Wednesday, June 08, 2011

என்ன உலகமடா இது !!

ஒரே வெறுப்பாக இருந்தது
பதிவெழுதவில்லை

பதிவெழுதாததால்
நிம்மதியாயிருந்தேன் !

என்ன உலகமடா இது

குளித்ததால் தலை ஈரமாய் இருந்தது
ஈரத்தின் காரணத்தால்
தலைக்கு எண்ணெய் இடாமல்
ஆஃபீஸ் சென்றேன்.
ஏன் இன்னைக்குக் குளிக்கலயா என்கிறார்கள்.
குளிக்காத அன்று எண்ணெய்
இட்டுச் செல்கிறேன். கேட்கிறார்கள்
என்ன இன்று ஃபிரஷ்ஷா இருக்கீங்க !


பதிவெழுதல்,பதிவுலக பவனி
என்றிருக்கும் போது
எப்பப்பாரு பிஸி என்பவர்கள்
பதிவுப்பக்கம் போகாமல்
அவர்களின் பேச்சுக்களில்
கலந்து கொண்டால்
என்ன வேலை வெட்டி
ஏதுமில்லையா என்கிறார்கள் !


வேலை பென்டிங் வைத்தாலும் திட்டு
வேலையத்தனையும் முடித்து வைத்தாலும் குட்டு
அடுத்தவேலை என்ன கொடுக்கலாம் என்று
ஆராய்ந்து திரியும் மேலாளன், அவன்
ராஜினாமா செய்தாலும் கொண்டாட முடியவில்லை
அடுத்து வருபவன் அதை விட மோசம் !


இந்தப் புரம் வந்தால் இவளது தொல்லை
நானே முடிவெடுத்தால்
அதிகாரம், அடிமை வாழ்க்கை என‌
போர்ப்பறையறிவிப்பு
சரி உன்னிஷ்டம் என்று விட்டு விட்டால்
உங்களுக்கு எதிலும்
முடிவெடுக்கத் திராணியில்லையென்ற‌
கேலி,கொக்கரிப்பு !


சே ஒரே வெறுப்பாய் இருக்கிறது
பதிவுலகுக்கு மீண்டும்
லீவு கொடுத்து விட வேண்டியதுதான் :)))



டிஸ்கி : எழுதாமல் இருப்பதற்காக என்னென்னவெல்லாம் எழுத வேண்டியிருக்கிறது :)

15 comments:

மதுரை சரவணன் said...

என்ன சொல்ல வர்றீங்க.... பதிவு எழுதுங்க அது நம்மையும் சமூகத்தையும் வளர்க்கும்... வாழ்த்துக்கள்

அரபுத்தமிழன் said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு.சரவணன்.

//என்ன சொல்ல வர்றீங்க...//

எதைச் சொல்வது எப்படிச் சொல்வது

ப்ளோக் பக்கம் வரவே போரடிக்கிறதென்பதா இல்லை
நேரம் கிடைக்க வில்லையென்பதா ?

நம்மைப் புரிந்து கொள்ளாதவர் மத்தியில்தாம்
நாம் வாழ்கிறோம் என்பதா

விதியென்பதா சதியென்பதா

மொத்தத்தில்

நம் சதுரம் வாழ்வது ஒரு வட்டத்தில்தான் :)

ஸாதிகா said...

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.

pichaikaaran said...

வாவ் வெல்கம் பேக்
உங்களை போன்ற நல்லிதயம் படைத்தவர்கள் எழுதியே ஆக வேண்டும் என்பது என் கருத்து

suvanappiriyan said...

என்ன ஆச்சு அரபு தமிழன்! ரொம்பவும் விரக்தியாக பதிவு இருக்கிறது!

ஹுஸைனம்மா said...

//பதிவுலகுக்கு மீண்டும்
லீவு கொடுத்து விட வேண்டியதுதான் //

நல்லவேளை!! நல்ல முடிவு, வாழ்த்துகிறேன்!! :-)))))

ஹுஸைனம்மா said...

//பதிவெழுதாததால்
நிம்மதியாயிருக்கிறேன்//

இப்படிச் சொல்லிட்டு, புலம்பித் தள்ளிருக்கீங்க?? உங்க வீட்டம்மா சொல்றதுல தப்பேயில்லை!! ;-))))))))

அரபுத்தமிழன் said...

தொடர்பதிவா..ஆ..வ்.. சகோ சாதிகா,
எம்பதிவே எழுத மனசில்ல, இதுல ஊர்ப் பதிவு வேறயா :(

பார்க்கலாம், இறைவன் நாட்டம் எப்படியோ

அரபுத்தமிழன் said...

பாராட்டுக்கு நன்றி தோழா நன்றி.
இறைவா, நல்லிதயம் கொண்டவனாக என்னை
ஆக்கியருள் புரிவாய் ரஹ்மானே, ஆமீன்.

அரபுத்தமிழன் said...

சகோ சுவனப்ரியன்,
முன்பு போல் பதிவெழுதும் சூழல் அலுவலகத்தில் இல்லை இப்போது.
வீட்டிலோ எப்போதும் இருந்தது கிடையாது :)

அரபுத்தமிழன் said...

வாங்க புரட்சித்தலைவி,
பெண்ணீயப் பதிவராயிற்றே, அந்தப் பக்கம்தான் சேருவீங்க :)

//இப்படிச் சொல்லிட்டு, புலம்பித் தள்ளிருக்கீங்க//

புலம்பியது 'வெறுப்பை'க் காட்டவல்ல, மாறாக
என் பதிவுலக 'இருப்பை'க் காட்டுவதற்கு :)

சரி போனாப் போவுதுன்னு முதல் பாராவைக் கொஞ்சம் மாற்றி விட்டேன்.

Admin said...

ஒண்ணுமே புரியலே இந்த உலகத்திலே....

புல்லாங்குழல் said...

சோர்வு வேண்டாம்.தொடர்ந்து எழுதுங்கள் தோழா!

அரபுத்தமிழன் said...

சகோ சந்ரு,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
நீண்ட நாளைக்குப் பின் வருகை தந்து பதில் தந்தமைக்கு
SORRY சமர்ப்பிக்கிறேன் :)

அரபுத்தமிழன் said...

நன்றி நூருல் அமீன் நானா,

அலுவலக சூழல் சரியில்லாததால் எழுத முடியவில்லை.
அப்படியே எழுத நினைத்தாலும் ரமலானுக்கு மீண்டும்
லீவு விட வேண்டியிருப்பதால் அப்படியே இருந்து விட்டு
ரமலானுக்குப் பின் வந்து ரவுண்டு கட்டி அடிக்கலாம் :)
என்றிருக்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)