Showing posts with label ஆயுதம். Show all posts
Showing posts with label ஆயுதம். Show all posts

Tuesday, June 27, 2017

ஆயுதம் ஏந்தும் கால்நடைகள்



பசியில்லாவிடினும் ...

வெறுமனே வேட்டையாடச் சொல்லி
வெறியூட்டப்பட்ட விலங்குகள்
வெளியில் விடப்பட்டுள்ளன
விலங்கினக் காப்பகத்திலிருந்து

கொடூர முகமும் கொடிய பற்களும்
கூரிய நகங்களும் கொண்டவை அவை
கூடவே ஆயுதங்களும் கொடுக்கப்பட்டு
கால்நடைகளுடன் கலந்துள்ளன
பசுத்தோல் போர்த்திய புலிகளாக

ஆடு மாடுகளும் மான்களும்
ஆயுதம் ஏந்தத் தடையிருப்பதால்
தம்மைத் தற்காத்துக் கொள்ள முடியாமல்
தவித்துச் சாகின்றன இரயில்களிலும் பயணங்களிலும்

இளம் கன்றொன்றின் மறைவைக்
கண்ட தினத்தில் கவலை கொண்ட
முகத்துடன் பள்ளி நோக்கி விரைகையில்
மூன்று வரிகள் மனதில் மின்னி மறைந்தன


" மாடுகள் வெட்டிய கத்திகளுக்கு
ஓய்வு வேண்டாம் இனி அவை
அந்த மாக்களை வெட்டட்டும் "


பதிவுலகில் பதிந்து பரப்பஎண்ணிய தருணம்
பள்ளியின் மூலையிலிருந்து நபிமொழியொன்று
படிக்கப்படும் சப்தம் வந்தது


" துஆ என்னும் பிரார்த்தனைதான்
இறைநம்பிக்கையாளனின் ஆயுதம் "


வாருங்கள் சகோதரர்களே துஆ என்னும்
ஆயுதத்தைக் கையிலெடுப்போம்

*                                   *                               *