Tuesday, July 06, 2010

டாப் டென்னா இல்ல நூத்துல ஒண்ணா


இல்லையில்லை,
'மனித கோடிகளிலே'
நம்பர் ஒண்ணு, இதை
நம்பாதவன் வாயிலதான் மண்ணு.


====================================================================




=====================================================================

'முகம்மது'க்கு அர்த்தமே புகழப்பட்டவர்.

இகழ நினைப்ப‌வர்களே வேறு வழியின்றி புகழ்ந்ததும்
அதையும் மீறி
இகழ்ந்தவர்கள் வாழ வழியின்றி
இருந்ததையும் இழந்து இழிந்தவர்களாகிப் போனதும்
இன்றல்ல நேற்றல்ல அது எக்காலத்திற்குமுள்ள விதி
அதை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது.

====================================================================

'உம்மி நபி' என்றாலே எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றுதான்
நினைத்தேன்/தோம். ஆனால் நாகூர் ஈ எம் ஹனீபா பாடியதைக்
கேளுங்கள்.

"பள்ளி சென்று படித்ததில்லை ; பாடம் ஏதும் கேட்டதில்லை
'சொல்லித்தரும் தகுதி' இந்த துன்யாவில் எவர்க்குமில்லை (பள்ளி)

'அல்லாஹ்வே ஆசிரியன்' ; அனைத்துமே ஆச்சர்யம்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் சேதிகளே
(ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா....)

(எழுதிக் கொடுத்த கவிஞருக்கு ஒரு ராயல் சல்யூட்)

====================================================================

தகுதி யாருக்கும் கிடையாது என்பதற்காக மட்டுமல்ல ; பிறபின்
இவருக்கு நான் தான் கற்றுக் கொடுத்தேன் என்று எவரும் உரிமை
கொண்டாடக் கூடாது என்பதற்காகவும் தான்.

நபியை ஏழு வானம் தாண்டி வரவழைத்தது கவுரவிப்பது மட்டும்
நோக்கமல்ல, எவனும் அல்லது எந்த விஞ்ஞானியும் விஞ்சக் கூடாது
என்பதற்காகவும் தான்.(இன்னும் இந்த அஞ்ஞானிகளால்
முதல் வானத்தையே கண்டு பிடிச்ச பாடில்லை)

நிலவுக்குள் காலடி வைத்தத‌ற்கே இந்தக் கொக்கரிப்பு எனில் தாம்
நின்ற இடத்திலிருந்தே நிலவைப் பிளந்து பின் சேர்த்தமைக்கு
என்ன சொல்றீங்கப்பூ !?.


சரி, சாதனைகளை விடுங்க, அதெல்லாம் நூத்துக் கணக்குல இருக்கு,
அவற்றைச் செய்து காட்ட நமக்கு மட்டுமல்ல எந்த மேஜிக்
வித்தைக்காரனாலும் முடியாது. ஆனா நாம கடைபிடிக்கத் தோதாக
எத்தனையோ நல்ல விஷயங்களை விட்டுச் சென்றுள்ளார்களே,
அதைப் பார்க்க வேணாமா.

ரெண்டு மூணு நல்ல கருத்துக்களைச் சொன்னதற்காக‌ பெர்னாட்ஷா
போன்ற அறிஞர்களைக் கொண்டாடுகிறோமே, நபிகள் நாயகத்தை நல்ல
மனதோடு (திறந்த மனதோடு) படிப்பதற்குத் தடையாக இருப்பது எது ?

PREJUDICE என்கிற, ஏற்கெனவே அவர்கள் மீதுள்ள வஞ்சமும்,கசடும்
அல்லது படித்தாலும் குறை காணும் நோக்கமேயன்றி வேறில்லை

போற்றுவார் போற்றட்டும் புழுதிவாறி தூற்றுவோர் தூற்றட்டும் என்று
இருக்க முடியவில்லை காரணம் மனம் தாங்க முடியவில்லை இந்த‌
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்.

புறக்கணிப்பும் புழுதி வாரி தூற்றுவதும்தான் நபிகளைப் பற்றிய நல்ல‌
விஷயங்கள் மாற்றாரிடத்தில் சென்றடைய‌வில்லை.

நபியுடைய மருமகன் ஹஜரத் அலீ (ரலி) அவர்களிடம் நாயகத்தைப் பற்றிக்
கேட்டபோது, 'முகம்மது(ஸல்)அவர்கள் கடுமையான தாகத்தின் ச‌மயத்தில்
கிடைத்த குளிர்ந்த நீரைப் போல் எங்களுக்குத் தெரிந்தார்கள்' என்று.

ஹஜரத் குபைப் (ரலி) அவர்களை இறை மறுப்பாளர்கள் தூக்கு மரத்தில்
ஏற்றி விட்டுக் கேட்டார்கள், தமது அரிப்பை அல்பத் தனமாகத் தீர்க்கும்
வண்ணம், 'உம்மை விட்டு விடுகிறோம், ஆனால் உமக்குப் ப‌திலாக
முகம்மதைக் கழுவிலேற்ற சம்மதிப்பீரா ? '.

குபைபிடமிருந்து உறுதியாக பதில் வந்தது. 'நான் வீட்டில் மனைவி
குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கும் நிலையிலும் நபியுடைய காலில்
முள் தைப்பதைக்கூட எங்களால் தாங்க முடியாது'.

----------------------------------------------

'ஹூம் ...

"என்று தெரியும் எங்கள், நபிகளின் தியாகம்
அன்று புரியும் இந்த அடிமையின் சோகம்"

நாயகத்தைப் புகழ்வதற்கு வாய்ப்பளித்த நண்பர்களுக்கு நன்றி.

இந்த நேரத்தில் இது கூட எழுதலன்னா ...

வலைப்பூ வைத்திருப்பதே வேஸ்ட்டு.

3 comments:

அரபுத்தமிழன் said...

எழுதி முடிப்பதற்குள்ளேயே தமிழ்மணத்தில் வலம் வர ஆரம்பித்து விட்டது. Publish செய்தாலே தமிழ்மணத்தில் வருதே அப்ப ஏன் மற்ற திரட்டிகள் தானாகத் திரட்டுவதில்லை ?

ஜெய்லானி said...

இதில் ஒவ்வொரு வரியும் உண்மைதான் போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் . இது நூற்றுல ஒன்னு இல்ல . எத்தனை கோடி எடுத்தாலும் முஹம்ம்த் (ஸல் ) அவரே முதல்...

அரபுத்தமிழன் said...

//எத்தனை கோடி எடுத்தாலும் முஹம்ம்த் (ஸல் ) அவரே முதல்...//

நச், நன்றி ஜெய்லானி.

தங்க மகனுக்கும் நன்றி, ஆனா
தந்த நேரம்தான் நெருடியது. நம்
தங்கத் தலைவரைத் தாக்கியவர்களும்
அந்த மேடையிலே பரிசு பெற்றதால் நீங்கள்
தந்ததைப் பெற நான் முன் வரவில்லை.
மன்னிக்கவும்

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)