Tuesday, November 23, 2010

விஞ்ஞானம்..பரிமாணம்..பரிணாமம்..பரிதாபம்

முஸ்கி : (டிஸ்கியை முன்னாடியே போட்டா அது முஸ்கி தானே)

பரிணாமம் பற்றிய இஸ்லாமியக் கருத்துக்களை சீரியஸாத் தெரியணும்னா
கார்பன் கூட்டாளியையும்எதிர்க்குரலையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இது கொஞ்சம் 'சிரியஸ்' பதிவு, மேலும் பதிவின் கடைசியில் காரத்திற்கு
எதிர்ப்பதமான 'இனிப்பு(16+)' கொஞ்சம் 'தூக்கலா' இருக்கும் :)))
அதனால் தயவு செய்து பெண்கள் படிக்க வேண்டாம் கடைசி வரியை.

கடைசியில் வரும் குரங்கு சம்பவத்தை நகைச்சுவையாக எழுத நினைத்து குரங்கின்
நிமித்தமான பரிணாமத்தைத் தொட்டுப் பின் விஞ்ஞானத்தைத் துவைக்குமாறு ஆகி
விட்டது. அதிபர் அப்துல் கலாம் மன்னிக்கவும்.

-----------------------------------------------------------------------

என் நண்பனொருவன் சொல்லுவான், மில்லியன் பில்லியன் கணக்கில் செலவழித்து
வான வெளிகளில் பயணித்து கல்லையும் மண்ணையும் கொண்டு வந்து கடைசியில்
பயணக் கட்டுரை எழுதுவதால் என்ன பிரயோஜனம். நாளை பெட்ரோல் போன்றவை
தீர்ந்து பழைய கற்காலம் போன்று ஆகிவிடும். இந்தப் பணத்தைப் பூமியில் போடலாமே,
அதாவது பூமியின் வளங்களை அறிந்து மனித சமுதாய முன்னேற்றத்திற்காகப்
பயன்படுத்தலாமே அல்லது மனிதனை ஆராய்ந்து மண்ணை வளப்படுத்தலாமே என்று.
(நீங்க என்ன சொல்றீங்க)

பணமும் மனித முயற்சியும் இப்படி விழலுக்கு இறைத்த நீராகப் போவதற்குக் காரணம்,
'மத' நம்பிக்கைக்குள் 'னி'ராகரிப்பைப் புகுத்தி 'மனித'னின் அறிவை மட்டும் நம்பும்
விந்தை ஞானமான விஞ்ஞானமே. எதையும் உருப்படியாகச் சொல்லாமலும் ஒரு
முடிவுக்கு வராமலும் சுற்றி வளைத்துக் குழப்புவதும், இன்று சொன்னதை நாளை
மறுப்பதும்தான் விஞ்ஞானம் என்ற பெயரில் உலா வரும் அஞ்ஞானம். உண்மையில்
விஞ்ஞானம் என்பது விந்தைகளுக்குப் பின்னாலுள்ள மர்மங்களின் முடிச்சை
அவிழ்த்து மெய்ஞ்ஞானம் போதிக்க வேண்டுமே ஒழிய அது ஒருபோதும்
அஞ்ஞானத்திற்கும் அழிவிற்கும் துணை போகக் கூடாது.

குர்ஆன் மற்றும் இஸ்லாமியக் கருத்துக்களில் பெரும்பாலான விஷயங்கள்
தெளிவாகவும் சில மறைமுகவாகவும் சில உங்களுக்குத் தெரியவே சான்ஸ்
இல்லை என்றும் கூறப்பட்டுள்ளன‌.

தெரியவே சான்ஸ் இல்லாத அல்லது மிகக் குறைவாகவே அறிய முடிகிற‌
விஷயங்களில் 'உயிரும்' ஒன்று. ஆனால் உயிரைப் பற்றி மிகப் பெரிய ஆராய்ச்சி
நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒருநாள் உயிர் பற்றித் தெரிய வரும்,
அந்நாளில் உயிர் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் 'லெனின்' போன்றோரின்
உடல் பாதுகாக்கப் பட்டு வருகிறது. இது நடக்கவே நடக்காது, இறந்த ஒருவருக்கு
தஜ்ஜாலால் (anti christ) ஒரே ஒரு முறை உயிர் கொடுக்கப் படும் அவ்வளவே தவிர‌.

வானத்தில் இரவு நேரங்களில் எரிந்து விழும் நட்சத்திரங்களைப் பார்த்திருப்பீர்கள்.
அது என்னவென்று குர்ஆன் சொல்லுகிறது, '(குறி சொல்லுபவர்களுக்காகச் செய்தி
சேகரிக்க மேலேறிச் செல்லும் பத்திரிக்கையாள :) ஜின்) ஷைத்தான்களை விரட்ட
வானவர்கள் எறியும் எரிகற்கள்'-'ருஜூமன் லிஷ்ஷயாத்தீன்' என. விஞ்ஞானிகள்
என்ன சொல்கிறார்கள், அறிவு பூர்வமா ஏதாவது சொல்ல வேண்டுமே என்று
வளி மண்டலம்,உரசல் புரசல் என்று எதையாவது சொல்வார்கள்.

'சுனாமி' ஏற்படுவதற்குக் காரணம் 'பூமிக்கடியில் ரெண்டு பிளேட் உரசிக் கொண்டதாம்',
அது ஏம்பா உரசுது அல்லது யார்யா ஒரச வைக்கிறது, அது இப்ப ஏன்யா ஒரசலைன்னு
கேட்டு பாருங்க, அதுக்கும் அவர்களால் மழுப்பத்தான் முடியும்.

கனவைப் பற்றிய‌ ஆராய்ச்சி எப்படியிருக்குதுனா பசி எப்படி ஏற்படுதுங்குற மாதிரித்தான்
போகுது. நரம்புகள் தூண்டப்பட்டு, நினைவுகள் தோண்டப்பட்டு அப்படீன்னு சொல்லி வைப்பார்கள்.ஒண்ணு பசி தீர வழி சொல், இல்லன்னா பசி போக்கும் உணவிற்கான
ஏற்பாட்டைச் செய்து கொடு விஞ்ஞானமே.(கனவுன்னா என்ன, கனவுக்கான பலன்
என்ன என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த ப‌திவில் பார்ப்போம்).

இப்படி எல்லா விஷயத்திலும் முடிவுக்கு வராமல் ஆராய்ந்து கொண்டே...யிருக்கும்
விஞ்ஞானிப் பயலுவ, 'குரங்கிலிருந்துதான் மனித இனம் தோன்றியது ' என்ற
தான் தோன்றித் தனமானத் தத்துவத்தை மட்டும் எப்படி பிடித்துக் கொண்டார்களோ.

உருவெளிக் களங்களில் பயணித்துப் பாருங்கள். இது சம்பந்தமாக இன்னும் நிறைய
தீனி கிடைக்கும். இப்ப நம்ம கதைக்கு வருவோம்.

சென்ற வாரம் பெருநாள் விடுமுறையில் துபாய் Zoo சென்றிருந்த நண்பர் சொன்னார்.
அங்கே ஒரு கொரில்லா உண்டு, அது ஒவ்வொரு முறையும் தண்ணீர்த் தொட்டியை
நோக்கி ஓடிச் சென்று தண்ணீரை வாயில் சேகரித்துக் கொண்டு கூண்டின் கம்பிக்கருகில்
வந்து நின்று கொள்கிறது. யாராவது அதனை போட்டோ எடுக்க அருகில் சென்றால்
போதும், முகத்தில் நீரைப் பீய்ச்சியடித்து விட்டு ஓடிச் சென்று நீரைச் சேகரித்து....
இப்படியே நிகழும் சேட்டையைக் குழந்தைகளோடு சென்றால் ரசிக்கலாம் என்றார்.
(என்ன குசும்பரே, இங்கே இன்னும் போக வில்லையா, அதன் சேட்டையை ரசித்து
உங்கள் நடையில் பதிவிக்கவும்.)

கேட்டுச் சிரித்துவிட்டு இன்னொரு நண்பர் சொன்னார். 'பார்த்தீங்களா பாய்,
அல்லாஹுத்தஆலா கணவன் மனைவி ஜோடியை அந்தந்த இனத்திலேயே ஆக்கி
வைத்துக் கிருபை செய்திருக்கிறான். 'அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே
மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்' என்று குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளது (16:72).

சப்போஸ் மனித இனத்துக்குப் பதிலா மனைவி குரங்காய் இருந்திருந்தால் நம்ம கதி என்னவாகியிருக்கும். கோபித்துக் கொண்டு மரமேறிய குரங்கை ஸாரி மனைவியை
ஒவ்வொரு தடவையும் கெஞ்சிக் கூத்தாடியல்லவா கீழே இறக்க வேண்டி வந்திருக்கும் :)

அதைக்கேட்டு எங்க ஊர் நண்பன் சொன்னான்,
'அடப் போங்க பாய், புடவை,நகையென்று செலவழிக்க வேண்டிய அவசியமே
இருந்திருக்காது, ஒரு வாழைப்பழமே போதும், வாழ்க்கையே வசப்படும்.

இதைக்கேட்டு நான் சொன்னேன் .....

'அடேய், வசப்படுமா, வசமா நசுக்கப்படும்.
'ஒருநாள் வாழைப்பழம் கெடைக்காமப் போனாத் தெரியும் ...'
.
.
.
.
.
'ஒன்னோட வாழப்பழத்தோட கதி' :-)))

Wednesday, November 10, 2010

'அல்லாஹ்' எனும் ஆயுத எழுத்து, சில‌ Calligraphic சிந்தனைகள்



இது 'அல்லாஹ்' என்பதன் அரபி வார்த்தை எழுத்து. வலது பக்கத்திலிருந்து வாசிக்க
வேண்டும். முதல் எழுத்து அ(லிஃப்), இதை எடுத்து விட்டுப் படித்தால் 'லில்லாஹி'
(அல்லாஹ்விற்காக) என்று வாசிக்கப் படும். அலிஃபுக்கு அடுத்துள்ள ல(லாமை)
எடுத்தால் 'லஹூ' என்று வாசிப்பும் 'அவனுக்கே' என்ற அர்த்தமும் அமையும்.
பிறகு அடுத்த எழுத்தான ல(லாமை) எடுத்தால் 'ஹூ' (அவன்) என்றாகும்.

இப்படி ஒவ்வொரு எழுத்தும் 'அவனையே' குறிக்கிறது. இந்தச் சிறப்பு GOD க்கும்
கிடையாது கடவுளுக்கும் கிடையாது. மேலும் 'அல்லாஹ்' என்றால் அல் இலாஹ்
(வணக்கத்திற்குரியவன்) என்று அர்த்தம்.

'அல்லாஹ்' என்ற வார்த்தைக்கு பெண்பாலோ அல்லது பன்மையோ(Plural) கிடையாது.
இன்னொரு விந்தை அல்லாஹ் என்பதன் அரபி எழுத்து நம்ம கையிலேயே இருக்கு
(அப்ப நாம் எல்லாம் முஸ்லிம்கள்தானே)




இந்த எழுத்தைப் பலவிதமாக எழுதினால் எப்படியிருக்கும்.
இப்படி எழுதுவதற்குப் பெயர் காலிக்ராஃபி.





இதை இடதிலிருந்து வாசித்தால் ஆங்கிலம் வலதிலிருந்து வாசித்தால் அரபி எழுத்தும்
தெரிவது போல் வரைந்திருக்கிறார்கள்.

காலிக்ராஃபியில் 'அல்லாஹ்' என்ற எழுத்தைப் பலவிதமாகச் சித்தரிப்பது மட்டுமல்ல
சிதைப்பதும் நடந்து வருகிறது. உருவமில்லா இறைவனுக்கே இதன் மூலம் உருவம்
கொடுக்கப் பட்டுள்ளதைப் பாருங்கள்.



இப்படியே போய் ஆயுத எழுத்தாக மாறிப் போன விந்தை.





திரிசூலத்தின் திருமூலம் இதுவாக‌த்தான் இருக்கும் :)

அலிஃபும் ஹாவும் கீழே வாள்/பிடி/வேல் போலவும் மீதி திரிசூலமாகவும்.



எழுத்தைப் படுக்க வைத்துப் பார்த்தால் 'ஓம்' வருகிறது.

மேலும் பிஸ்மில்லாஹ்வைச் சுருக்கினாலும் 'ஓம்' வரும்.





மேலும் சில சிந்தனைகள்

ஆதம் நபியின் (இடது)பாதம் இலங்கையில் உள்ள மலையில் இருக்கிறது.
அதன் நீளத்தின் மீது சுமார் ஐந்தடி மனிதன் படுத்துறங்கலாம். நிமிர்ந்து படுத்து ஒரு கையை நீட்டிக் கொள்ளும் அளவு அகலம். இந்த பாதத்தை புத்தரின் பாதமென்று புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் சொல்கிறார்கள். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கௌதம புத்தருக்கு இந்த அளவு பாதம் இருந்திருக்காது. ஆனாலும் 'புத்தர்' என்றால் நபியையோ அல்லது மகானையோ குறிப்பதாக இருந்தால் அது முந்தைய புத்தரான‌ ஆதம் புத்தரின் பாதமே.

இவர்கள் இடது பாதத்தைத்தான் பூமியில் வைத்து இறங்கியிருக்கிறார்கள்.
நாமும் வாகனத்திலிருந்தோ அல்லது உயரத்திலிருந்தோ இறங்கும் போது இடது காலை வைத்து இறங்குவது சுன்னத்து(நபிவழி) என்று அறிவோம். மேலும் கக்கூஸ் செல்லும் போது இடது காலை முதலில் வைத்து உள்ளே செல்ல வேண்டும் என்பதும் அறிவோம்.

சுவனத்தில் கக்கூஸ் உபாதை கிடையாது, தடுக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டதால் உபாதை எடுத்து இடம் தேடி இறைவனிடம் முறையிட்ட
போது 'சுவனத்தில் அதற்கு இடமில்லை', அதற்கான இடம் உலகம்தான்
என்று ஆதம் அனுப்பப் பட்டபோது 'இந்த உலகத்தைக்
கக்கூஸாகக் கருதி' இடது காலை வைத்தார்களோ தெரியாது.

இந்துக்கள் இந்த பாதத்தை 'சிவனடி பாதம்' என்கிறார்கள். மேலும் சிவனுடைய பிள்ளைகளான முருகனுக்கும் பிள்ளையாருக்கும் ஒரு பழத்தின் மீது சண்டை வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆதம் நபியின் இரு பிள்ளைகளுக்கும் ஒரு பழத்தினால் அல்ல  ஒரு பெண்ணால் சண்டை ஏற்பட்டு ஒருவர் மற்றவரைக் கொலை செய்த சம்பவம் மூலமாக இரண்டு பேரும் (ஆதமும் சிவனும்) ஒன்றா என எண்ணத் தோன்றுகிறது.

மேலும் ஆதமுக்கு அடுத்து வந்த நபிக்குப் பின் வந்த 'நூஹ்' நபி காலத்தில்
மக்கள் வத்து,சுவா,எகூஸ்,யஊக்,நஸ்ர் என்ற பெயர்கள் கொண்ட ஐந்து சிலைகளை வணங்கி வந்ததாக குர்ஆன் கூறுகிறது. இதில் இரண்டாவதான 'சுவா' மருவி 'சிவா'வானதோ என்னவோ. இந்த ஐந்து சிலைகளும் இறந்து போன நல்லோர்களின் ஞாபகார்த்தமாகத் தோன்றியவை.

மேலும் திருவிளையாடலில் வந்த 'பழத்தைத் தந்து நாடகத்தைத் துவக்குகிறீர்' என்ற வசனத்தை நாம் பார்த்து அல்லது கேட்டிருக்கிறோம். நாடகத்தைத் துவக்குகின்றவரான 'நாரதரின்' கலகம் நன்மையில் முடிவதாகச் சொல்லப்படும்.

இந்த நாரதரும் நாம் சொல்லும் 'கிள்ரு' நபியும், கிறித்தவர்கள் சொல்லும்
'பச்சைக் காவலாளியும்' ஒருவரே என இவர் குறிப்பிடுகிறார்.


கிருஷ்ணனின் கதையைப் பார்த்தால் மூஸா நபியின் சம்பவம் போலிருக்கும்.

ஆக இதுவெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் 'ஒரு மூலம் பல்கிப் பெருகி
குட்டி போட்டுக் கதையாகிக் கந்தலாகிப் பின் தைக்கப் பட்டுப் பின் நைந்து நூலாகிக் கடைசியில் இறுதிவரை உறுதியாக இருக்குமாறு இஸ்லாம் நெய்யப்பட்டு நீடூடி வாழ்ந்து வருவது தெரிய வரும்.

இந்த மனித சமுதாயம் குழந்தையா இருக்குறச்சே சின்ன சட்டை, வளர வளர
அதற்கேற்றவாறு அளவில் மாறி, பிறகு இறக்கும் வரை ஒரே அளவு கொண்ட
ஆடையாக‌ இஸ்லாம் தரப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் வராது.
இஸ்லாத்திற்கேற்றவாறு நாம்தான் மாற வேண்டும். நான் ரெடி, நீங்க ரெடியா :)