Showing posts with label அமானுஷ்யம். Show all posts
Showing posts with label அமானுஷ்யம். Show all posts

Monday, June 19, 2017

வெப்பம் சூடு தணிக்கும் வீடு


" அக்னி வெயில் ஆர்ப்பரித்த நாளொன்றில்
  நீர் அருந்த மண் குவளையைக் கையிலேந்தி
  வாயருகில் கொண்டு சென்று கவிழ்த்தியதுதான் தாமதம்
  பாகுபலியின் போர்க் காட்சி கண் முன்னே நிகழ்ந்தது.

  ஆம்.. ஆயிரக்கணக்கான‌ எறும்பு வீரர்கள்
  ஆர்த்தெழுந்து ஏறினார்கள் கை விரல்களினூடே 

  சுறுக் சுறுக்கென்று கடி அம்புகளால் தைத்தனர் "   J


வேறொன்றுமில்லை, தண்ணீர் குடிப்பதற்காக மண் பானை வைத்திருப்போம் 
அல்லவாநானும் ஒரு சிறிய, நாலைந்து குவளை நீர் நிரம்பும் அளவுக்கு 
மண்ணால் செய்யப்பட்ட ஜக் (JUG) வைத்திருந்தேன். பாதி அளவு தண்ணீர் 
இருந்த நிலையில் வெளியூர் சென்றிருந்தேன். இரண்டொரு நாளில் வெயில் 
மாலைப் பொழுதில் திரும்பி வந்து தாகம் தீர்க்கும் ஆவலில் ஜக்கைக் கவிழ்த்த 
போது தண்ணீர் இல்லாமலிருப்பதைக் கண்டு (யாருமற்ற இச் சிறு வீட்டில் யாரடா 
தண்ணீர் குடித்தது) ஆச்சர்யப் பட்டாலும், கவுண்டமணி ஸ்டைலில் 'அமானுஷ்ய 
ஒலகத்துல இதெல்லாம் சகஜமப்பா'ன்னு தெனாவெட்டா சொல்லிக்கிட்டே 
மீண்டும் அதில் தண்ணீர் நிரப்ப ஆரம்பித்தேன்அப்போது நிகழ்ந்ததுதான் 
மேற்சொன்ன காட்சி.

ஆச்சர்யம் என்னவென்றால் எறும்புப் படைதான் தண்ணீரைக் காலி செய்திருக்கிறது மட்டுமல்லாமல் காலி செய்து விட்டு வெயிலுக்கு இதமாக 'கேம்ப்' அடித்து தங்கியிருக்கிறார்கள். குட்டி கரப்பான் பூச்சிகள் சிலவும் இதில் அடக்கம்
Camp Boss வேலைக்கான விசாவில் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். :)
இது ஒரு எச்சரிக்கைப் பதிவு,  நல்லவேளை பானை பெரிதாக இருந்து
மேற்படியான்  ஜாக்  வந்து விட்டால் ?

(JACK என்பது Rango படத்தில் வரும் பாம்பின் பெயர் ,
அதில் வரும் ஒரு வசனம் HAWK க கொன்னுட்டே, இனி JACK வந்துருவான்)

அதனால‌ மண் பானை வைத்திருப்பவர்கள் கொஞ்சம் உஷாராய் இருக்கவும்

அமானுஷ்யம் என்று சொல்லிவிட்டு அதைப் பற்றி எழுதலன்னா நல்லா இருக்காது. முன்பொரு நாள் பள்ளிக்கூடமொன்றில் படிக்கும் இரண்டு சிறுவர்களுக்கு 
தெருவில் செல்லும் பாம்பாட்டியைக் கண்டவுடன் ஒரு விபரீத ஆசை ஒன்று 
தோன்றியதுஒருவன் மற்றவனிடம் சொன்னான் 'நான் பாம்பாக மாறி 
மேற்கூரையில் ஒளிந்து கொள்கிறேன், நீ பாம்பாட்டியை அழைத்து வந்து மேலே பாம்பிருப்பதாகச் சொல்நானும் அவன் பார்த்தால் தெரியும் வண்ணம் மேலே 
அமர்ந்து கொள்கிறேன்என்னைப் பார்த்ததும் என்னைப் பிடிப்பதற்காக பிடிலை 
எடுத்து ஊத ஆரம்பித்து விடுவான். நானும் கீழிறங்காமல் விடாப்பிடியாக 
விளையாட்டு காட்டுவேன்அவன் ஊதிக் களைக்கும் வரை இப்படியாக‌  
விளையாட்டு காட்டி வேடிக்கை பார்ப்போம்’.

(இது முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்த அரபு தேசத்தில் நடந்த சம்பவம்.
தமிழில் பேய்,பிசாசு,பூதம் என்று சொல்வதை முஸ்லிம்கள் ஜின் என்று 
சொல்வார்கள்.  நல்ல ஜின், கெட்ட ஜின் என்று இரண்டே வகை. இவைகள் 
நெருப்புப் புகையினால் படைக்கப் பட்டவர்கள். நினைத்த உருவம் எடுக்கும் 
வல்லமை இறைவனால் இவைகளுக்குத் தரப்பட்டிருக்கிறது
"பாம்பாக மாறி வந்து ... என்ற பாட்டைக் கேட்டிருப்பீர்கள் அல்லவா,  
அவை இந்த ரகம்தான். ஸ்கூலில் சேர‌ ஆதார் கார்டொ, பர்த் சர்ட்டிஃபிகேட்டோ 
தேவைப்படாத அந் நாட்களில் அவைகளின் குழந்தைகளும் மனிதக் குழந்தையின் தோற்றத்தில் ஸ்கூலில் சேர்ந்து படித்ததுண்டு).

இப்ப கதைக்கு வருவோம். பாம்பாட்டியும் ஊத ஆரம்பித்தான். என்ன ஆச்சர்யம் 
சில நிமிடங்கள்தான் கழிந்திருக்கும், மேலிருந்த பாம்பு மெதுவாகக் கீழிறங்கி 
திறந்து கிடந்த அவனது பெட்டிக்குள் சென்று பவ்யமாகப் படுத்துக் கொண்டது
 பாம்பாட்டியும் பெட்டியை மூடி எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினான்
பதறிப் போன மற்றொரு சிறுவன் நடந்த உண்மையைக் கூறி நண்பனை 
மீட்டு வந்தான்பிறகு அவனிடம் 'டேய், வரமாட்டேன், விளையாட்டு 
காட்டுவேன்னு  நீதானடா பெருசா சொன்னே, ஏண்டா இறங்கி வந்தாய்'ன்னு 
கேட்டதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா.

'அதையேன் கேக்குற, அவன் ஊத ஊத என்னைச் சுற்றி நெருப்புச் சூடு பரவ ஆரம்பித்து விட்டது. அவனது கூடை மட்டும்தான் பாதுகாப்பாய் குளுகுளு இடமாய்த் தெரிந்தது. அதனைத் தவிர வேறு வழியில்லை என்பதால்தான் அங்கு செல்ல நேர்ந்தது'.


                            *                                                             *                            



Monday, March 14, 2011

பெண் ஒன்று கண்டேன் .. பெண் அங்கு இல்லை ...

விசிட் விசாவில் வந்த மனைவியையும் குழந்தையையும் ஊருக்கு
அனுப்பி விட்டு மீண்டும் பேச்சிலர் வாழ்க்கை வாழ ஒரு பழைய கட்டிடத்தில்
ஃப்ளாட் ஓனர் தங்கும் அறையில் ஒரு பெட் ஸ்பேஸ் எடுத்துத் தங்கினேன்.

அங்கே நான் மாறும் வரை அந்த பில்டிங் முன்பு மகப்பேறு மருத்துவமனையாக‌
இருந்த விவரம் எனக்குத் தெரிந்திருக்க‌வில்லை. பொருட்களை ஒவ்வொன்றாகத்
தூக்கிக் கொண்டு முதல் மாடியில் இருக்கும் எனது அறையில் படிகளின் வழியே
சென்று வைத்துக் கொண்டிருந்தேன்.(மெஸனைன், எனவே லிஃப்ட் கிடையாது)

கொஞ்சம் வெயிட்டான பேக்கேஜைப் படிகளின் வழியே தள்ளாடித் தள்ளாடி
எடுத்துச் சென்று உள்ளே நுழைந்ததுதான் தாமதம் 'சடக்'கென்று பிடித்துக்
கொண்டது முதுகெலும்பு சங்கமிக்கும் இடுப்புப் பகுதியில்.

தொடர்ந்து ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரங்களோ ஒரு மாதிரியாய்
கோணிக்கொண்டு அலுவலகம் சென்று வந்தேன். இதை விட ரொம்ப முக்கியமானது,
அங்கு சேர்ந்த முதல் ஒரு வாரம் வரை தூங்குவதற்குக் கஷ்டப்படவில்லை,
மாறாக‌த் தூங்கி எழுந்ததும் கஷ்டப்பட்டேன்.

காரணம் கைகள் நூலிழை போல் கடிக்கப்பட்டு இருந்தன. ஒருநாள் வலது கையும்
மறு நாள் இடது கையும் அங்கங்கே கடிக்கப்பட்டு சிறிதாய் தோல் கிழிந்திருந்தது.

என்ன காரணமென்று தெரியவில்லை, மூன்றாம் நாளிலிருந்து முழுக்கை
சட்டை அணிந்து தூங்கவாரம்பித்தேன். காலையில் எழுந்து பார்த்தால்
காதுகளின் மடல் ஓரங்கள் கடிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்துக் கொஞ்சம்
பயம் வர ஆரம்பித்தது.

இந்த நாட்டில் மூட்டைப் பூச்சிகளும்,சிறிய கரப்பான் பூச்சிகளும் இல்லாத‌
வீடுகள் இல்லையெனும் அளவுக்குச் சகஜமானவை. மூட்டைப் பூச்சியால்
கடிபட்ட இடம் தெரியும் ஆனால் கரப்பான் பூச்சி கடித்துப் பார்த்ததில்லை.
ஆதலால் அங்கங்கே உலாவிக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிதான்
கடித்திருக்கும் என்ற முடிவுக்கு வந்த பின் பயம் போய் விட்டது.

ஃப்ளாட் ஓனரிடம் முறையிட்ட போது, நான் எத்தனை காலமாக இங்கே
தங்கி வருகிறேன், ஒருபோதும் நான் இந்த மாதிரி கடிபட்டதில்லையே'
என்று சொன்னார். ஒருவேளை நாம் மிக இனிப்பானவனாக இருக்கிறோமோ
என்று மகிழ்ந்த‌ வேளையில் 'அய்யய்யோ, சர்க்கரை வியாதி வந்து
தொலைத்து விட்டதோ' என்ற ஐயமும் வந்து பயமுறுத்தியது.
என்றாலும் நான்கைந்து நாட்களுக்குப் பின் எல்லாம் சுமுகமாகச்
சென்றது. காரணம் 'கடி'கள் நின்று விட்டன.

பிறிதொரு நாள் படிகளில் இறங்கும் போது கால்களை காற்றில்
பறக்குமாறு தட்டி விட்ட படிகளின் மேல் பிடறி முட்ட‌ இடறி விழுந்தேன் :)

தூங்கும் போது சில வேளைகளில் எங்களின் இரு கட்டில்களுக்கு இடையில்
நிற்கும் நிலைக்கண்ணாடியிலிருந்து ஒரு பெண் என்னை கோபமாக உற்று
பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். நல்ல வேளை அப்போதே ப்ளாக்
எழுதுபவனாயிருந்தால் 'கனவில் ஒரு கோப தேவதை'ங்கற தலைப்பில்
ஒரு பதிவு வந்திருக்கும் :)

இப்படியாகச் சில மாதங்கள் ஓடி விட்டன.

ஒருநாள் ஒரு பெரியவரைச் சந்தித்தேன். எனக்கு முன்பே அறிமுகமானவர்.
சூஃபிஸம் அல்லது தரீக்கா வழியில் புலமை பெற்றவர். தமக்குத் தங்குவதற்கு
ஒரு அறை கிடைக்குமாவென விசாரித்தார். அச்சமயம் நானும் ஊருக்குப்
போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்ததால் எனது அறையில் தங்கிக்
கொள்ளுமாறு சொல்லி ஃப்ளாட் ஓனரைச் சந்திக்க வைத்து அனுமதி பெற்று
அவரைத் தங்க வைத்து விட்டு நானும் ஊருக்குச் சென்று விட்டேன்.

ஊரிலிருந்து திரும்பிய பின் எனது அறைக்குச் சென்றேன். பெரியவரும்
ஊருக்கு கேன்சலில் சென்று விட்டதாக ஃப்ளாட் ஓனர் சொன்னார். அதோடு
இன்னொன்றையும் சொன்னார்,

'பாய், பெரியவர் ஒரு தினுசான ஆளாய் இருப்பார் போல, ஒரு நாள் இரவு
திடீரென்று ஏதோ அரவம் கேட்டுக் கண் விழித்துப் பார்த்தேன். குடியரசு
தின விழாவில் கொடியேற்றுவார்களே அது போல ஏதோ சைகை செய்து
கீழே இறக்கிக் கொண்டிருந்தார், நேர்கீழே பாட்டில் ஒன்று வைக்கப் பட்டு
இருந்தது. அவரது வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது, கடைசியில்
பெருமிதத்தோடு சொன்னார்,'எங்கிட்டப் பலிக்குமா உன் பாச்சா'.

காலையில் அவரிடம் என்னவென்று விசாரித்தேன் ஒன்றுமே
சொல்லவில்லை புன்னகைத்ததைத் தவிர. எனக்கும் அவரோடு சரியாக ஒத்துப்
போகவில்லை, எனவே எனக்கெதிராக பில்லி சூனியம் ஏதும் செய்தாரா இல்லை
ஆளே லூசா, புரியவில்லையே பாய், உங்களுக்கு ஏதாவது புரிகிறதா.

நான் சொன்னேன் 'பயப்படாதீங்க பாய், உங்களுக்கெதிரானது அல்ல,
அந்தப் புன்னகையின் மூலம் எனக்குத்தான் தகவல் சொல்லியிருக்கிறார்,

'தம்பி, நீ தங்குவதற்கு வேறு இடம் பார்த்துக்கோ' :)

எஸ்கேப்பு