Monday, October 17, 2011

அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்ம'ண/ன‌'ம்

சாந்தியும் சமாதானமுமற்ற
சாக்கடைச்  சிறு சந்தில்
சதாகாலமும் உழன்ற பெரிதுவப்பு கூடி

சட்டென்று சிலிர்த்த சிலிர்ப்பில்
பட்டென்று தெரித்த
வளர்ப்பும் வன்மமும்
வார்த்தைகளினூடே
வடிந்து காய்ந்தும் விட்டது.

விட்டேனா பார் என்று
வீம்பு காட்டி அருகில் செல்ல‌
தெம்பு இல்லாமல் இல்லை
எனினும்
வம்புதும்பில்
நாட்டமுமில்லை
நம்பிக்கையுமில்லை

மனிதன்
தேறும்போது
வானவர் போல் ஆகிறான்

நாறும் போது
மிருகத்தை விடக் கீழாகிறான்.

மிருகங்களில் மூன்று வகை

பசிக்காகவும் தேவைக்காகவும்
அடுத்தவர்களின் பொருளைத் தின்னும்
ஆடு மாடு போன்றவை

பசிக்காகவும் தேவைக்காகவும்
அடுத்தவர்களையே தின்னும்
சிங்கம் புலி போன்றவை

எந்த விதப் பிரயோஜனமுமின்றி
சும்மாவே அரிப்பெடுத்து
அடுத்தவரைத் தீண்டும்
பாம்பு தேள் போன்றவை

இதில் இஸ்லாத்தை
அவ்வப்போது தீண்டும்
முஸ்லிம்களை சீண்டும்

வால் ராஜாக்களும்
பெயரில்லாக்களும்
எந்த ரகம் தெரியுமோ

ப..ப..பப்..பரப்..பார்ப்..
பாம்பு ரகமே

பொறாமையில் உழல்பவன்
முஸ்லிமைச் சீண்டுவான்

அழிவைத் தேடுபவன்
இஸ்லாத்தைச் சாடுவான்

ரெண்டுமே அழிவுதான்
எனவே
வேண்டாமே தீண்டாமை

சாந்தியும் சமாதானமும்
சங்கையான சகோதரிகள்

அவர்களோடு ஒரு நல்ல‌
சகோதரனாக வாழ முயல்வோம்.

வஸ்ஸலாம்


டிஸ்கி : அமெரிக்கா,இந்தியா போன்ற 'பெரிய' இடங்களில் இருந்து கொண்டு
'கொட்டுவதால்' பரமசிவன் கழுத்துப் பாம்பு என்று எழுதியிருந்தேன். ஆனால்
அது ஒரு சமூகத்தின் குறியீடு என்பதைக் கலையகம் (http://kalaiy.blogspot.com)
சென்று அறிந்து கொண்டதால் மாற்றி விட்டேன்.

Monday, October 03, 2011

அல்ஹம்துலில்லாஹ்

அடக்கியாளும் ஆற்றல் படைத்த
அல்லாஹ்வின் திருநாமத்தால்
ஆரம்பம் செய்கிறேன் எனச்

சொல்ல வைக்கும் வச‌தி இருந்தும் இறைவா !

அளவற்ற அருளாளனும்
நிகரற்ற அன்பாளனுமாகிய‌
அல்லாஹ்வின் திருநாமத்தால்
ஆரம்பம் செய்கிறேன் எனச்

சொல்லச் சொல்லும் சூட்சுமம் என்னவோ

உனது கோபத்தை உனது கருணை
முதல் வரியிலேயே வென்று விட்டதே !


சுப்ஹானல்லாஹ்