Wednesday, June 08, 2011

என்ன உலகமடா இது !!

ஒரே வெறுப்பாக இருந்தது
பதிவெழுதவில்லை

பதிவெழுதாததால்
நிம்மதியாயிருந்தேன் !

என்ன உலகமடா இது

குளித்ததால் தலை ஈரமாய் இருந்தது
ஈரத்தின் காரணத்தால்
தலைக்கு எண்ணெய் இடாமல்
ஆஃபீஸ் சென்றேன்.
ஏன் இன்னைக்குக் குளிக்கலயா என்கிறார்கள்.
குளிக்காத அன்று எண்ணெய்
இட்டுச் செல்கிறேன். கேட்கிறார்கள்
என்ன இன்று ஃபிரஷ்ஷா இருக்கீங்க !


பதிவெழுதல்,பதிவுலக பவனி
என்றிருக்கும் போது
எப்பப்பாரு பிஸி என்பவர்கள்
பதிவுப்பக்கம் போகாமல்
அவர்களின் பேச்சுக்களில்
கலந்து கொண்டால்
என்ன வேலை வெட்டி
ஏதுமில்லையா என்கிறார்கள் !


வேலை பென்டிங் வைத்தாலும் திட்டு
வேலையத்தனையும் முடித்து வைத்தாலும் குட்டு
அடுத்தவேலை என்ன கொடுக்கலாம் என்று
ஆராய்ந்து திரியும் மேலாளன், அவன்
ராஜினாமா செய்தாலும் கொண்டாட முடியவில்லை
அடுத்து வருபவன் அதை விட மோசம் !


இந்தப் புரம் வந்தால் இவளது தொல்லை
நானே முடிவெடுத்தால்
அதிகாரம், அடிமை வாழ்க்கை என‌
போர்ப்பறையறிவிப்பு
சரி உன்னிஷ்டம் என்று விட்டு விட்டால்
உங்களுக்கு எதிலும்
முடிவெடுக்கத் திராணியில்லையென்ற‌
கேலி,கொக்கரிப்பு !


சே ஒரே வெறுப்பாய் இருக்கிறது
பதிவுலகுக்கு மீண்டும்
லீவு கொடுத்து விட வேண்டியதுதான் :)))



டிஸ்கி : எழுதாமல் இருப்பதற்காக என்னென்னவெல்லாம் எழுத வேண்டியிருக்கிறது :)