Sunday, May 16, 2010

உடுக்கை இழந்தவன் கை போல ..

எளிமையாய் ஒரு 'கதை' சொல்லப் போறேன் என்று
போன பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா.

ஆனால் 'வி'தி விளையாடி, கழன்று வந்து கதைக்குள்
புகுந்து கொண்டு க(வி)தை யாயிற்று, என் செய்வது !


* * * * *






காற்றடித்த பொழுதில்
பிரிகிறோமே மீண்டும்
சந்திக்க முடியுமாவெனத்
தேம்பிய என் மீது

தெம்பாக ஏறி அமர்ந்த‌
மண்ணாங்கட்டீ ...

மழை பொழிந்தால் என்ன ?

உன்னைக் கரைய விடாமல்
காக்கும் 'அரச'
இலையுடனல்லவா
உன் நட்பும்
இன்ன பிறவும்..

7 comments:

Ahamed irshad said...

கவிதை வித்தியாசம். புரிந்துக்கொள்ள சிரமம் புதியவர்களுக்கு.......

அரபுத்தமிழன் said...

புரியவில்லையா!
ஹைய்யா நானும் கவிஞனாயிட்டேன். :-)
தம்பி வருகைக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

அரசஇலைக்கும், மண் கட்டிக்கும் இருக்கும் நட்பு - புறா, எறும்பு கதை போல!! சரியா?

ஹை, எனக்குப் புரிஞ்சிடுச்சே!! அப்ப நான் இலக்கியவாதியாகிட்டேனே!! :-))

அரபுத்தமிழன் said...
This comment has been removed by the author.
அரபுத்தமிழன் said...

நீங்கதான் புலவர்
இல்லையில்லை நீர்தாம் புலவர்.

இன்றிலிருந்து உங்களுக்கு
' இலக்கிய தீதி ' என்ற பட்டம் கொடுக்கப் படுகிறது :-)


('தீதி' என்றால் சகோதரி
என்று அர்த்தம் இன்று நீங்கள் பதிந்த
'தீ' பதிவினால் அல்ல அல்ல அல்ல)

ஹுஸைனம்மா said...

டேங்ஸ்!! இந்தப் பட்டத்த “வச்சா” ஒரு நூறு ரூபாயாவது தேறுமா? ;-)))

அரபுத்தமிழன் said...

:-))

பணத்திற்குத் தேறாது
But
பதிவிலே பறக்கட்டும்

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)