Monday, October 15, 2007

தனித்திரு விழித்திரு பசித்திரு


இதைப் படிக்கும் போது இதனைச் சொன்ன
மகான்களின் பெயர் ஞாபகம் வருவதற்குப்
பதிலாக இதனை வலைப்பூ தலைப்பில் கொண்ட
பதிவரின் ஞாபகம் தான் வருகிறது !
(என்ன தவம் செய்தனையோ ?)

நம் உடலையும் மனத்தையும் பக்குவப்படுத்துவதற்கு
இம் மூன்றும் அவசியம். இறைவன் முஸ்லிம்களுக்கு
மிகக் கிருபை செய்திருக்கிறான் ரமலான் என்னும்
மாதத்தைத் தந்து.

இம்மாதத்தில் முஸ்லிம்களுக்கு இம்மூன்றின் பயிற்சி
கிடைக்கிறது. அது மட்டுமல்ல பொறுமை,இறையச்சம்,
பசியுணர்தல்,ஏழ்மை நிலை உணர்தல் இன்ன பிற
பண்புகள் கிடைக்கப் பெறுகின்றன.

If you lost your money : nothing is lost
If you lost your health : something is lost
If you lost your characteristic : everything is lost

என்று சொல்லப்படுவதுண்டு. ஆக ஒவ்வொருவருக்கும்
பணம் காசை விட கேரக்டர்தான் முக்கியம்.
பணம் சம்பாதிக்க படாத பாடுபடும் நாம் என்றாவது
பண்பு' பெற பாடு பட்டதுண்டா ?


நோன்பு வைத்திருக்கும் ஒருவர் தனித்து இருக்கிறார்.
நோன்பு திறப்பதற்கான உணவு பதார்த்தங்கள்
தயாரிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
பசிக்கவும் செய்கிறது. ஆனால் சாப்பிடுவதில்லை.
யாரும்தான் பார்க்க வில்லையே சிறிது சாப்பிட்டால்
என்னவாகி விடும் என்று கூட யோசிப்பதில்லை
காரணம் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற
உணர்வுதான் அவரை அப்படி கட்டிப் போட்டிருக்கிறது.

இதற்குத்தான் 'இறையச்சம்' என்பார்கள். இந்த
இறையச்சம் ஒருவருக்கு வாய்த்து விட்டால் அவர்
எல்லாப் பாவங்களையும் விட்டுத் தப்பித்து விடுவார்.

நோன்பு வைத்தவருக்கு இரண்டு சந்தோஷங்கள்
என்பதாக இஸ்லாம் கூறுகிறது.ஒன்று நோன்பு திறக்கும்
போது மற்றொன்று இறைவனைச் சந்திக்கும் போது.

நோன்பு பிடிக்காமல் நோன்பு திறப்பவர்களோடு சேர்ந்து
உண்டு பாருங்கள் அவ்வளவு சந்தோஷம் கிடைக்காது
(அது குல்லா போட்டு நோன்பு கஞ்சி குடிக்கும் அரசியல்
வியாதிகளுக்கு ஓட்டு வேண்டுமென்றால் கிடைக்கலாம்
ஆனால் நோன்பு திறக்கும் சந்தோஷம் மட்டும் கிடைக்காது)

நோன்பு திறக்கும் போது சந்தோஷம் உண்மையில்
நோன்பு பிடித்தவர்களுக்கே

அனைத்து சகோதர நோன்பாளிகளுக்கும் எனது
நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

2 comments:

Akilan said...

brother,

u misunderstood i think,

thanithiru - be unique
vilithiru - be aware
pasithru - be curious to know
knowledge

cheena (சீனா) said...

இனிய ஈகைத் திருநாள் நல் வாழ்த்துகள் நண்பரே !! அனைத்து இசுலாமியத் தோழர்களுக்கும் - நோன்பு நோற்கும் நோன்பாளிகளுக்கும் - வாழ்த்துகள்

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)