போன பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா.
ஆனால் 'வி'தி விளையாடி, கழன்று வந்து கதைக்குள்
புகுந்து கொண்டு க(வி)தை யாயிற்று, என் செய்வது !
* * * * *

காற்றடித்த பொழுதில்
பிரிகிறோமே மீண்டும்
சந்திக்க முடியுமாவெனத்
தேம்பிய என் மீது
தெம்பாக ஏறி அமர்ந்த
மண்ணாங்கட்டீ ...
மழை பொழிந்தால் என்ன ?
உன்னைக் கரைய விடாமல்
காக்கும் 'அரச'
இலையுடனல்லவா
உன் நட்பும்
இன்ன பிறவும்..
