Wednesday, August 11, 2010

பொன்னும் கெடச்சுது புதனும் கெடச்சுது

......................................................................
காலம் பொன் போன்றது (கடமை கண் போன்றது)
......................................................................

அதுவும் ரமலானின் காலம் 'தேடிக் கிடைக்காத தங்கம்' போல. கிடைத்து
விட்டால் அதுவே பெறும் பேறு. நபியவர்கள் இப்படி துஆ கேட்பார்களாம்.

"இறைவா ரஜப்,ஷஃபான் மாதங்களில் பரக்கத் (அபிவிருத்தி) செய்வாயாக,
ரமலானை அடையும் பாக்கியத்தைத் தருவாயாக"

அனுபவமா அல்லது ஐதீகமா தெரியாது, சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்,
ரமலானுக்கு முந்திய மாதமான ஷஃபானில் இறந்து போகும் வயதானவர்களின்
அல்லது நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று.

ஆதலால் ரமலானை அடைந்தவர்கள் பெறும் பாக்கிய சாலிகள்.
மட்டுமல்லாது இம் மாதத்தில் கிடைக்கும் நன்மைகளின் எண்ணிக்கை
மற்றும் மன்னிக்கப்படும் பாவங்களின் எண்ணிக்கை கணிணியில்
அடங்காது. இந்த மாதத்தில்தான் ஒரு நாள் இருக்கிறது, அந்த நாள்

எழுபது தாய்களின் பாசத்தை உடைய ஜனாதிபதியின்
கண்டிப்பு நிறைந்த தந்தை மனம் கொண்ட சர்வாதிகாரியின்
சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தி நிர்வகிக்கும் பிரதம மந்திரியின்
அரசர்க்கெல்லாம் அரசனான அந்த அல்லாஹ்வின்

ஆயிரம் மாதங்களுக்கு நிகரான ஒரு

'பொது மன்னிப்பு தினம்'.

இதுவும் கிடைத்து விட்டால் பொன் கிடைத்து, புதன் கிடைத்து,
புதையலும் கிடைத்த மாதிரி; முயற்சிப்போமா .

ரமலான் கரீம் !!

----------------------------------------------------------------------


சென்ற மாத ஜும்ஆ/குத்பா பேருரையில் கேட்ட/மனதில் தங்கிய
சில நல்ல கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன்.

வெற்றிக்கான மூன்று நல்ல விஷயங்கள் (முனஜ்ஜியாத்)
......................................................................

1.
கோபமான சமயத்திலும், மகிழ்ச்சியான தருணத்திலும்....நீதமாக நடத்தல்

2.
வறிய நிலையில் கஞ்சத்தனமோ அல்லது செல்வ நிலையில் வீண்
விரயமோ செய்யாது எல்லா நிலையிலும் ஒரே மாதிரியாகச் செலவழித்தல்

3.
ரகசியத்திலும் பரகசியத்திலும் (தனிமையிலோ / மற்றோரின் முன்னோ)
இறைவனுக்குக் கட்டுப்படும் தன்மையில் வித்தியாசமில்லாமல் இருப்பது



அழிவைத்தரும் மோசமான ஏழு விஷங்கள்.
.....................................................................

1. இறைவனுக்கு இணை வைப்பது

2. பில்லி சூனியம் செய்வினையில் ஈடுபடுவது

3. கொலை செய்வது

4. வட்டி வாங்கி சாப்பிடுவது

5. அனாதைகளின் பொருளைச் சாப்பிடுவது

6. போரில் புறமுதுகிட்டு ஓடுவது

7. பத்தினிப் பெண்ணை அவதூறு செய்வது


----------------------------------------------------------------------


ஹூம், ஏதோ ஒரு உந்துதலில் பதிவெழுத வந்து, வந்த வேகத்தில்
பன்னிரண்டு பதிவு போட்டுப் பின் குறைந்து தேய்ந்து ஒரே ஒரு
கட்டெறும்பாகியிருக்கிறது. பார்க்கலாம் இனி அடுத்தமாதம்
இந்தப் பிறை மீண்டும் வளருமா என்று.


இன்ஷா அல்லாஹ், ஒரு மாதத்திற்கு இந்தப் பக்கம் வர மாட்டேன்.
அதனால‌ போறதுக்கு முன்னாடி ஒரு வார்த்த சொல்லிட்டு போறேன்,
.
.
.
.
.
.
.
.
.
v


'போயிட்டு வாறேன்' (இன்ஷா அல்லாஹ்) :-)



ரமலான் & ஈத் முபாரக்,
வஸ்ஸலாம்.

2 comments:

ஹுஸைனம்மா said...

ரமலான் முபாரக்

புல்லாங்குழல் said...

பயனுள்ள இடுகை. ரமலான் முபாரக்!

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)