தனக்கென்று எதுவுமில்லாததாலோ ...
அல்லது
நிரந்தரமாக விட்டுச் செல்லாததாலோ ...
தம்மை விட்டு விரைந்தோடும்
எல்லாவற்றையும் ரசிக்கிறது மனசு
... இரயில் பயணங்களில் ...
உயிர் பிரியும் போதும் ..
இப்படித்தான் இருக்குமென
எப்படிச் சொல்ல முடியும்
கண்டதையும் நேசிக்கிறோம்
கொண்டதும் ஏராளம்
நம்மை விட்டுப் பிரிகின்றவற்றை
நேசிப்பதால் வலியும் வேதனையும்
தவிர்க்க முடியாது ...
...என்றென்றும் ...
கூடவே இருப்பது எது என யோசி
மனமே ... அதை மட்டும் நேசி
* * *
5 comments:
அருமை
நன்றி சகோ
அற்புதமான வரிகள் நண்பரே வாழ்த்துகள்.
த.ம.1
நன்றிகள் கோடி நண்பரே
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)