சிஷ்யனிடம், சிறிது நேரம் தோட்டத்தில் சென்று அமர்ந்து விட்டு வருமாரு
பணித்தார். சில மணி நேரம் கழித்து சிஷ்யனை அழைத்து விசாரித்தார்.
'குருவே,குறிப்பை அறிந்து கொண்டேன்; நான் பயணம் செல்ல வில்லை'.
'பொறு சிஷ்யா, அப்படி அங்கு என்னதான் கண்டாய் ? '
'கண் தெரியாத ஒரு குருட்டுப் பாம்பிற்கு உணவு கொண்டு வந்த
வண்ணமாய் இருந்த ஒரு பறவையைப் பார்த்தேன். இறைவனின்
கருணையை எண்ணி என் கண்கள் கலங்கின. பாம்பிற்கே பழம்
வார்க்கும் இறைவன் எனக்கும் வழங்காமலா போய்விடுவான்
என்ற ஞானம் கிடைத்தது,அதனால் செல்வம் சேகரிக்கச் செல்லும்
எண்ணத்தைக் கைவிட்டேன்'.
இதற்கு குரு சொன்ன பதில் ரொம்ப முக்கியமானது.
குருட்டுப் பாம்பாய் இருக்க ஏன் ஆசைப்படுகிறாய். மாத்தி யோசி நண்பா,
குருவியாக இருப்பதில் பெருமிதம் கொள். உனக்காக மட்டும் சம்பாதிக்க
எண்ணாமல் உன்னைச் சார்ந்தவர்களுக்கும், உடல் நலிவுற்றவர்களுக்கும்
சேர்த்துச் சம்பாதிக்கும் எண்ணத்துடன் செல்வாயாக ; சென்று வென்று
வருவாயாக. இறைவனருள் எப்போதும் உனக்கு உண்டு.
வியந்தவாறு நன்றி கூறி விடைபெற்றான் சிஷ்யன்.
===============================================
நம்ம மக்கள்ஸே இப்படித்தான், தனக்குத் தோதாக எதையும் எடுத்துக்
கொள்வது அல்லது தோதாக வளைத்துக் கொள்வது.
ஒரு முறை 'குடியின் கெடுதி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகக்
கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. SPIRIT அல்லது சாராயம் இருந்த
பாட்டிலுக்குள் ஒரு சில புழுக்கள் போடப்பட்டு, சில வினாடிகளில்
அப்புழுக்கள் துடிதுடித்து இறப்பதையும் காட்டப்பட்டு 'குடிப்பதால் சாவைச்
சந்திக்க நேரிடும்' என்றும் விளக்கப்பட்டது.
அப்போது கூட்டத்திலிருந்த 'குடிமகன்' ஒருவர் எழுந்து, 'ஏன் இப்படி
இருக்கக்கூடாது ? குடிப்பதால் வயிற்றினுள் தொல்லை கொடுக்கும்
புழு பூச்சிகளை அழிக்கலாமே ?
யே யப்பா என்னமா யோசிக்கிறாய்ங்க. :-)
===============================================
தத்து பித்துவம் அல்லது நகைத்துவம் ஒன்று
-----------------------------------------
"கடவுளை மற : மனிதனை நினை" என்று அன்று சொன்னவர்களுக்கு
இன்று
"தமிழை மற : தமிழனை நினை" என்று நினைவூட்டப்படுது பேஷ் பேஷ்