Sunday, October 21, 2007

ஒற்றுமை தேடி

மனிதனைப் பிரிப்பது எது

1. இடம் (நாடு/மாநிலம்/ஊர்/வீடு)
2. இனம் (நிறம்/மதம்/சாதி)
3. மொழி
4. அறிவு (கொள்கை)
5. அந்தஸ்து (பணம்/பட்டம்/பதவி)

(இன்னும் வேறேதும் இருந்தால் பின்னூட்டமிடலாம்).

இவற்றில் சில தவிர்க்க முடியாதவை

உதாரணமாக இடம்,நிறம் போன்ற பிறப்பால் ஏற்பட்டவை.
இதில் நமது திறமை இல்லை. இதில் பெருமை காண்பவன்
முட்டாள் எனும் போது 'வெறி' கொள்பவனை என்ன சொல்வது.

மற்றவை முயற்சியால் மாற்றிக் கொள்ளலாம். ஆனால்
படித்தவர்கள் கூட பிடிவாதம் பிடிக்கிறார்களே என்ன செய்வது.

இவையன்றி மனிதனை இணைக்கக் கூடிய பாசமும் நேசமும் கூட
அவன் தனித்தனி குழுவாகப் பிரியக் காரணமாகின்றன.

அப்போ ஒற்றுமை ஏற்பட என்னதான் வழி ?

2 comments:

அரபுத்தமிழன் said...

என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை ? எழுதியதில் பாதிக்கு மேல் காணவில்லை.

cheena (சீனா) said...

எழுதியதில் பாதி காணவில்லையா ?? இந்தப் பிரச்னை நேரடியாகத் தட்டச்சு செய்யும் போது வரும். காணாமல் போய் விட்டால் திரும்ப தட்டச்சு செய்ய முடியாது. எண்ண ஓட்டங்கள் பழைய பதிவுக்கும் புதிய பதிவுக்கும் அதிக வித்தியாசம் காட்டும். தாளில் எழுதி வைத்துப் பிறகு தட்டச்சு செய்வது நன்று.

ஒற்றுமைக்கு எதிரி விளையாட்டின் ரசிகத் தன்மை. சரியான வாதமா ?? கிரிக்கெட் ரசிகர்கள் ஹாக்கி ரசிகர்களுக்கு எதிரிகளா ??

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)