Monday, June 14, 2010

பயணிகள் கவனத்திற்கு

விமானப் பயணிகள் என்று தலைப்பிட்டிருக்கலாம்தான், என்றாலும்
அனேகர் வீடுகளிலோ அல்லது சொந்தத்திலோ யாராவது விமானத்தில்
பயணிப்பவர்கள் இருப்பதால் அனைவருக்கும் விவரம் புரியட்டுமே.

* * * * * * *

சென்னையிலிருந்து அமீரகத்திற்கு எமிரேட்ஸில் வரும்போது அமீரகம்
செல்பவர்களுக்கு லக்கேஜ் 30+10 எனவும் யு.எஸ் செல்பவர்களுக்கு 44+7
எனவும் அனுமதிக்கப் பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதுவும் யு.எஸ்
லக்கேஜ் ஒரு Bag 22 அல்லது 23க்கு மிகாமல் இருக்க வேண்டுமென்பதில்
கண்டிப்பாக இருந்தார்கள்.

இது தெரியாமல் அதிகமாகக் கொண்டு வந்தவர்கள், சில பிரியமான
பொருட்களை இழக்க வேண்டியிருந்தது, 22+22 என்று சமமாகக் கட்டிக்
கொண்டு வராமல் ஒன்று பெரிய Bag லும் இன்னொன்று சிறிய Bag லும்
கொண்டு வந்தவர்கள் இரண்டையும் சமமாக்க மிக சிரமப் பட்டார்கள்.

* * * * * * *

வளைகுடா நாடுகளில் கோடை விடுமுறை ஜூலையில் ஆரம்பிப்பதால்,
விமானக் கட்டணம் ஜூனிலேயே டேக் ஆப் ஆயிடும் என்பது தெரிந்த
விசயம்தான் எனினும் தற்போது இன்னொரு அதிர்ச்சியும் அறிமுகப் படுத்த
இருக்கிறார்கள் (முன்பே வந்து விட்டதா என்று தெரியவில்லை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்). லக்கேஜ் வெயிட் 40+10 என்று இருந்ததை சீசன்
சமயத்தில் 30+7 ஆகக் குறைக்க இருக்கிறார்கள். எத்தனை பேருக்குத் தெரியும்
என்று தெரியவில்லை, பழைய நினைப்பிலே வருபவர்கள்,பாவம் பத்து
கிலோவுக்குக் குறையாமல் பணம் கட்ட வேண்டி வரும்.

* * * * * * *

பயணக்காரன் அரைப் பைத்தியக்காரன் என்பார்கள். விமானத்தில்
அமர்ந்தவுடன் அவனை ஆசுவாசப்படுத்துவது விமானப் பணிப்பெண்களின்
அன்பான உபசரிப்புகள்தாம். இன்று Budget Airlines என்கிற பேரிலே
Hospitality ஐச் சிதைத்து விட்டார்கள். Cost Cutting என்ற பேரிலே இந்த
மாதிரி ஐடியா கொடுப்பது ஆசியாக் கண்டத்தைச் சார்ந்தவர்கள்தாம். :-)

Customer Care,Value for Customer,Guarantee,Warranty,Utility,Hospitality
போன்றவற்றைச் செயல்படுத்தியவர்கள் மேற்குலகைச் சேர்ந்தவர்கள்.


* * * * * * *


Hospitality என்பது இப்போதெல்லாம் அரிதாகி விட்டது. Hospital களே
மாறிவிட்ட போது வேறு எங்கு எதிர்பார்க்க முடியும். இருந்தாலும் முன்பு
எல்லா விமானத்திலும் ஒரு மரபாகப் பேணப்பட்ட விசயம் இது.
Air Lanka ல் முன்பு கிடைத்து வந்தது. தற்போது Qatar Airways,Emirates
பரவாயில்லை என்று தெரிகிறது.

* * * * * * *

சென்ற முறை, என் இருக்கைக்கு முன்னால் இருந்தவர்,தனக்கு வசதியாக‌
இருக்கையை நன்றாகச் சாய்ந்து கொள்ளுமளவு பின்னுக்குத் தள்ளியதால்
என் முகத்திற்கு நேராகத் துருத்திக் கொண்டிருந்தது. நான் அவரிடம்
'சிரமமாக இருக்கிறது, கொஞ்சம் முன் இழுத்துக் கொள்ளுங்கள்' என்று
சொன்னதற்கு, முடியாது என்பதாக தலையாட்டி விட்டு 'சிரமமாயிருந்தால்
நீரும் இது போல் உம்முடைய இருக்கையைப் பின்னுக்குத் தள்ளிக்
கொள்ளவும்' என்றவுடன், நானோ பின்னுள்ளவரை சங்கடப்படுத்த
விரும்பாமல் சும்மாவே இருந்து விட்டேன்.

அடுத்து வந்தது பிரச்னை,நான் இருந்தது நடு இருக்கை, விண்டோ
பக்கத்தில் உள்ளவருக்கு வந்ததே ஆத்திரம் சே மூத்திரம், எழுந்து
அனுமதி கேட்டார். எனக்கு இடது பக்கத்தில் இருந்தவர் தூக்கத்தில்
இருந்ததால் எங்களிருவரையும் தாண்டிப் போகுமாறு அனுமதியளித்தாலும்
அவரைப் போக விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது முன்னிருக்கை. இப்போ
மூத்திரக்காரர் முன்னிருக்கைக்காரரை எழுப்ப, அவரோ என்னைப் பின்னுக்குப்
போகுமாறு சைகை செய்ய,எனக்குள் இருந்த புரூஸ்லீ தலை தூக்கி பிறகு
ஜாக்கி சானாக மாறி ஒரு வழியாக இருவரும் அட்ஜஸ்ட் செய்து
மேக தூதரை தூறலாய் வருஷிக்க அனுப்பி வைத்தோம்.


ஏன் ஏன் இப்படி இருக்கிறோம் ? விட்டுக்கொடுத்தல் மட்டும்
இல்லையென்றால் பயணம் மட்டுமல்ல ; வாழ்வே நரமாகி விடும்.

* * * * * * *

பதிவர்களும் வாசகர்களும் தங்கள் அனுபவங்களையும் ஆலோசனைகளையும்
பகிர்ந்து கொண்டால் பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

4 comments:

Ahamed irshad said...

அப்ப வெக்கேஷனுக்கு ரெடியியாச்சா... தேவையான பதிவுதான்...

ஹுஸைனம்மா said...

எப்ப ஊருக்கு? பெட்டி கட்டியாச்சா?

அரபுத்தமிழன் said...

அஹம‌து இர்ஷாத்,ஹுசைனம்மா,

பயணம் எல்லா வருடமும் ரமலானில்தான். அது போல் மறுமைப்
பயணமும் அமைய ஆசைப் படுகிறேன் :-)

பதிவன் கூடு விட்டு கூடு பாய்பவன் அல்லவா !
இது பயண சீசன், அதனால பயணக் கட்டுரை.

பயணக் குறிப்புக்கள், அவ்வப்போது எழுதப்படுவது நல்லது,
நீங்களும் எழுதலாமே.

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)