Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, May 04, 2011

அதிபர் ஒபாமாவுக்கு நன்றி

கொடூர டைரக்டர்களால்
ஆரம்பித்து வைக்கப் பட்ட‌
ஒரு மோசமான திகில் திரைப்படத்தை
முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு
நன்றியோ நன்றி

ஹீரோ, ஆன்டி ஹீரோ, வில்லன் என‌
ஒரு ஆளுக்கு இத்தனை கேரக்டரா
படம் முடிந்த பிறகுதான் தெரிந்தது
படத்தை முடித்து வைத்த
டைரக்டர்தான் ஹீரோ என்று

வில்லனைப் பெரிதாகக் காட்டினாலே போதும்
ஹீரோ பெரிதாகத் தெரிவார் என எங்கள்
வலையுலக சூப்பர் ஸ்டார்
லக்கிலுக் யுவகிருஷ்ணா
அன்றே சொல்லியிருக்கிறார்

நீங்கள்தான் ஹீரோ என்று
ஒத்துக் கொள்கிறோம்
தயவு செய்து மீண்டும் மீண்டும்
இது போன்று படமெடுத்து
ஹீரோயிசத்தைத் திணிக்காதீர்

உங்களுக்குப் பின் ..
கொடூர டைரக்டர் யாரும் வராத அளவுக்கு
ஏதாவது செய்ய முடியுமா (யா) ஒபாமா

நியாயத் தீர்ப்பு நாளென்று
ஒன்று இல்லையென்றால்
உலகில் நடக்கும்
குழப்பங்களையும் கொடூரங்களையும்
கண்டு இந்நேரம்
பைத்தியமாகி இருப்போம்

அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்

கடைசியில் ஒரு வேண்டுகோள்
தங்களின் பெயரில் ஒரு திருத்தம் வேண்டும்
நடு எழுத்து 'சா'க வேண்டாம்.
'மா'வின் பின் மறைந்திருக்கும் பெயர்
மீண்டும் உயிர் பெற வேண்டும்.

அந்த ஆசை கொஞ்சம் வந்தாலும் போதும்
வல்ல ரஹ்மான் நிறைவேற்றித் தருவான்.


வஸ்ஸலாம்.

Monday, January 31, 2011

வாக்காளப் பெருமக்களே


நாடாளும் அரசினைத் தெரிவு செய்யவிருக்கும் நண்பர்களே !

அனைவரின் கோரிக்கைகளுக்கும் அரசியல் வியாதிகள் செவிமெடுக்கும்
பொன்னான சமயமிது.

இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் இனி ஐந்தாண்டுகளுக்கு யாருக்கும்
சூடோ சொரணையோ இருக்காது.

நல்ல நல்ல கோரிக்கைகளைத் தயார் செய்யுங்கள்.

தயவு செய்து எந்தக் கட்சியையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்காதீர்.

நல்லவர்களையும் மனித நேயம் கொண்டவர்களையும் அடையாளம் காணுங்கள்.

அறிஞர்களையும் இளைஞர்களையும் தேர்தலில் நிறுத்துங்கள்.

கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்கள் நாட்டுக்கோ மக்களுக்கோ நல்லது செய்யும்
தகுதியில்லையெனில் நல்லவர்களை சுயேச்சையாக நிறுத்தி ஜெயிக்க வையுங்கள்.

சுயேச்சைகள் அதிகமாக ஜெயித்து அவர்களும் எந்தக் கட்சிக்கும் விலை போகாமல்
ஒரு புதிய கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைக்கலாம்.

மக்கள் எப்படியோ அப்படித்தான் அரசு அமையும்.

ஓட்டுப் போடுவதற்கு முன் இதெல்லாம் யோசிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு
கட்சியை ஆதரித்தால், பின்னால் புலம்ப வேண்டி வரும்.

ஆதலால் நம் ஆண்மை மதிக்கப் பட‌ நாட்டின் இறையாண்மை காக்கப்பட‌,

ஓட்டு வாங்க வரும் வேட்பாளர்களிடம் கோரிக்கைகளைத் திறமையாய்த் திணியுங்கள்.
'ஒண்ணு ஏதாவது செய்யட்டும் இல்லண்ணா ஙொய்யால செத்து மடியட்டும்' :)

வாழ்க ஜனகனமன நாயகம்.