Wednesday, October 03, 2007

தோற்றுவாய்



அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன்
திருநாமம் போற்றி துவக்குகின்றேன் அல்லாஹ் !

எல்லா உலகும் ஏகமாய் ஆளும்
வல்லோன் தனக்கே வான் புகழ் அல்லாஹ் !

அடியார்க்கு அருளும் அன்பாளன் நீயே
முடிவான நாளின் முதலோனே அல்லாஹ் !

உன்னையே நாங்கள் உவந்தேத்துகின்றோம்
உன்னிடத்தன்றோ உதவியும் அல்லாஹ் !

நன்னெறி மீதே நடத்துவாய் எம்மை
நின்னருள் நேயர் நெறியினில் அல்லாஹ் !

நின் கோபம் கண்டோர் நெறி விட்டகன்றோர்
செல் நெறி தன்னில் செலுத்தாதே அல்லாஹ் !

- ஆமீன்

1 comments:

cheena (சீனா) said...

இறை வணக்கத்திற்கு பின்னூட்டம் இட முடியாது - துவக்கம் அருமை.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)