரொம்ப ரொம்ப‌ முக்கியம். அது கிடைக்கணும்னா,

எண்ணமும் எழுத்தும் பண்பென்னும் இலக்கை நோக்கியப் பயணமாக இருக்க வேண்டும்.

2) இப்பத்தான் முதல் வரிக்கு வருகிறேன்.

சமூக நலக் கருத்துக்களைத் ஏந்தி நாம் எழுதும் கவிதையோ அல்லது கட்டுரையோ

(பாராட்டைப் பெறும் நோக்கமில்லாமல்)

எளிமையாகவும் மென்மையாகவும் அமைந்தால் எல்லோரையும் எளிதில்
சென்றடையும் பயனுள்ள,பயிராகும் முறையில் .


டிஸ்கி : அடுத்த பதிவு எளிமையான முறையில் 'கதை' ஒண்ணு சொல்லப் போறேன்.
அதற்கான முன்னோட்டம்தான் இது. பின்னூட்டத்துல தாக்கிறாதீங்கப்பூ :-)

2 comments:

Unknown said...

:)

அரபுத்தமிழன் said...

என்ன மாங்க்ஸ், போன பதிவுக்கு ஆளக் காணோம்

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)