Thursday, June 08, 2017

அகர முதல எழுத்தெல்லாம் ஆங்கிலத்தில்

குல்லா போட்ட முல்லாவும் தலை நரைத்த அய்யரும் அப்படி என்ன அடிக்கடி 
சந்தித்துப் பேசி சிரித்துக் கொள்கிறீர்கள் என யாராவது என்னிடம் கேட்டால்
கற்றாரைக் கற்றோரே காமுறுவர்”  என்று சொல்லிக் கொள்வதுண்டு.

அய்யர் ஆங்கிலப் புலமை மிக்கவர். கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் 
பணி புரிந்தவர். என்னை விட இருபது வருடம் மூத்தவர். திருக்குறள் மீது பேரன்பு 
கொண்டவர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதனை புத்தகமாக 
வெளியிட எண்ணம் கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். 
இஸ்லாத்தின் மீதும் பற்றுள்ளவர். ஒருநாள், நான் அவரிடம் திருக்குறள் ஆங்கில 
மொழிபெயர்ப்பு இதற்கு முன் நிறைய வந்திருக்கணுமே என்று கேட்டபோது, நிறைய 
இருக்கிறது, நான் இன்னும் அதனை எளிமைப் படுத்த முயற்சி செய்கிறேன் என்றார். 
அவருடைய ஆக்கத்தைப் பார்வையிட்டபோது மிகவும் சாதாரணமாய் இருந்தது.

உதாரணமாக 'மின்னுவதெல்லாம் பொன்னல்ல' என்பதை
‘We should not believe glittering things will always be gold’ 
என்று எழுதுவது போல, அதற்கு பதிலாய் 'All the glitters are not gold' 
என்று நறுக்கென்று / சுருக்கென்று / நச்சென்று கேட்சியாய் கவிதை மாதிரி இருந்தால் 
நன்றாய் இருக்குமே என்றேன். எனக்குத் தெரியவில்லை மாதிரிக்கு நீங்களே எழுதிக் 
காட்டுங்கள் என்றதால் ஒரு பத்து குறளுக்கு ஆங்கில மாதிரி எழுதிக் காண்பித்தேன். 
மேலும் இதுவல்ல, இதைவிட‌ இன்னும் எளிய சிறந்த வார்த்தைகளைக் கோர்த்து 
ஆங்கில இலக்கண, இலக்கிய விதிகளின் படி டிங்கரிங் செய்து தாங்களே எழுதலாமே 
என்றேன். எனது பத்து பாக்களையும் :)  தான் வழக்கமாகக் கூடும் குறள் மேவும் 
மண்டபத்திற்கு எடுத்துச் சென்று காண்பித்ததில் கீழ்க்காணும் மூன்றும் யாருக்கோ 
பிடித்ததாகச் சொல்லி திரும்பத் தந்து விட்டார். நல்லவேளை அடியோ திட்டோ
விழாததால் அடியேன் உலக மன்றமான ப்ளாக்கரில் அவற்றைச் சமர்ப்பிக்கின்றேன்.

நீங்களும் படித்து விட்டுத் திட்டாமல் சென்று விட்டால் இது போன்ற புலமைகள் 
மென்மேலும் வெளிக் கொணர ஏதுவாய் இருக்கும். J

1.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

All the letters starting from A
Are originating through Adams Bay

2.
இனிய உளவாக இன்னாது கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

Avoid Talking fire coated rude scars
While have honey coated fruit words

3.
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்

Though God says ‘No’  with
Thou effort  He will say ‘Lo’


என்ன நாஞ்சொல்றது சரியா இல்லை அய்யரை அப்படியே விட்டுடலாமா ?

:)

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையாக கவிதையாகவே
மொழி பெயர்த்திருக்கிறீர்கள்
வாழ்த்துக்களுடன்

அரபுத்தமிழன் said...

உடனடி உற்சாகக் கமெண்டிற்கு
நன்றி ரமணி சார்

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)