Wednesday, May 11, 2011

கனவொன்று கண்டாய்

கனவுகள் பற்றி நமக்கு இன்னும் தெளிவில்லை அதைக் கட்டுப் படுத்தும் ஆற்றலும்
நமக்கில்லை. கனவில் வரும் இடங்கள் நாம் முன்பே பார்த்ததாகவும் இருக்கலாம்
அல்லது இதுவரை பார்க்காத இடங்களையும் சஞ்சரிக்கலாம்.நாம் அசை போட்ட
விஷய‌ங்களும் வரலாம் அல்லது புதிதான விஷயங்களாகவும் இருக்கலாம்.
ஆனால் அசட்டையாக இருந்து விட வேண்டாம் கனவு விஷயத்தில்.

சில சமயங்களில் அது இறைவனின் புறத்திலிருந்து வரும் அறிவிப்பாக இருக்கும்.
நபிமார்களுக்கு அனுப்பப்படும் இறைச் செய்திகளில் கனவும் ஒன்று. அதாவது கனவின்
மூலமாக நபிமார்களுக்கும் இறையடியார்களுக்கும் செய்திகள் சொல்லப்பட்டன/படுகின்றன.
'கனவு' என்றாலே 'நினைவு'க்கு வருவது யூசுப் அலை (ஜோசப்) சம்பவம்.
(எல்லோருக்கும் தெரியும் என்பதால் இங்கு எழுதவில்லை)


இவ்வுலகம் பொதுவானது. ஆதலால் கனவின் வழி செய்தி இறையடியார்களுக்கு
மட்டுமல்ல எல்லோருக்கும் அனுப்பப் படுகிறது. மிகச் சிலரே கனவின் விளக்கம்
அறிந்து கொள்கிறார்கள். கனவிற்கான விளக்கம் ஒரு சில புத்தகங்களில்தான் காணக் கிடைக்கின்றன. அறிந்தவர்கள் மிகக் குறைந்து விட்டனர். கண்ட கனவின் விளக்கம்
தெரியுதோ அல்லது தெரியவில்லையோ முதலில் கனவை யாரிடமும் சொல்ல வேண்டாம்.

நல்ல கனவுகளை, நம்மீது பொறாமை கொள்ளாதவர்களுடனும் நம் முன்னேற்றத்தை நாடுபவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் கெட்ட கனவுகளை வெளியில்
சொல்ல வேண்டாம். சொல்லப் படாத வரைக்கும் அவற்றின் தாக்கங்கள் ஏற்படாது
.

இவ்வுலக அழிவு நாள் நெருங்க நெருங்க 'அறிவு' குறைந்து கொண்டே போய் ஒருநாள்
சுத்தமாக எடுபட்டு போகும் என்று அருமை நபி (ஸல்) அறிவித்துள்ளார்கள்.

விஞ்ஞான அறிவு பெருகிக்கொண்டே போகிறதே, 'அறிவு' எப்படிக் குறையும் எனச்
சந்தேகம் வருகிறதா ? வரட்டும் வரட்டும்.

வாழ்க்கை ஒரு வட்டம். எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்பமும் உண்டு முடிவும் உண்டு.

அலங்காரக் கட்டில் வாங்குகிறோம் ; தூக்கத்தை வாங்க முடியவில்லை.

விதம் விதமா மருந்துகள் வாங்குகிறோம் ; நற்சுகத்தை வாங்க முடியவில்லை;

மருத்துவமனைகள் அதிகரிக்க அதிகரிக்க நோயுமல்லவா அதிகரித்து விட்டது.

புத்தகங்களும் கல்விக்கூடங்களும் பெருகி விட்டன ; ஆனால் அறிவு குறைந்து விட்டது.

முன்பு சதாவதானி,தசாவதானி என்று பலர் இருந்திருக்கிறார்கள். பல விஷயங்களை
ஒரே நேரத்தில் அறிவார்கள். நிறைய விஷயங்களைக் குறிப்பால் அறிந்து கொள்பவர்கள், அனுபவத்தால் அறிந்து கொள்பவர்கள்,கனவின் மூலம் அறிந்து கொள்பவர்கள் என்று பலர் இருந்தனர். நமக்கோ ஒரு விஷய‌த்தைக் கூட முழுதாக அறிய முடியவில்லை. விஷயம் அறிந்தவர்களைக் கேலி வேறு செய்கிறோம். இப்படியெல்லாம் அறிவு இருந்ததா/இருக்கிறதா
என்று கூட நம் அறிவுக்கு எட்டுவதில்லை.

எது உண்மையான கல்வி எது உண்மையான அறிவு என்பதைச் சொல்வதற்கே
நேரம் போய்விடும். அதனால இப்போ கனவைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

கனவை விளங்கிக் கொள்வதும் அறிவின் பாற்பட்டது. கனவின் விளக்கம் பெற்ற ஒரு
அறிஞரிடம், ஒரே கனவைக் கண்ட‌ இருவர் வந்தனர் ஆனால் வெவ்வேறு சமயங்களில்.

இருவருக்குமே வந்த கனவு 'தாம் படுத்த கட்டிலனடியில் நெருப்புக் கங்குகளைக்
கண்டதாகத்' தெரிவித்தனர். ஒருவனுக்குச் சொல்லப்பட்டது 'நீ படுத்த இடத்திற்குக்
கீழே புதையல் உண்டு' என்றும் இன்னொருவனுக்கு 'உடனே நீ உனது வீட்டிற்குச்
சென்று வீட்டிலுள்ளோரை வெளியே அழைத்து வந்து விடு, வீடு இடிந்து விழப் போகிறது'.

இரண்டு விளக்கங்களின் போதும் அருகிலிருந்தவர் கேட்டார். இருவரும் கண்டது ஒரே
விதமான கனவாயிற்றே, ஆனால் விளக்கம் வேறாக இருக்கிறதே என்று கேட்ட போது
'முன்னவர் கண்டது குளிர் காலத்தில் பின்னவர் கண்டது கோடைக் காலத்தில்'
என்று பதில் வந்தது.

மேலும் காணக்கூடிய நபரைப் பொறுத்தும் கனவின் விளக்கம் வேறுபடும்.


இ.அ. தொடரும்...

3 comments:

pichaikaaran said...

உண்மையான கருத்துக்கள் . ஆனால் அனைவராலும் இதை புரிந்து கொள்ள முடியாது

அரபுத்தமிழன் said...

பொறுத்தார் பூமி ஆள்வார்
(நிறை கல்வி)
பெற்றார் பெரும் பேறு பெறுவார்

நன்றி தோழா!

போளூர் தயாநிதி said...

//கெட்ட கனவுகளை வெளியில்
சொல்ல வேண்டாம். சொல்லப் படாத வரைக்கும் அவற்றின் தாக்கங்கள் ஏற்படாது.//

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)