அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன்
திருநாமம் போற்றி துவக்குகின்றேன் அல்லாஹ் !
எல்லா உலகும் ஏகமாய் ஆளும்
வல்லோன் தனக்கே வான் புகழ் அல்லாஹ் !
அடியார்க்கு அருளும் அன்பாளன் நீயே
முடிவான நாளின் முதலோனே அல்லாஹ் !
உன்னையே நாங்கள் உவந்தேத்துகின்றோம்
உன்னிடத்தன்றோ உதவியும் அல்லாஹ் !
நன்னெறி மீதே நடத்துவாய் எம்மை
நின்னருள் நேயர் நெறியினில் அல்லாஹ் !
நின் கோபம் கண்டோர் நெறி விட்டகன்றோர்
செல் நெறி தன்னில் செலுத்தாதே அல்லாஹ் !
- ஆமீன்
1 comments:
இறை வணக்கத்திற்கு பின்னூட்டம் இட முடியாது - துவக்கம் அருமை.
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)