வலையும் சேர்ந்து கடுப்பேத்துது. வியாழக்கிழமை ப்ளாக்கர் திறக்கல,
ஜீமெயில் திறக்கல, தமிழ்மணமோ எப்ப திறந்தாலும் கடந்த வாரப்
பக்கத்தையே இன்னும் காட்டுது, நம்ம கடைக்கு வெள்ளி சனி லீவு வேறயா,
கை அரிச்சு கவுஜை வேற எழுதியாச்சு என்ன செய்றது, சரி பரவாயில்ல,
ஆறிப் போனதை மீண்டும் சூடாக்கிக் கொட்டியிருக்கிறேன்.
தைரியமிருந்தா படிச்சுக்கோங்க.
(கடுப்பு ட்ரான்ஸ்ஃபர் ஆகி அங்கே வந்து விட்டால் கம்பெனி பொறுப்பல்ல)
* * * * *
ஆண் அவளை நோக்கினான்
அவள் நிலம் நோக்கினாள்
நகை புன்னகை
இருந்தால் ரிப்பீட்டு
இல்லையென்றால் ரிஜக்டு
அவன் அவளை மணந்தான்
அல்லது
அவள் அவனை மணந்தாள்
நகை புன்னகை இல்லையெனில்
புகை அல்லது பகை
ஆண் அவளை நோக்கினான்
அவளோ நிலம் நோக்கினாள்
சதுர அடி கணக்கில்
சாதா நிலத்தையும்
சஞ்சீவி மலை போல்
பெயர்த்துத் தரவில்லையெனில்
பொல பொல வெனப் பெய்யும் மழை
அவர்களைப் போல் இல்லை
இருந்தால்
உயரமில்லை
இருந்தால்
நுனிநாக்கில் சக்கரையில்லை
இருந்தால்
ஏதோ இல்லை
சே ஒரே தொல்லை
செய்வினை செயப்பாட்டு வினை
இரண்டும் எப்படி சமமாகும்
என்ன செய்ய..
எழுத்தறிவித்தது மட்டுமல்ல
இலக்கணம் வகுத்ததும் இறைவன் தான்
பொறுமை கடலினும் பெரிது.
4 comments:
Comment Moderation Testing
ரொம்பக் கடுப்பாருக்கீங்கன்னு தெரியுது; எனக்கும் தொத்திகறதுக்குள்ள நான் எஸ்கேப்!
:-)
சென்ற வியாழக் கடுப்பு இந்த வியாழன் வரைக்குமா இருக்கும் ?
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........
Post a Comment
நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை
எனினும்
" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)