Showing posts with label பிரார்த்தனை. Show all posts
Showing posts with label பிரார்த்தனை. Show all posts

Wednesday, April 13, 2011

(சிறந்த) தலைமை தாராயோ தலைவா !

இறைவா !


நல்லதை

நல்லவர்களை

நடுநிலை நாயகர்களை

ந‌ற்சிறந்த ஆளுமைகளை

நட்புறவு பாராட்டுபவர்களை

நாட்டை வளப்படுத்துபவர்களை

நானிலம் சிறக்க நாடாளுபவர்களை

நாட்டு மக்களைக் கூறு போடாதவர்களை


இன்று எங்களுக்காகத் தெரிந்தெடுத்துத் தருவாயாக ! ஆமீன் !

Wednesday, October 03, 2007

தோற்றுவாய்



அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன்
திருநாமம் போற்றி துவக்குகின்றேன் அல்லாஹ் !

எல்லா உலகும் ஏகமாய் ஆளும்
வல்லோன் தனக்கே வான் புகழ் அல்லாஹ் !

அடியார்க்கு அருளும் அன்பாளன் நீயே
முடிவான நாளின் முதலோனே அல்லாஹ் !

உன்னையே நாங்கள் உவந்தேத்துகின்றோம்
உன்னிடத்தன்றோ உதவியும் அல்லாஹ் !

நன்னெறி மீதே நடத்துவாய் எம்மை
நின்னருள் நேயர் நெறியினில் அல்லாஹ் !

நின் கோபம் கண்டோர் நெறி விட்டகன்றோர்
செல் நெறி தன்னில் செலுத்தாதே அல்லாஹ் !

- ஆமீன்