Wednesday, July 28, 2010

இறைவன் பற்றிய கேள்விகள் அன்றும் ... என்றும்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பொரு நாளில்,

இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்)எனப்படும் ஆபிரகாமிடத்தில்
நம்ரூது மன்னன் கேட்டான் 'நீ கூறும் கடவுள் எத்தகையவன் ?'.

'என் இறைவன் தான் நாடியதைச் செய்கிறான். உயிரில்லாதவற்றிற்கு
உயிர் கொடுக்கிறான், உயிருள்ளவைகளை மரணிக்கச் செய்கிறான்.'

உடனே நம்ரூது, சிறையிலிருந்து இருவரை அழைத்து வரச் செய்து,
அவர்களில் மரண தண்டனைக் கைதியை விடுதலை செய்து சில நாட்களில்
விடுதலையாக இருந்தவனைக் கொல்லுமாறு ஆணையிடுகிறான்.

இப்போது இப்ராகீமை நோக்கி,'பார்த்தாயா! நான் நாடியதைச் செய்தேன்.
ஒருவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்தேன் இன்னொருவனின் உயிரை
எடுத்தேன். ஆதலால் நானும் கடவுள்தான் என்று நம்புகிறாயா'.

'என் இறைவன், சூரியனைக் கிழக்கிலிருந்து உதிக்கச் செய்து மேற்கில்
மறையச் செய்கிறான், உமக்கு முடியுமானால் அதனை மாற்றிக் காட்டவும்'.

இதற்கு பதில் சொல்ல முடியாத நம்ரூது, இவரை நெருப்பிலிட்டுப்
பொசுக்குங்கள் என்று ஆணையிட்டான்.

ஆனால் நடந்தது என்ன ?
இப்ராகீம் நெருப்புக்குள் போடப்பட்டும் எரியாமல் தப்பித்து நீண்ட நாட்கள்
வாழ்ந்தார். நம்ரூது மன்னனோ செருப்படி வாங்கியே கேவலமாகச் செத்தான்.
செருப்பால் அடித்தால் மட்டுமே மண்டைக் குடைச்சலிருந்து சிறிது நேரம்
நிவாரணம் என்ற நிலை கண்டு செருப்பால் அடிப்பதற்காகவே சில
வேலைக்காரர்களை நியமித்திருந்தான்.

-------------------------------------------------------------------

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பொரு நாளில்,

மூஸா (அலைஹிஸ்ஸலாம்) என்கிற மோசஸிடம் 'நானல்லவா உனது
இறைவன் நீ வேறு யாரையோ இறைவன் என்றும் அவனுடைய தூதராக
உன்னைச் சொல்கிறாயே, அத‌ற்கு என்ன ஆதாரம்' என்று கேட்ட
பிர் அவுன் என்கிற பாரோ மன்னனுக்கு முன் தனது கைத்தடியை எறிந்த
போது அது பாம்பாக மாறிய்து. மேலும் மூஸாவின் கையிலிருந்து ஒரு
பிரகாசம் கிளம்பியது. இதைப் பார்த்த பிர்அவ்ன்,'பூ இவ்வளவுதானா,
மவனே உன்னை விட மேஜிக் தெரிந்தவர்கள் என்னிடத்தில்
ஆயிரக்கணக்கில் உண்டு' என்று எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட தனக்கு
விசுவாசமான மந்திரவாதிகளை அழைத்து வரச் செய்தான்.

அவர்களும் மூஸா செய்தது போலவே தமது கைத்தடிகளை எறிந்து
பாம்பாக மாற்றிக் காட்டினார்கள். இப்போது மூஸா(அலை) தமது
கைத்தடியை எறிந்தார்கள். அது மிகமிகப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பாம்பாக
மாறி எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மந்திரவாதிகளின் பாம்புகளை
விழுங்கி கபகளீகரம் செய்தது. இதனைப் பார்த்த மாத்திரத்திலேயே
ஆயிரக்கணக்கான மந்திரவாதிகளும் மண்ணில் விழுந்து இறைவனைப்
போற்றி மூஸாவின் கரம் பிடித்து இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
கடுங்கோபம் கொண்ட பிர்அவ்ன் முஸ்லிம்களைத் துரத்திக் கொண்டு
செல்லும் போது லட்சக்கணக்கான படைவீரர்களோடு நைல் நதியில்
மூழ்கிப் போனான். மூஸாவும் அவரை நம்பியவர்களும் இறை அருளால்
நைல் நதியைக் கடந்து வேறிடம் சென்று நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்.

-------------------------------------------------------------------

ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பொரு நாளில்,

அதிகாரத்தில் இருந்த ஒருவன், இறைவன் இருப்பதை தன் புத்திக்கு
எட்டுமாறு நிருபிக்க வேண்டும் என்றும் ஆனால் குர்ஆனிலிருந்தோ
ஹதீஸிலிருந்தோ எதுவும் சொல்லக்கூடாதென்றும் விட்ட சவாலை நுஃமான்
என்னும் வாலிபர் ஏற்றுக்கொண்டார். நிரூபிக்க நாளும் குறிக்கப் பட்டது.
ஆனால் அந்த நாளன்று நுஃமான் வர மிக மிகத் தாமதாகியது. கடைசி
நேரத்தில் வந்த நுஃமானிடம், தாமதம் பற்றிக் கேட்கப் பட்டது.

"சபையோர் மன்னிக்க, நான் வரும் வழியில் நதி ஒன்று உண்டு. ஆனால்
அதனைக் கடந்து வர படகு போன்று எதுவும் அங்கிருக்கவில்லை. என்ன
செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென அங்கிருந்த
மரத்திலிருந்து மரக்கிளைகள் ஒவ்வொன்றாகக் கீழிறங்கிப் பின் ஒன்றாகச்
சேர்ந்து படகாகியது. அதன் மூலமாக ஆற்றைக் கடந்து வந்தேன். படகு
உருவாவதில் மிக நீண்ட நேரம் பிடித்ததால் இங்கு வரத் தாமதமாகி விட்டது.

இந்தப் பதிலைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆகா, ஏதோ 'கிராக்'
அல்லவா வந்திருக்கிறது என்ற சந்தேகத்தோடு, 'ஏம்பா, உனக்கே இது
ஓவராத் தெரியலயா, எப்படி இதுவெல்லாம் தானா உருவாகும்? என்றார்கள்.
அதற்கு நுஃமான் புன்னகைத்தவாறே 'இதைத்தான் நானும் கேட்கிறேன்,
இந்தப் பூமி,வானம்,சூரியன்,சந்திரன்,கோள்கள்,நட்சத்திரங்கள்,மலைகள்,
கடல்கள்,மனிதர்கள்,விலங்குகள்,பறவைகள் இன்னும் எத்தனை
எத்தனையோ கண்ணுக்குத் தெரிந்த தெரியாத‌ ஜீவராசிகள் எப்படித் தாமாக
உருவாகியிருக்க முடியும். உங்களுக்கே இது ஓவராகத் தெரியவில்லையா !

இதற்குப் பதில‌ளிக்க முடியாமல் அடுத்தக் கேள்வியைக் கேட்டனர்.

'சரி, இறைவன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்,ஆனால் அவன் எங்கு
இருக்கிறான் ; எந்தப் பக்கம் அல்லது யாரைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்?"

இதற்குப் பதிலாக அனைவரையும் ஒரு இருட்டறைக்குள் அழைத்துச் சென்று,
விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி, 'இப்போது சொல்லுங்கள்,
இந்த ஒளி அல்லது வெளிச்சம் எங்கிருக்கிறது ; அது எந்தப் பக்கம் பார்த்துக்
கொண்டிருக்கிறது ?. ம், ஒரளவு புரிந்தது விட்டது. இனி அடுத்த கேள்வி
'இறைவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் ?.

"இதற்குப் பதில் தருவதற்கு முன் நீங்கள் என்னிடத்திற்கு இறங்கி வர
வேண்டும் ; நான் தங்களின் நாற்காலியில் அமர வேண்டும், சம்மதமா ?"

கேள்வி கேட்டவர் இறங்கி வர நுஃமான் நாற்காலியில் அமர்ந்து கொண்டு,
"இப்போது இறைவன் தங்க‌ளைப் பதவியிலிருந்து இறக்கி என்னை அந்தப்
பதவியில் அமர்த்தினான்".

பிறகு அனைவரும் மனம் (மதம்?) மாறியதைச் சொல்லவா வேண்டும்.

------------------------------------------------------------------

சில வருடங்களுக்கு முன் கம்யூனிஸம் தழைத்திருந்த நாளொன்றில்,

சவூதி அல்லது அதன் சகோதர நாட்டின் பள்ளிக்கூடம் ஒன்றின்
வகுப்பறையில் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஆசிரியர், மாணவர்களிடம்
வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு பொருளையும் சுட்டிக்காட்டி என்னவென்று
கேட்க, ஒவ்வொன்றின் பெயர்களையும் மாணவர்கள் சொல்லிக் கொண்டு
வந்தார்கள். கடைசியாக ஆசிரியர், "மாணவர்களே! இவையத்தனையும்
கண்ணால் காண்கிறோம்; அதன் பயன்களை அறிகிறோம். ஆனால்
இறைவன் என்று ஒன்றை நம்புகிறோமே அதனைக் கண்ணால் காண
முடிகிறதா அதன் பலன்களைப் பெற முடிகிறதா ? அத‌னால் இறைவன்
என்று ஒன்றும் கிடையாது; இதை யாராலும் மறுக்க முடியுமா ?" என்றார்.

அப்போது ஒரு மாணவன் எழுந்து நின்று "நம்ம வாத்தியாருக்கு மூளையே
கிடையாது; ஏனென்றால் அதனை நம்மால் காண முடியவில்லை".
இந்த பதிலால் வாத்தியும் மாணவர்களும் திகைத்துப் போனார்கள்.

--------------------------------------------------------------------

வரலாற்றின் ஏதோ ஒரு நாளில்,

மெத்தப் படித்த ஒருவன் தன்னிடம் 'இறையின் இருப்பை'ப் பற்றிய‌
மூன்று கேள்விகள் இருப்பதாகவும் அதற்குப் பதில் கிடைக்காத வரை
'இறை மறுப்பை'க் கைவிடப் போவதில்லை என்றும் எல்லா
அறிஞர்களிடமும் சென்று சவால் விட்டுக் கொண்டிருந்தான். அறிஞர்
ஒருவர் அவனிடம் அந்த மூன்று கேள்விகள் யாவை எனக் கேட்க,

1. இறைவன் உண்டா ? அப்படியிருந்தால் அவனை நீங்கள்
எனக்குக் காட்ட வேண்டும்.
2. 'விதி'யென்பது யாது ?
3. ஷைத்தான் நெருப்பால் படைக்கப் பட்டதாகவும் இறுதியில் நெருப்புக்
கங்குகளால் நிரப்பப்பட்ட நரகத்தைச் சென்றடைவான் என்றும்
இஸ்லாம் கூறுகிறதே ! நெருப்பு எப்படி நெருப்பால் படைக்கப்
பட்டவனுக்குத் தண்டனையாக அமையும் ?

சிறிது நேரம் யோசித்த அறிஞர், கேள்வி கேட்டவனுக்கு ஒரு அறை
கொடுத்தார். 'ஆ! என்று அலறியவனை நோக்கி 'வலிக்குதா!' என்று
கேட்க அவனும் கோபத்துடன் தலையசைக்க, 'வலிப்பது உண்மையானால்
அந்த வலியை எனக்குக் காட்டு' என்று அறிஞர் சொல்ல, 'அதெப்படி காட்ட
முடியும், வலியை உணரத்தான் முடியும்' என்றவுடன், 'இதுதானப்பா
உன்னுடைய முதல் கேள்விக்கு பதில், இவ்வுலகில் இறைவனைக்
காட்டவோ அல்லது பார்க்கவோ இயலாது; உணரத்தான் முடியும்.

'விதி' பற்றிய அடுத்த கேள்விக்கு, 'நான் உன்னை அடிக்கப் போவதை
முன்பே அறிவாயா' எனக்கேட்க அவன் இல்லையென்று தலையாட்டினான்.
"நீ மட்டுமல்ல, நான் உன்னை அடிக்கப் போகும் விஷயம் எனக்கும்
தெரியாது; ஆனால் இது இறைவனால் முன்பே எழுதப் பட்ட விஷயம்,
நாம் அறியாமலே நடந்தேறியிருக்கிறது, அது தான் 'விதி' என்பது.

அடுத்து என்னுடைய கையும் அடி வாங்கிய உன்னுடைய கன்னமும்
எதனால் ஆனவை. இரண்டுமே மண்ணால் படைக்கப் பட்டவை அல்லவா
இருந்தும் உனக்கு வலிக்கிறதே அது போலத்தான் ஷைத்தானுக்கும்
வலிக்கும், போதுமா :-‍) (இதற்கு மேல அவனால் என்ன சொல்ல முடியும்).

---------------------------------------------------------------------

இன்னும் எத்தனையோ சம்பவங்கள் கேள்வி பதில்களால்
நிரம்பியிருக்கின்றன. இருந்தும் இறை மறுப்பாளர்களாலும்
இணை வைப்போராலும் கேள்விகள் கேட்கப்பட்டுக்
கொண்டே.....யிருக்கின்றன. காரணம் 'தாம் நாடியவரை
நேர்வழியில் செலுத்துகின்றோம்' என்று அல்லாஹ் கூறுவதால்
'எல்லோருக்கும் நேர்வழி கிடைக்கும்' என்று எதிர்பார்க்க முடியாது.

டிஸ்கி 1 :
ஏண்ணா! அப்படீண்ணா கேள்வியே கேட்கக்கூடாதான்னு கேட்கப்படாது !

ஏன்னா, இந்தப் பதிவின் ஆரம்பத்தில் சொல்லப் பட்ட இப்ராகீம் அவர்களே
கேள்வி கேட்டவர்கள்தாம், ஆனால் அறிந்து கொள்ள வேண்டி தம்மைத்
தாமே கேட்டுக் கொண்டார்கள், ஆராயும் விதத்தில். இரவில் நட்சத்திரம்
மின்னுவதைப் பார்த்து 'இது இறைவனாக இருக்குமோ ? அதன் பின் வந்த
நிலவைப் பார்த்து, இல்லையில்லை, இதுதான் இறைவனாக இருக்கும்
என்று நம்பினார். பின்னர்,காலையில் சூரியனைப் பார்த்து 'ஓ, இதுதான்
பெரியது, இதுதான் இறைவன், மற்றதெல்லாம் மறைந்து விட்டன. பிறகு
சூரியனும் மறைந்த போது,'இறைவா! நான் உன் பக்கம் திரும்புகிறேன்.
எனக்கு நேர்வழி காட்டுவாயாக! என்று இறை ஞானம் கிடைக்கும் வரை
தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

டிஸ்கி 2 :
இவ்வளவு சொல்லியும் மனம் சமாதானம் அடையவில்லையா இறை
மறுப்புச் சகோதரர்களே! உங்களுக்குள் பின்வருமாறு சொல்லிப் பாருங்கள்
'முஸ்லிம்கள் சொல்வது போல் அப்படி ஒரு நீண்ட முடிவில்லாத
வாழ்க்கை இருந்து விட்டால் என்ன செய்வது ? '

வஸ்ஸலாம்.

Tuesday, July 06, 2010

டாப் டென்னா இல்ல நூத்துல ஒண்ணா


இல்லையில்லை,
'மனித கோடிகளிலே'
நம்பர் ஒண்ணு, இதை
நம்பாதவன் வாயிலதான் மண்ணு.


====================================================================




=====================================================================

'முகம்மது'க்கு அர்த்தமே புகழப்பட்டவர்.

இகழ நினைப்ப‌வர்களே வேறு வழியின்றி புகழ்ந்ததும்
அதையும் மீறி
இகழ்ந்தவர்கள் வாழ வழியின்றி
இருந்ததையும் இழந்து இழிந்தவர்களாகிப் போனதும்
இன்றல்ல நேற்றல்ல அது எக்காலத்திற்குமுள்ள விதி
அதை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது.

====================================================================

'உம்மி நபி' என்றாலே எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றுதான்
நினைத்தேன்/தோம். ஆனால் நாகூர் ஈ எம் ஹனீபா பாடியதைக்
கேளுங்கள்.

"பள்ளி சென்று படித்ததில்லை ; பாடம் ஏதும் கேட்டதில்லை
'சொல்லித்தரும் தகுதி' இந்த துன்யாவில் எவர்க்குமில்லை (பள்ளி)

'அல்லாஹ்வே ஆசிரியன்' ; அனைத்துமே ஆச்சர்யம்
சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் சேதிகளே
(ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா....)

(எழுதிக் கொடுத்த கவிஞருக்கு ஒரு ராயல் சல்யூட்)

====================================================================

தகுதி யாருக்கும் கிடையாது என்பதற்காக மட்டுமல்ல ; பிறபின்
இவருக்கு நான் தான் கற்றுக் கொடுத்தேன் என்று எவரும் உரிமை
கொண்டாடக் கூடாது என்பதற்காகவும் தான்.

நபியை ஏழு வானம் தாண்டி வரவழைத்தது கவுரவிப்பது மட்டும்
நோக்கமல்ல, எவனும் அல்லது எந்த விஞ்ஞானியும் விஞ்சக் கூடாது
என்பதற்காகவும் தான்.(இன்னும் இந்த அஞ்ஞானிகளால்
முதல் வானத்தையே கண்டு பிடிச்ச பாடில்லை)

நிலவுக்குள் காலடி வைத்தத‌ற்கே இந்தக் கொக்கரிப்பு எனில் தாம்
நின்ற இடத்திலிருந்தே நிலவைப் பிளந்து பின் சேர்த்தமைக்கு
என்ன சொல்றீங்கப்பூ !?.


சரி, சாதனைகளை விடுங்க, அதெல்லாம் நூத்துக் கணக்குல இருக்கு,
அவற்றைச் செய்து காட்ட நமக்கு மட்டுமல்ல எந்த மேஜிக்
வித்தைக்காரனாலும் முடியாது. ஆனா நாம கடைபிடிக்கத் தோதாக
எத்தனையோ நல்ல விஷயங்களை விட்டுச் சென்றுள்ளார்களே,
அதைப் பார்க்க வேணாமா.

ரெண்டு மூணு நல்ல கருத்துக்களைச் சொன்னதற்காக‌ பெர்னாட்ஷா
போன்ற அறிஞர்களைக் கொண்டாடுகிறோமே, நபிகள் நாயகத்தை நல்ல
மனதோடு (திறந்த மனதோடு) படிப்பதற்குத் தடையாக இருப்பது எது ?

PREJUDICE என்கிற, ஏற்கெனவே அவர்கள் மீதுள்ள வஞ்சமும்,கசடும்
அல்லது படித்தாலும் குறை காணும் நோக்கமேயன்றி வேறில்லை

போற்றுவார் போற்றட்டும் புழுதிவாறி தூற்றுவோர் தூற்றட்டும் என்று
இருக்க முடியவில்லை காரணம் மனம் தாங்க முடியவில்லை இந்த‌
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்.

புறக்கணிப்பும் புழுதி வாரி தூற்றுவதும்தான் நபிகளைப் பற்றிய நல்ல‌
விஷயங்கள் மாற்றாரிடத்தில் சென்றடைய‌வில்லை.

நபியுடைய மருமகன் ஹஜரத் அலீ (ரலி) அவர்களிடம் நாயகத்தைப் பற்றிக்
கேட்டபோது, 'முகம்மது(ஸல்)அவர்கள் கடுமையான தாகத்தின் ச‌மயத்தில்
கிடைத்த குளிர்ந்த நீரைப் போல் எங்களுக்குத் தெரிந்தார்கள்' என்று.

ஹஜரத் குபைப் (ரலி) அவர்களை இறை மறுப்பாளர்கள் தூக்கு மரத்தில்
ஏற்றி விட்டுக் கேட்டார்கள், தமது அரிப்பை அல்பத் தனமாகத் தீர்க்கும்
வண்ணம், 'உம்மை விட்டு விடுகிறோம், ஆனால் உமக்குப் ப‌திலாக
முகம்மதைக் கழுவிலேற்ற சம்மதிப்பீரா ? '.

குபைபிடமிருந்து உறுதியாக பதில் வந்தது. 'நான் வீட்டில் மனைவி
குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கும் நிலையிலும் நபியுடைய காலில்
முள் தைப்பதைக்கூட எங்களால் தாங்க முடியாது'.

----------------------------------------------

'ஹூம் ...

"என்று தெரியும் எங்கள், நபிகளின் தியாகம்
அன்று புரியும் இந்த அடிமையின் சோகம்"

நாயகத்தைப் புகழ்வதற்கு வாய்ப்பளித்த நண்பர்களுக்கு நன்றி.

இந்த நேரத்தில் இது கூட எழுதலன்னா ...

வலைப்பூ வைத்திருப்பதே வேஸ்ட்டு.